Pages

Thursday, October 29, 2009

தாலாட்டு கேட்குதம்மா ...


தாலாட்டு கேட்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க . அது அன்னை நமக்காக இசைக்கும் ஒரு இனிய கீதம் .

தாயின் தாலாட்டில் ஒரு தாயின் அன்பு , பாச‌ம் , அர‌வ‌ணைப்பு எல்லாமே உண்டு . எத்த‌னை முறை கேட்டாலும் ச‌லிக்காத‌ ஒன்று .

தாலாட்டு , குழந்தைக்கு ந‌ல்ல‌ ஒரு வ‌ள‌ர்ச்சியை கொடுக்கும் .
குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் அல்லது தூங்கச் செய்யும் சூழலில் பொதுவாகத் தாயினால் தாலாட்டுப் பாடல் பாடப்படுகின்றது. "தால்" என்ற சொல்லுக்கு நாக்கு என்று பொருள். நாவினை ஆட்டிப் பாடுவதால் தாலாட்டு என்று பெயர் பெற்றது. தாலாட்டு பேச்சு வழக்கில் ரோராட்டு, ஆராட்டு, ராராட்டு, ஓராட்டு, தாராட்டு என்றெல்லாம் வழங்கப்படுகின்றது. இவை நாவினை ஆட்டிப் பாடும்போது எழும் ஒலியால் பெற்ற பெயர்கள்.


பாடலமைப்பாலும், பொருண்மையாலும், பாடப்படும் சூழலாலும் தாலாட்டினைத் தனி வகையாகக் கருதலாம். இதனைக் குழந்தையின் தாய், பாட்டி, அத்தை, சகோதரி, செவிலி முதலியோர் பாடுவர். ஆண்கள் தாலாட்டுப் பாடுவதில்லை. விதிவிலக்காகச் சில நேரங்களில் பாடுவதுண்டு.

தாலாட்டுப் பாடல்களின் பொருள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது :

1. குழந்தை 2. அதற்கு வேண்டிய சாதனங்கள் 3. உறவினர்கள்

1. குழந்தையை மையப் பொருளாகக் கொண்ட பாடல்களின் விவரங்கள்:

அ. குழந்தையின் அழகு, அருமந்தத்தன்மை (அருமருந்தன்ன தன்மை), எதிர்காலம் இவற்றைப் பாராட்டல்.
ஆ. குழந்தையைப் பெறத் தாய் செய்த நோன்பு.

2. சாதனங்களை மையமாகக் கொண்ட பாடல்களின் விவரங்கள்:

அ. சாதனங்களின் அழகு, வேலைப்பாடு ஆகியவற்றைப் பாராட்டல்.

ஆ. அந்தச் சாதனங்களைச் செய்தவர்களுக்கும் பரிசாக அளித்தவர்களுக்கும் நன்றி கூறல்.

3. உறவினர்களை மையமாகக் கொண்ட பாடல்களின் விவரங்கள்:

உறவினர்களின் செயல் வீரத்தை, ஈகைத் திறனை, சொல் வளத்தைப் பாராட்டல். இப்பொருள்களும் அவற்றின் உட்கூறுகளும் தாலாட்டுப் பாடல்களுக்குரிய அடிப்படையான கருத்துகளாகின்றன.

நாட்டுப்புறப் பாடல்களுள் தாலாட்டுப் பாடல் வடிவம் அனைத்துச் சாதி மக்களிடமும் காணப்படுகின்றது. இன்றைய நிலையில் தாலாட்டுப் பாடுவது அருகி வருகின்றது. எதிர்காலத்தில் இப்பழக்கம் மறைந்து விடவும் வாய்ப்புள்ளது.

பின்வரும் பாடல் குழந்தையை மையமாகக் கொண்ட தாலாட்டுப் பாடல் ஒன்றின் ஒரு பகுதி ஆகும். குழந்தையின் அருமையை, அது தனக்கு எத்தகைய இனிமையானது என்பதைத் தாய் மகிழ்ந்து பாடுகிறாள்.

ஆராரோ ஆரிராரோ - என் கண்ணே
ஆரிராரோ ஆராரோஎன் கண்ணே
நவமணியே - என் அப்பா நீ
கல்கண்டு சர்க்கரையோ என் தேனோ
தினைமாவோ - என் கண்ணே நீ
தெகுட்டாத தேங்கனியோ என்
வெள்ளி நிலவோ நீ -
என் தம்பிய வெளிச்சமுள்ள பால்நிலவோ
என் காய்க்கப்பட்ட தோப்புலியும் -
என் தம்பிய நீ தனியப்பட்ட என் மாங்கனியோ.

[தெகுட்டாத - திகட்டாத; தோப்புலியும் - தோப்பிலேயும்]

[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி - 1; பக் - 112, 113]

குழந்தைக்குரிய கருவிகள் அவற்றைக் கொடுத்தோர் பற்றிய விவரங்கள் இடம்பெறும் தாலாட்டு :

பால் குடிக்கக் கிண்ணி பழந்திங்கச்
சேணாடு நெய் குடிக்கக் கிண்ணி
முகம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி கொண்டு வந்தான் தாய்மாமன் .

