Pages

Saturday, October 22, 2011

சவுதியில் கருகிய இந்திய மலர்?..

மனிதன் எப்போது வாழ கற்றுக்கொண்டானோ அப்போதே பொறாமையும் பூசலும் கொண்டு ஒருத்தருக்கொருத்தர் சண்டையிட்டு மடிகின்றனர். இது தீருமா என்றால் தீராது. தன் தேவைகளையும் குடும்ப தேவைகளையும் நிவர்த்திசெய்ய மனிதன் உழைக்க கற்றுக்கொண்டான். உழைத்து பொருளீட்டி தன் சூழலை முன்னிலைப்படுத்துகிறான்.

திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழியை சும்மாவா சொன்னார்கள். சிலருக்கு அவரவர் உள்நாட்டிலே பொருளீட்டக்கூடிய சூழல் இருக்கும். இந்த வாய்ப்பைத் தேடி எத்தனை எத்தனையோ பேர் அயல்நாடு செல்கிறார்கள். அப்படி செல்கின்றவர்கள் அந்நாட்டு குடிமக்களால் பலவித இன்னல்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர். வெளிநாடுகளில் வாழும் ஒவ்வொரு இந்தியனும் படும் கஷ்டங்களை சொல்லி மாளா. இனவெறி தாக்குதல்கள் அளவுக்கு மீறிப்போய் சில சமயங்களில் உயிரையும் வாங்கிவிடும் சூழல் மிக கொடுமையிலும் கொடுமை. அந்த அளவுக்கு மனிதநேயம் அற்றிப்போய்விடுவது வருத்தமான ஒன்று.

இப்படியொரு சம்பவம்தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இங்கே நடந்துள்ளது. ஆம் கொலை!. இங்கே, ஒரு இந்தியனையே, இந்தியன் கொலை செய்து விட்டான்.

நாங்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் சுகைக் என்னுமிடத்தில் உள்ள பெட்ரோல் பல்கில் இந்தியர்களும், பங்காளி, மற்ற நாட்டுக்காரர்களும் அங்கே வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே மெஸ். அதாவது எல்லோரும் ஒன்றாக சமையல் செய்து சாப்பிட வேண்டும். தனித்தனியாக சமையல் செய்யமுடியாது. சென்ற ஆண்டு புதிதாக வந்த பாலக்காட்டை சேர்ந்த மலையாளியும் வேலை செய்துவந்துள்ளார். இவருக்கு, இங்கு சாப்பாட்டில் அதிகளவு காரம் இருந்துள்ளது. இவரும் சரி என்ன செய்ய என்று சாப்பிட்டு வந்துள்ளார்.

தினமும் காரமான சாப்பாட்டை மலையாளியால் சாப்பிட முடியவில்லை. அதனால் சமையல் செய்யும் உ.பி(உத்தர பிரதேசத்தை சேர்ந்தவன்)யிடம் "சாப்பாட்டில் காரத்தை குறைத்துக் கொள்; சாப்பிடமுடியவில்லை" என்று முறையிட்டு இருக்கிறார். அதற்கு உ.பி காரன் அதெல்லாம் முடியாது. சாப்பிட்டுதான் ஆகணும் என்றிருக்கிறான். தினமும் மலையாளி சாப்பாட்டில் காரத்தை குறைக்க சொல்லியிருக்கிறான். இதனால் உ.பி காரனுக்கு காழ்ப்புணர்ச்சி அதிகமாயிட்டே இருந்திருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன், அறையில் தூங்கிக் கொண்டிருந்த மலையாளியை உ.பி காரன் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான். சத்தம் கேட்டு அறைக்கு வந்த பங்காளி, இதை பார்த்து அலறி எல்லோரையும் அழைத்துள்ளான். எங்கே தன்னையும் இப்படி செய்துவிடுவானோ என்றெண்ணி உடனே அறைக்கதவை தாளிட்டு கபிலுக்கு (முதலாளிக்கு) போன் செய்து விசயத்தை தெரிவித்துள்ளான்.