(நா. வானமாமலை, 1964, ப. 82)

குழந்தையைத் தாலாட்டும் போது அதன் உறவினர்கள் - குறிப்பாகத் தாய் மாமன் பெருமையைச் சொல்லித் தாலாட்டும் பாடல்கள் பல உண்டு.


செக்கச் சிவப்பரோ - உங்க மாமா
சீமைக்கோர் அதிபதியோ அழகு
சிவப்பரோட - ஐயா நீ
அருமை மருமகனோ ? ....
முத்தளக்க நாழி முதலளக்கப்
பொன்னாழி வச்சளக்கச்
சொல்லி வரிசையிட்டார் தாய்மாமன் .

(நா. வானமாமலை, 1964, பக். 90-91)


அன்னைக்கு நிக‌ர் அன்னையே ....

ஸ்டார்ஜ‌ன்

Post Comment

Monday, October 26, 2009

ஆதவன் - விமர்சனம்

ஆத‌வ‌ன்


வேலைப்பளு காரணமாக என்னால் பதிவு எழுத முடியவில்லை . ‌சமீபத்தில் அண்ணன் உண்மைத்தமிழன் வலைப்பதிவில் ஆதவன் திரைப்பட விமர்சனம் பார்த்தேன் . அதில் வடிவேலு தான் ஹீரோ என்று எழுதியிருந்தார் . எனக்கு சிரிப்பாக இருந்தது .


அப்படி என்ன தான் படத்துல இருக்குது என்று நேற்றுதான் படம் பார்த்தேன் .


அட ஆமா !! உண்மைத்தமிழன் உண்மையைத்தான் சொல்லிருக்காரு .


இப்ப படத்தோட கதைக்கு உள்ளே போவோமா ....



பிறப்புலேயே கடத்தல் ,கொள்ளை ,கொலை என்று தப்பான வளர்ப்பால் உருவாகிறார் நம் சூர்யா . நீதிபதியாக வரும் மலையாள முரளி வீட்டில் சமையல்காரர் நம் வடிவேலு .


குழந்தைகளின் உடலுறுப்புக்களைத் திருடி விற்கும் ஒரு கும்பலைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பு நேர்மையான நீதிபதி முரளியிடம் வருகிறது. உடனே அதில் சம்பந்தப்பட்ட ஒரு பிராடு டாக்டர், நீதிபதியைக் கொல்லத் திட்டமிட்டு, கூலிக்கு கொலை செய்யும் சூர்யாவை அனுப்பி வைக்கிறார்.


முரளி வீட்டுக்கு செல்லும் சூர்யா , முரளியை கொல்ல திட்டமிட்டு , எல்லோர் மனதிலும் இடம்பிடிக்கிறார் . பிறகு தான் தெரிகிறது முரளியின் மகன் சூர்யா என்று . தன் தந்தையை கொன்றாரா இல்லை கடத்தல் குமபலை பழி வாங்கினாரா .... என்பதை படம் பாக்காதவங்க படம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க .



சூர்யா ஒவ்வொரு தடவையும் முரளியை கொல்ல நினைக்கும் போது காமெடியில் முடிகிறது . அதுவும் வடிவேலுகூட அடிக்கும் லூட்டி இருக்கிறதே அப்பப்பா ...


பத்து வயது கெட்டப்பில் ரொம்ப மெனக்கெட்டு நடித்திருக்கிறார் சூர்யா .
இந்த படத்தில் பாராட்டபட வேண்டியவர் வடிவேலுதான் . வடிவேலு காமெடி இந்த படத்தில் ரொம்ப சூப்பர் . நாம் திரை அரங்கை விட்டு ஓடாமல் இருக்க நம்மை பெவிக்கால் போட்டு ஒட்டி விட்டார் .


படத்தின் மூவாயிரத்து சொச்சம் மீட்டரிலும் வைகைப்புயலின் ராஜ்ஜியம்தான் கொடிகட்டி பறக்கிறது.


தனது மச்சான் சத்யனுக்கு பதிலாக வீட்டுக்குள் நுழைந்துவிடும் ஹீரோவை வெளியேற்ற இவர் பாடுபடுவதும், அது நடக்காமல் போகும் போதெல்லாம் அரற்றி அழுவதுமாக செம களேபரம். அதிலும், சரோஜாதேவியை அவர் கிண்டலடிக்கும் போதெல்லாம் செம சூப்பர் .


ஒவ்வொரு முறை ஹீரோ நீதிபதியை கொல்லப் போகும்போதெல்லாம் பதறுகிற வடிவேலு, ஒருகட்டத்தில் தானே கொலை செய்ய ஐடியா கொடுத்துவிட்டு நாக்கை கடித்துக் கொள்கிறாரே, செம கிளாப்ஸ்...


கைகுலுக்க வேண்டிய இன்னொருவர் நம்ம சரோஜாதேவிதான். 'அன்று வந்ததும் அதே நிலா' பாட்டுக்கு அவர் காட்டும் அபிநயம், காலம் கடந்து கம்பீரமாக நிற்கும் அதிசயம்!


அந்த‌ கொஞ்சும் த‌மிழ் ரொம்ப சூப்ப‌ர் ஆனாலும் இது ஓவ‌ர் .


இந்த‌ ப‌ட‌த்தோட‌ ஹீரோயின் ந‌ய‌ன்தாராவாம் . பாட‌ல்க‌ளில் க‌ல‌ர்கல‌ராக‌ வ‌ரும் ந‌ய‌ன்தாராவுக்கு வேலையே இல்லை . ஆயில்மேக்க‌ப்பும் அவ‌ரும் !! ச‌கிக்கலை . பாத்துங்க‌ அம்ம‌ணி , ம‌க்க‌ள் ம‌றந்துறாம‌ பாத்துக்கோங்க‌ ...


ஆனந்தபாபுவுக்கு ந‌ல்ல‌ ரோல் கொடுத்திருக்காங்க‌ . நல்ல‌ ந‌டிப்பு .


இசை ஹாரிஸ் ஜெய‌ராஜ் . பாட‌ல்க‌ள் அதே மெட்டு தான் என்றாலும் , கேட்ப‌த‌ற்கு ஓகே . ஆனால் பிண்ண‌னி இசை ப‌ட‌த்துக்கு பொருந்த‌வில்லை .


ஒளிப்பதிவாளர் ரா.கணேஷ்ன் ஒளிப்ப‌திவு சூப்ப‌ர் .


க‌தை ர‌மேஷ்க‌ண்ணா .


இய‌க்க‌ம் கே எஸ் ர‌விக்குமார் . க‌ம‌ர்சிய‌ல் ஹிட் கொடுக்க‌ முய‌ற்சித்திருக்கிறார் .


ஆத‌வ‌ன் , ர‌ஜினியின் தாய்வீடு பட‌த்தை ஞாபக‌ப‌டுத்தியிருந்தாலும் வ‌டிவேலு காமெடிக்காக‌ பார்க்க‌லாம் .


ஆத‌வ‌ன் - பெட்ரோமாக்ஸ் லைட்


ஸ்டார்ஜ‌ன்



Post Comment

Saturday, October 17, 2009

தரவரிசை - தீபாவளி வாழ்த்துக்கள்

என் இனிய வலையுலக நண்பர்களே !!

உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .

நான் இங்கே சில கலைநயமிக்க படங்களை தந்துள்ளேன் . உங்கள் மனதுக்கு பிடித்தமாதிரி தர வரிசை படுத்துங்கள் .

1 .









2 .


3 .


4 .





5 .











6 .






7 .






8 .




9 .


10 .






ஸ்டார்ஜன்




















Post Comment

Thursday, October 15, 2009

அட இது உண்மையோ உண்மை ...


போக்குவரத்து எவ்வளோ இப்போ பெருகிருச்சு . பயண நேரமும் கம்மியாயிருச்சு ! .


விமான பயணமே ஒரு ஜாலி தான் . ஒரு அலுப்பும் இல்லாமல் சொகுசாக நாம போக வேண்டிய இடத்துக்கு சீக்கிரம் போயிரலாம் . நல்ல ஜாலியா இருக்கும் .


ஆனால் நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது நினைத்து பார்ப்பேன் . நாமளும் ஒரு நாள் பிளைன்ல போகணும் என்று .


அதை இறைவன் இப்போ தான் நிறைவேத்தி தந்திருக்கான் . ஆமாம் ! நான் நாலு வருசத்துக்கு முன்னாடி முதல் முறையாக சவுதி அரேபியாவுக்கு பயணப்பட்டேன் .


அப்போ நான் புதியதால் எல்லோரும் அதை பற்றிய விழிப்புணர்ச்சி கொடுத்தனர் . அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும் என்று .


நான் எல்லோரிடமும் விடைபெற்று கனத்த இதயத்துடன் ஏர்போர்ட்டு உள்ள போயிட்டேன் .


அங்கே லக்கேஜ் வெயிட் போட்டு , போர்டிங் பாஸ் வாங்கிவிட்டு இமிக்ரேசன் முடிந்து விட்டது .


அதற்கு அடுத்து பாதுகாப்பு செக்கிங் . பாதுகாப்பு செக்கிங்கில் செக் பண்ணும் போது மெட்டல் டிடக்டரில் ஒலி வருகிறது . என்ன இது என்று கேட்டார் ஆபிஸர் . நான் ஒண்ணும் இல்லையே என்று பேண்ட் பெல்ட்டை கழட்டினேன் .