உ.பி காரனை போலீஸ் பிடித்துக்கொண்டு போய்விட்டனர். இன்னும் இரண்டு நாட்களில் உ.பி காரன் தலையை வெட்டப்போகின்றனர்.

இந்த செய்தியை சில நண்பர்கள்மூலம் அறிந்தபோது மனது மிகவும் வேதனையானது.

என்ன கொடுமை?.. சே..! யாரும் செய்யத் துணியாத காரியத்தை எப்படி துணிச்சலாக செய்தான் என்றே தெரியவில்லை. இந்த அளவுக்கா கொடும் மனசுக்காரானா இருப்பான். எந்த அளவுக்கு முரடனா இருந்தால் இப்படி செய்திருப்பான்?.. கேட்கும்போதே மனது வேதனையிலும் வேதனையானது.

பாவம் அந்த மலையாளி!. மலையாளிக்கு 24 வயசுதான் ஆகுதாம். அடுத்த வருடம் ஊருக்கு சென்று திருமணம் செய்ய முடிவு செய்திருந்தானாம். அவனை நம்பிதான் அவன் குடும்பமே இருக்குதாம். இப்போது அவனை இழந்து தவிக்கும் அவனது குடும்பத்தாருக்கு யார் பதில் சொல்வார்?.. அதுவும் இந்த இளம்வயதிலே இப்படியொரு இழப்பு யாரால்தான் தாங்கிக்கொள்ள முடியும்?.. தாங்கவே முடியாத சோதனை.

இறந்து போன மலையாளியின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களும் இரங்கலையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


குடும்ப சூழ்நிலையின் காரணமாக, வெளிநாட்டுக்கு வந்து கஷ்டப்பட்டு உழைக்கும் எத்தனை எத்தனையோபேர் கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதிலும் இந்த சம்பவம் மிகக் கொடுமையானது. மலையாளி, அப்படியென்ன தவறு, பாவம் செய்துவிட்டான்?. சாப்பாட்டில் காரத்தை குறைக்க சொன்னதற்கு இப்படியொரு தண்டனை. ஒரு இந்தியனே மற்றொரு இந்தியனை கொலை செய்துள்ளது மனிதத்தன்மை அற்ற செயல்.

எங்கே போய்க்கொண்டிருக்கிறது உலகம்????.. வெளிநாட்டில் வாழும் இந்திய நண்பர்களே! இந்தமாதிரி ஆசாமிகள் உங்களருகில் இருந்தால் கொஞ்சம் கவனமாக இருங்க.

Post Comment

Monday, October 17, 2011

தமிழ்மணத்துக்கு ஒரு வேண்டுகோள்

அன்புள்ள நண்பர்களுக்கு,

கடந்த சில நாடகளாக பதிவுலகில் நடந்துவரும் தேவையில்லாத சர்ச்சைகளும் குழப்பங்களும் மனதுக்கு வேதனை அளிக்கிறது.

நேற்று சில நண்பர்கள் போனிலும் இமெயிலிலும் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை கேட்டபோது வருத்தமாக இருந்தது.
ஊரிலிருந்து வந்த எனக்கு இது புதிதாக இருந்தது. அப்படியென்ன என்று விசாரிக்கும்போது தமிழ்மண நிர்வாகி ஒருவர் பெயரிலி என்ற பெயரில் சக பதிவர் ஒருவரின் பதிவில் கீழ்தரமான கமெண்ட்களை பகிர்ந்துகொண்டது வருந்தத்தக்கது.

இந்த செயலுக்கு அனைத்து பதிவுலக நண்பர்களும் தங்கள் எதிர்ப்பினை காட்டியுள்ளனர். அது மிகப்பெரிய பிரச்சனையை கிளப்பியுள்ளது.