மறுபடியும் ஒலி வருகிறது . என்ன இது என்று பார்க்கும் போது , என் பேண்ட் பாக்கேட்டில் 5 ரூபாய் நாணயம் ஒன்று கிடந்தது . அப்பாட .. அதுக்கப்பறம் தான் பெருமூச்சு வந்தது .


இதுக்கே இப்படின்னா நெற்றிக்கண் படத்துல ரஜினிகாந்த் அணிந்து வருவாரே எகஸ்ரே கண்ணாடி அதுமாதிரின்னா என்ன ஆகும் .


அந்த படத்துல சொன்னது உண்மையோ பொய்யோ தெரியாது . ஆனா இது இப்போ உண்மையாகிடும் போல !


என்ன பாக்குறீங்க அட உண்மையோ உண்மை !!!



விமான நிலைய பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையிலும், பரிசோதனை ஊழியர்களின் பணியை இலகுவாக்கும் வகையிலும், பயணிகளை நிர்வாணமாக காட்டும் ஸ்கேனர்களை வைத்துள்ளனராம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் விமான நிலையத்தில்.


இந்த எக்ஸ்ரே ஸ்கேனர் முன் ஒருவர் நின்றால் அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் அது காட்டிக் கொடுத்து விடுமாம்.


ரேபிஸ்கேன் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் இந்த எக்ஸ்ரே சாதனத்தை உருவாக்கியுள்ளது. இந்த சாதனம் முன் நிற்கும் யாரையும் அது நிர்வாணமாக ஸ்கேனர் கருவியில் காட்டும். அத்தோடு நில்லாமல், மார்பகப் பெருக்க அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதைக் கூட அது காட்டிக் கொடுத்து விடுமாம்.


மேலும், செயற்கையான கால்கள், கைகள், உடலில் போடப்பட்டுள்ள துளைகள், பயணிகளின் அந்தரங்க உறுப்புகள் என அத்தனையையும் அக்கு வேறு ஆணி வேறாக காட்டிக் கொடுக்குமாம்.


கருப்பு வெள்ளையில் தெரியும் இந்த நிர்வாண ஸ்கன் படத்தை ஒரே ஒரு அதிகாரி மட்டுமே பார்ப்பாராம்.



இதுகுறித்து மான்செஸ்டர் விமான நிலைய வாடிக்கையாளர் பிரிவு தலைவர் சாரா பாரட் கூறுகையில், இந்தப் படம் பாதுகாத்து வைக்கப்படாது. படம் எடுக்கப்பட்டவுடன் அதை ஆய்வு செய்து பின்னர் அழித்து விடுவோம்.
பெரும்பாலான பயணிகள், உடல் முழுவதையும் தடவி சோதனையிடுவதை விரும்பவில்லை. அது தங்களது அந்தரங்கத்தில் தலையிடும் செயலாக உணர்கிறார்கள். எனவே இந்த ஸ்கேனர் யாரையும் தொடாமல் அவர்களுடைய உடலில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை அறிய உதவும். யாரையும் இனிமேல் உடைகளை கழற்றச் சொல்லி சோதனை போடத் தேவையில்லை.



இந்த ஸ்கேனர் மூலம் கிடைக்கும் படங்கள் ஆபாசமானவையாக இருக்காது. மேலும் இவற்றை நாங்கள் எங்குமே ஸ்டோர் செய்து வைக்கப் போவதும் இல்லை. எனவே பயணிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது.



இருப்பினும் இந்த சோதனை வேண்டாம், உடலைத் தழுவி சோதனையிடுங்கள் என்று பயணிகள் கூறினால் அதையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்றார்.


தற்போது சோதனை ரீதியாக இந்த நிர்வாண ஸ்கேனரை வைத்துள்ளனராம். விரைவில் இது நிரந்தரமாக வைக்கப்படுமாம்.



என்ன நண்பர்களே !!! பாத்து உசாரா இருந்துகோங்க !! இல்ல பாத்துருவாங்க !!


ஸ்டார்ஜன்

Post Comment

Saturday, October 10, 2009

அடிதடி ரோசா ...

இன்று காலை வந்தவுடன் தமிழ்மணம் பார்த்தேன் . மிகவும் அதிர்ச்சியான செய்தியை அறிந்து வேதனைக்குள்ளானேன் . அது எனது மதிப்பிற்குரிய பதிவர் ஜியோவ்ராம் சுந்தரை தாக்கிய செய்தி . சே ஏன் இப்படியெல்லாம் நடக்குது !! .


எப்படி இதெல்லாம் நடந்தது என அறிய ஜியோவ்ராம் சுந்தர் பதிவில் பார்த்து மனம் வேதனையானது .

ஐயா ரோசாவசந்த் , நீங்களும் பெரிய பதிவர் . சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உள்ளவர் .ஜியோவ்ராம் சுந்தர் சாரும் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உடையவர் . அப்புறம் ஏன் இந்த பொறாமை ? .


நயவஞ்சகமாக பேசி அழைத்து இப்படி தாக்கி இருக்கிறீர்களே . இந்த செயலுக்கு என் மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் .

மேலும் விவரங்களுக்கு பதிவர் ஜியோவ்ராம் சுந்தர் பதிவில் பார்க்கவும் .

Post Comment

Friday, October 9, 2009

அழகாய் பூ பூத்ததே - தொடர்பதிவு


எனது அருமை நண்பர் நையாண்டி நைனா அவர்கள் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார் . அவர் அழைத்து ஒரு வாரத்துக்கும் மேல் ஆகி விட்டது .
பதில் பதிவு போட நாட்கள் ஆகி விட்டன .

அழகு , காதல் , பணம் , கடவுள் , இதை பற்றி எழுத சொல்லி இருந்தார் .

அழகு

அழகு என்ற வார்த்தையே ஒரு அழகு தான் . அழகாய் இருப்பதெல்லாம் அழகு தான் .

காதல்

காதல் , ஒவ்வொரு மனிதனையும் கடந்து போகின்ற ஒரு மெல்லிய நூலிழையை போன்றது . காதல் , ஒரு மனிதனின் வாழ்வில் ஏறபடுகின்ற திருப்புமுனை .

காதல் உங்களுக்குள்ளும் உண்டு , எனக்குள்ளும் உண்டு .காதல் இல்லாமல் யாரும் இருக்க முடியாது .

பதினெட்டு வயசுல வர்றது மட்டும் காதல் இல்லை . எல்லா வயதிலும் வரும் .

காதல் பல வகை உண்டு .

கண்டதும் காதல் , பார்க்காத காதல் , இணைய காதல் , ஒரு தலைக்காதல் , நிச்சயதார்த்த காதல் , கல்யாணமான பிறகு வரும் காதல் , சிறுவயது காதல் , வயதான பிறகு வரும் காதல் இப்படி ஏகப்பட்ட காதல்கள் இந்த அவனியிலே உண்டு .

பணம்

பணம் , இன்றைய சூழ்னிலையில் ஒருவனுடைய தகுதியை நிர்ணயிக்ககூடியதா உள்ளது .

என்ன செய்வது பணம் இல்லையென்றால் எதுவும் இல்லை என்ற சூழ்னிலையில் இருக்கிறோம் .

கடவுள்

இந்த வலைஉலகுக்கு வந்த பின் எனக்கு நிறைய நண்பர்களை தந்த இறைவனுக்கு என் நன்றிகள் .

என் எழுத்து திறமையை வளமாக்கி தந்த என் இறைவனுக்கு நன்றிகள் .

கடைசியா ஒரு சின்ன கவிதை

உன் முதல் பார்வையே தோன்றியது அழகாய் !
நானும் நீயும் காதல் என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்தினோம் !!
நம் வாழ்வு சிற‌க்க தேடினேன் பணத்தை ஒரு வேலையின் மூலம் !!!
நம் இல்லறத்தை நல்லறமாக்கிய இறைவனுக்கு நன்றிகள் !!!! .

ஸ்டார்ஜன்

Post Comment

Tuesday, October 6, 2009

ஹைய்யா ரயில் வந்தாச்சு ....

ரயில் எல்லோருடைய மன‌திலும் ஒரு நீங்காத இடம் பிடித்துள்ளது . சிறுவர் முதல் பெரியவர் வரை ரயிலைப் பாத்தவுடனே குதூகலிப்பாங்க .

ரயில்ல ஏறி உக்காந்தவுடன் தடக் தடக் என சத்தத்துடன் புகையை விட்டுக் கொண்டே போகும் போது ரொம்ப ஜாலியா இருக்கும் . முகம் தெரியாத ஆளுடன் ஒரு நட்பு கிடைக்கும் பாருங்க . ரயில் சினேகிதம் , பேசிட்டு போக ஜாலியா இருக்கும் .

நான் சில வருடங்களுக்கு முன் , ஒரு வார இதழில் ( ஆனந்த விகடனோ , குமுதமோ ) ஒரு கதை படித்தேன் .

அதாவது , வயதான ஒரு கணவனும் ஒரு மனைவியும் அவங்க மகளை பாக்க பாம்பேயிலிருந்து டெல்லிக்கு போறாங்க . அவங்க மகன் ஜனசதாப்தி ரயிலில் ஏத்தி விட்டுறாரு .

இந்த அம்மாவுக்கு ,புதிய அனுபவமா இருக்கு . யார்ட்டேயும் பேசமுடியல . ஏ சி கோச் . அவங்க கணவனிடம் புலம்பிக்கிட்டே வாராங்க . இதை பாத்துக்கிட்டே இருந்த , பக்கத்துல இருந்த சிங் அந்தம்மாக்கிட்ட பேச்சுகொடுத்துக்கிட்டே வாராரு.