ஒரு சாதாரண மனிதன் பேச யோசிக்கும் கீழ்த்தரமான வார்த்தைகளை சர்வசாதாரணமாக பின்னூட்டங்களாக வெளியிட்டிருக்கிறார்(விபரம் கீழே).

**************

சில நாட்களுக்கு முன்பு terrorkummi என்னும் தளத்தில் தமிழ்மண நிர்வாகி இரமணிதரன் என்பவர் கூறிய கருத்து (அந்த கமெண்ட்டுக்களை காண இங்கே சுட்டவும்) மிகுந்த அதிர்ச்சியையும், முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டுவதாகவும் இருந்தது.


"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"


ஒரு திரட்டியின் நிர்வாகி பொறுப்பில் இருப்பவர் இப்படியான தரம் தாழ்ந்த கருத்தை கூறுவது மிகுந்த வேதனையளிக்கும் விசயம்.


இரமணிதரனின் இந்த செயல், இஸ்லாமிய போதனையை கேள்வி செய்வதாகவும், கொச்சைபடுத்துவதாகும் இருந்ததால், இதுக் குறித்து விளக்கம் அளிக்குமாறு தனி மெயில் ஒன்றை தமிழ்மண நிர்வாகத்திற்கு அனுப்பினோம். அந்த மெயில் சென்றடைந்ததும் இரமணிதரன் அவர்களைத் தான்.


அந்த மெயிலிற்கு பதிலளித்த ரமணிதரன், தனி நபரின் கருத்தை தமிழ்மணத்தின் கருத்தாக கருதி தமிழ்மணத்திற்கு மெயில் அனுப்ப வேண்டுமா என்றும், எனினும் இதனை தமிழ்மணத்தின் மற்ற நிர்வாகிகளின் கவனத்திற்கு அனுப்புவதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல், அந்த கருத்தை நீங்கள் உங்களை கேலி செய்வதாக ஏன் நினைக்கின்றீர்கள் என்றும் கூறியிருந்தார் (பின்பு பதிவுத்தோஷம் என்று எதனை குறிப்பிடுகின்றார் என்று தெரியவில்லை).


இதுநாள் வரை தமிழ்மண நிர்வாகிகளின் பதில் வரவில்லை. ஆகையால் இந்த விசயத்தை பொதுவில் வைக்கின்றேன்.


தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள். இஸ்லாமிய முகமனை கேலி செய்ததற்காக தமிழ்மணம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதனை அந்த தளத்திலேயே இரமணிதரன் கேட்டாலும் பரவாயில்லை.

--------------------

ஒரு தமிழ்மணத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் இந்தமாதிரி கீழ்தரமாக எழுதுவதை கண்டிக்காமல் இருந்தால் அது தமிழ்மணத்துக்குதான் கெட்டபெயர். அந்தமாதிரிதான் தமிழ்மணம் இதுவரை அந்த மேற்படி நபரை தட்டிக்கேட்காமல் மௌனம் சாதிப்பது மேலும் வேதனைக்குள்ளாக்குகிறது.

எந்த ஒரு தனிமனிதனாக இருந்தாலும் தனது மத கோட்பாடுகள், மொழி, பழக்கவழக்கங்கள் அவற்றை சார்ந்தே இருப்பான். இது ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும். அதேமாதிரி மாற்றுமத நண்பர்களின் கொள்கைகள், பழக்கவழக்கங்கள் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

இப்போது சிலர், அடுத்தவர்களின் மத, ஜாதி பிரச்சனையை கிளப்பிவிட்டு அவர்களுடைய மனத்தை புண்படுத்தும்படி பேசுவதோ, எழுத்தின்மூலமோ செய்து பெருகிவருகிறனர். நான் ஏற்கனவே கூறியுள்ளபடி,

எழுத்து என்பது நமது எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி.