அவர் (சிங் )தமிழ் குடும்பம் என்றும் , தனக்கு பெண் தேடுவதாகவும் , அந்தம்மாக்கிட்ட சொல்றாரு . உடனே , இவங்க தனக்கு , சொந்தத்தில் ஒரு பெண் இருப்பதாகவும் ; இப்படியே பேசிக்கிட்டயே வராங்க . பக்கத்துல இருந்த அந்தம்மாவுடைய கணவர் கேட்டுகிட்டே வாராரு.


டெல்லியும் வந்தாச்சு . எல்லோரும் இறங்கிட்டு இருக்காங்க . இந்தம்மா , அந்த சிங் ஆளிடம் , உங்க அட்ர‌ஸ் கொடுங்க , பொண்ணு பாக்க வரச்சொல்ல ஏற்பாடு பன்ணலாம் என்று கேட்கிறாங்க .


உடனே அந்த சிங் , எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிட்டது . எனக்கு பூர்வீகம் சண்டிகர் தான் . தமிழ்காரங்க யாரும் தெரியாது . நீங்க , உங்க கணவர்கிட்ட புலம்பிக்கிட்டதாலே உங்கக்கூட பேசிக்கிட்டே வந்தேன் . ஒகே , வருகிறேன் என்று சொல்லி கிளம்பினார் அந்த சிங் .


இந்தம்மாவுக்கு முகத்துல அசடு வழிந்தது . இதை பார்த்த அவங்க கணவருக்கோ சிரிப்பை அடக்க முடியல .
-----------------------------------------------------

எனக்கு , எங்க ஊர் வழியா போகும் திருநெல்வேலி கொல்லம் ரயில் தான் தெரியும் . அப்ப ஜாலியா இருக்கும் ஏ ரயில் போகுதே ! என்று . நான் முதன்முதலில் ரயிலில் பயணம் செய்தது மதுரையிலிருந்து திருநெல்வேலி வரும்போது .

இப்ப ரயில்ல எவ்வளோ முன்னேற்றம் பாருங்க .

எத்தனை வசதியில்லாம் வந்துட்டது .

ஆடம்பரமான மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில், மும்பை - டில்லி இடையே, அடுத்தாண்டு, ஜனவரி முதல் இயக்கப்படுகிறது.

அனைத்து வசதிகளுடன் கூடிய, ஆடம்பரமான மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், குளிர்சாதன வசதிகள் கொண்ட, 23 பெட்டிகள் இருக்கும்.

இந்த ஆடம்பர ரயில், அடுத்தாண்டு ஜனவரி முதல், மும்பை - டில்லி இடையே இயக்கப்படும்.




இந்த ரயிலில், இரு உணவகங்கள், மதுபான பார், லைவ் 'டிவி'க்கள், தொலைபேசி, இன்டர்நெட் வசதிகள் என, அனைத்து வசதிகளும் உள்ளன. அடுத்தாண்டு, ஜனவரி 9ம் தேதி முதல், மும்பை சத்ரபதி சிவாஜி முனையத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த ரயில், வதோரா, உதய்பூர், ஜோத்பூர், பிகானீர், ஜெய்ப்பூர், ரத்தம்போர் மற்றும் ஆக்ரா ரயில் நிலையங்கள் வழியே இயக்கப்படும்.

ஜன., 17ம் தேதி டில்லியிலிருந்து கிளம்பும். இந்த ரயிலில், 88 வெளிநாட்டு பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். இதில், பிரசிடென்ஷியல் அறைக்கு, ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 75 ரூபாயும், சாதாரண சூட்டுக்கு 66 ஆயிரத்து 682 ரூபாயும், டீலக்ஸ் அறைக்கு 42 ஆயிரத்து 867 ரூபாயும், ஜூனியர் அறைக்கு 38 ஆயிரத்து 104 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


இதற்கேற்ப, ஒவ்வொரு ரயில் பெட்டியிலும், அறைகள் வித்தியாசமாக அமைக்கப்படுகின்றன. ஆடம்பர ரயிலை, இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்டு டூரிசம் கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி.,) யும், காக்ஸ் அண்டு கிங்ஸ் என்ற தனியார் சுற்றுலா நிறுவனமும் இணைந்து அமைத்து வருகின்றன. இந்த ரயில், மும்பை - டில்லி - மும்பை மற்றும் டில்லி - கோல்கட்டா - டில்லி மார்க்கங்களில் இயக்கப்பட உள்ளது.

டில்லி - கோல்கட்டா பாதையில் இயக்கப்படும் ரயில், ஆக்ரா, குவாலியர், கஜுராஹோ, வாராணாசி, கயா வழியாக இயக்கப்படும். இந்த ரயிலின் அறிமுக தினத்தில் பயணம் செய்ய, ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், 'புக்கிங்' செய்துள்ளனர். மகாராஜா எக்ஸ்பிரஸ், அக்., முதல் மார்ச் மாதம் வரை, இந்த பாதைகளில் இயக்கப்படும். பிற மாதங்களில், சார்ட்டர்டு சர்வீஸ் ஆக இயக்கப்படும் என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.

நம் நாடு எவ்வளோ முன்னேறி இருக்கிறது பாருங்க‌ ...

ஸ்டார்ஜன்


Post Comment

Monday, October 5, 2009

இது நல்லாருக்கா - சொல்லுங்க ...


பாகிஸ்தான் - இந்தியா பிரச்சனைக்கு அளவே இல்லாமல் போய் விட்டது .
இந்தியா - பாகிஸ்தான் இடையே , சமீபத்தில் நிறைய பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகிறது .

சமீபத்தில் பா.ஜ.க தலைவர் ஜஸ்வந்த் சிங் , பாகிஸ்தான் தலைவர் ஜின்னா அவர்களை பத்தி ஒரு புத்தகம் வெளியிட்டார் .

அந்தப் புத்தகத்தில் ஜின்னா மதச் சார்பற்றவர் என்றும், இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு அன்றைய காங்கிரஸ் கட்சியே காரணம் என்றும் பொருள்படும் வகையில் எழுதியுள்ளாராம். அதனால் பா.ஜ.க. அவரை கட்சியில் இருந்து வெளியேற்றியுள்ளது. நரேந்திர மோடியின் குஜராத் அரசு இன்னும் ஒரு படி மேலே சென்று புத்தகத்தையே தடை செய்துள்ளது.

இப்போது இன்னொரு சர்ச்சை கிளம்பியுள்ளது . அது என்னவென்றால் :

பாகிஸ்தானின் முதல் தேசியகீதத்தை இயற்றியவர் ஒரு இந்து என்று, பத்திரிகையில் கட்டுரை வெளியானதை அடுத்து, புது சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தியாவில் இருந்து பிரிந்தது பாகிஸ்தான்; 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைய, மூன்று நாட்களுக்கு முன் நாட்டின் தலைவர் முகமது அலி ஜின்னா, லாகூரைச் சேர்ந்த உருது கவிஞர் திலக்சந்த் மக்ரூம் என்பவரது மகன் ஜகன்னாத் ஆசாத்தை பாக்., தேசிய கீதத்தை எழுதும்படி கூறினார்.

அதன்படி, ஆசாத் உருது மொழியில் தேசிய கீதத்தை இயற்றினார். "அயி சர்சாமேனே பாக் சர்ரே...' என்ற அந்த பாடல் ஆறு மாதங்கள் நடைமுறையில் இருந்தது.ஜின்னா, 1947 செப்டம்பரில் மறைந்து விட்டார். ஜின்னாவுக்கு பின்னர் பதவியேற்ற அரசு அப்பாடலை நீக்கிவிட்டது.
பின், தேர்வுக்குழுவின்பரிந்துரையின் படி புதியதாக எழுதப்பட்ட 723 பாடல்களில், ஹபீஸ் ஜலந்ரி என்ற முஸ்லிம் கவிஞர் எழுதிய பாடல் தேர்வு செய்யப்பட்டு, நடைமுறையில் இருந்து வருகிறது.

சமீபத்தில் "டான்' என்ற பிரபல பாக்.,பத்திரிக்கை, பீனா சர்வார் என்ற கவிஞர் கட்டுரை ஒன்றை எழுதி யுள்ளார். அதில் அவர், மதச்சார்பின்மையை கடைபிடிப்பவரான ஜின்னா,பாக்., தேசிய கீதத்தை ஒரு இந்துவை எழுதச் சொல்லி இருக்கிறார்."ஒரு இந்து, இந்து மதப்பாடல்களை தான் பாடவேண்டும்; முஸ்லிம் தன் மதப் பாடல்களை தான் பாடவேண்டும் என்பதில்லை.

இந்தியாவில், இக்பால் என்ற முஸ்லிம் கவிஞர் எழுதிய சாரே ஜகான் சி அச்சா என்ற பாடலை குழந்தைகள் அனைவரும் உச்சரித்து இன்றளவும் பாடி வருகின்றனர். அப்படியிருக்கையில், பாக்.,கில் இந்து எழுதிய தேசிய கீதத்தை ஏன் பின்பற்றக் கூடாது?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இவங்க ஏன் இப்படி இருக்காங்க ?.
மதப்பிரச்சனை , ஜாதிப்பிரச்சனை என்று சொல்லி நாட்டை பிரிக்கணுன்னு கங்கனம் கட்டிக் கொண்டு அலைறாங்க. குண்டு வைக்கறது ,அடாவடி வன்முறை தாக்குதல்னு சொல்லி அப்பாவி மக்களை கொல்றாங்க .
இப்படித்தான் கொல்லனும்ன்னு எந்த மதத்துல சொல்லிருக்கு ?, சொல்லுங்க பாப்போம் .

எல்லா மதமுமே அன்பைத்தான் போதிக்கிறது . யாரையும் வெட்டனும் , குத்தனுன்னு சொல்லிருக்கா ? , சொல்லுங்க .

அப்புறம் ஏன் இந்த கொலவெறி ? .

முதல்ல பொழைக்கிற வழிய பாருங்க . எல்லாம் தானா சரியாகும் .