தினமும் நூற்றுக்கணக்கான பதிவர்கள் தங்களுடைய படைப்புகளை வெளியிட்டுவருகிறார்கள். இதில் நிறைய புதியவர்கள் எழுத வந்திருப்பது மகிழ்ச்சியான விசயம். அவர்கள் இதையெல்லாம் பார்த்து ஏன்டா நாம் எழுதவந்தோம் என எண்ணி வருந்தும் அளவுக்கு நம்முடைய பதிவுகள் இருக்கக்கூடாது. காலத்தால் அழியாத படைப்புகளாக இருக்கவேண்டும். பிற்காலத்தில் நமது சந்ததியினர் திருப்பிப்பார்க்கும்போது நமது எழுத்துக்கள் அவர்களை ஈர்க்கவேண்டும்.

நாம் அனைவரும் நமக்கு தோன்றியதை எழுதிவருகிறோம். யாரும் இலக்கியமெல்லாம் படித்துவந்து எழுதவில்லை. அதற்காக, நம்முடைய வலைப்பூவில் இடுகைகள் கொச்சையாகவும் மோசமாக தாக்கியும் இருக்கக்கூடாது. பதிவு எழுதும்போது எழுத்தில் கவனமும் கண்ணியமும் இருக்கவேண்டும். அப்படி கீழ்த்தரமாக எழுதுபவர்களின் பதிவுகளை நாம் எட்டிக்கூட பார்க்ககூடாது.


தமிழ்மணத்தின் இந்த செய்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. நானும் எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன். உடனடியாக‌, இதற்கு தமிழ்மணம் விளக்கம் அளித்து தீர்வு காணவேண்டும்.

,

Post Comment

Sunday, October 16, 2011

தொடரும் ஆரம்பமும்...


தொடர்கதையாய் தொடர்ந்திடும்
வாழ்வினில் விடுகதையாய்
இந்த (இந்திய) பயணம்
சில மாறா நினைவலைகளோடு
உலா வருதே...!

உற்று நோக்கி நலம்பல விசாரித்து
விருந்தோம்பலுடன் உண்டுறங்கி
கருத்துக்களை பகிர்ந்து
மகிழ்ச்சியை வெளியாக்கிய தருணங்களை
மறந்தும் இருக்கமுடியுமா?..

அருகில் இருக்கும்போது
சொல்லத் தோன்றாதது
தூரத்தில் தெரியும்
ஒளியைப்போல பிரகாசமாய்
கவியுடன்கூடிய உணர்வுகள்
பொங்கி பீறிடுகின்றன!

உன் அருகாமையை எண்ணியெண்ணி
ஏக்கங்கள் வாட்டும்போது
நீ காட்டிய அன்பும் அரவணைப்புகளால்
மனம் லேசாகுகிறதே..!
இப்போது நீ அருகில் இருப்பது
மாயையைத்தான் என்றாலும்
மனம் அதை விரும்புதே!

விடை சொல்லத் தெரியாத‌
கேள்விகள் ஆயிரம் உண்டு
விடைகள் மட்டும் காணாமல்
போய்விட்டது..!
தேடல்கள் தொடரட்டும்...!

,

Post Comment

Sunday, October 9, 2011

மீண்டும் ஒரு பயணம் (சவூதி)

நேற்றுதான் சவுதியிலிருந்து கிளம்பி ஊருக்குச் சென்றது போல இருந்தது. இப்போது இங்கே வந்து நாட்களும் ஐந்தாகிவிட்டன. ஆம்! மீண்டும் சவுதி வாழ்க்கையில் இணைந்து வேலையிலும் ஐக்கியமாகியாச்சு.. ஊரில் உள்ள நினைவுகள் மட்டும் பிம்பமாய் என் மனத்திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ம்ம்ம்.......

எனது வலைப்பக்கத்துக்கு வருகை தந்து என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி நன்றி...

மீண்டும் என் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

ஸ்டார்ஜன்.

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்