அவங்க அவங்க மனதிலே அன்பு , சகோதரத்துவம் , சாந்தி , மதக்கோட்பாடு , இருந்தாலே போதும் .

மனித நேயத்தை போற்றுங்கள் . அதுவே போதும் .
இது நல்லாருக்கா - சொல்லுங்க ....

ஸ்டார்ஜன்

Post Comment

Friday, October 2, 2009

காந்தி - உலக அஹிம்சை தினம்



காந்தி ஜெயந்தி கொண்டாடும் இவ்வேளையில் இன்னொரு மிக முக்கியமான மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது .


இனிமேல் அக்டோபர் 2 உலக அகிம்சை தினமாக கொண்டாடப்படும் . இதை நான் சொல்லல . நம்ம ஐ.நா சபையே சொல்லிட்டது .

இதை பற்றிய ஒரு பார்வை :

ஐக்கிய நாடுகள் சபை தீர்மானப்படி ஆண்டுதோறும் அக்டோபர் 2ம் தேதி உலக அகிம்சை தினம் அனுட்டிக்கப்படுகின்றது. இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி அடிகளின் பிறந்த தினமே அக்டோபர் 2ம் தேதியாகும்.

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதியை உலக அகிம்சை தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கோரி இந்தியாவின் சார்பில் ஜூன் 15, 2007ல் ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 142 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அத்தீர்மானம் பொதுச் சபையில் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 2ம் தேதியை ஐ.நா. உறுப்பு நாடுகள் உலக அகிம்சை தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.

காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை தினமாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தினத்தை சர்வதேச மட்டத்தில் கொண்டாட வேண்டுமென எல்லா அரசாங்கங்களையும், ஐ.நா. விற்கு உட்பட்ட கழகங்களையும், அரசு சாரா நிறுவனங்களையும், தனி நபர்களையும் ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளதுடன் இத்தினத்தை பாடத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்ச்சித் திட்டங்கள் மூலமாகவும் அனுசரிக்குமாறும் கோரியுள்ளது.

வன்முறையாலும், போராலும் மட்டுமே உரிமைகளை பெற முடியும் என உலகம் நினைத்திருந்த கட்டத்தில் அது பிழையானது என நிரூபித்த காந்திஜி உலகத்தையே கைகளுக்குள் அடைக்க நினைத்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை ஆயுதமெடுக்காமல் நாட்டை விட்டு விரட்டிக் காட்டினார்.

இவரின் நடைமுறைகளால் கவரப்பட்ட மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்கள் அகிம்சை வழியிலேயே சென்று வெற்றி பெற்றுக் காட்டினர்.

'அகிம்சை என்பது வலிமையற்றவர்களின் ஆயுதமல்ல, வலிமையற்றவர்கள் வன்முறையை தான் தேர்வு செய்வார்கள் வலிமையானவர்களால் மட்டுமே அகிம்சையின் பாதையில் நடக்க முடியும். எதிரியை எழ முடியாமல் அடித்து வீழ்த்த வலிமை தேவையில்லை; எந்த தாக்குதலையும் சமாளித்து எழுந்து நிற்கவே வலிமை தேவை" என்று காந்திஜி கூறிய வாசகங்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டியதொரு கருத்தே.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கமைய முதலாவது அகிம்சை தினம் 2007 அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டத்தின் போது 'ச‌கி‌ப்பு‌த்த‌ன்மை இ‌ன்மையாலு‌ம், மோத‌ல்களாலு‌ம் உலக‌ம் முழுவது‌ம் பத‌ற்ற‌‌ம் அ‌திக‌ரி‌த்துவரு‌ம் ‌நிலை‌யி‌ல், எ‌ண்ண‌ற்ற ம‌க்களா‌ல் ஏ‌ற்று‌க் கொ‌‌ள்ள‌ப்ப‌ட்ட சுத‌ந்‌திர இ‌ந்‌தியா ‌பிற‌ப்பத‌ற்குக் காரணமான மாகா‌த்மா கா‌ந்‌தி‌யி‌ன் அ‌கி‌ம்சை‌க் கொ‌ள்கைக‌ளை ‌மீ‌‌ண்டு‌ம் நாம் சி‌ந்திக்க வே‌ண்டியது அவ‌சிய‌மானதாகும்" எ‌ன்று ஐ‌க்‌கிய நாடுக‌ள் சபையி‌ன் பொது‌ச் செயலாளர் பா‌ன் ‌கி மூ‌ன் தெரிவித்திருந்தார்.

அந்நிகழ்வில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர் ''அ‌திக‌ரி‌த்துவரு‌ம், கலா‌சார‌‌க் கல‌ப்பா‌ல் ஏ‌ற்படு‌‌ம் பத‌ற்ற‌த்தையு‌‌ம், ச‌கி‌ப்பு‌த்த‌ன்மை ‌இன்மையா‌ல் ஏ‌ற்படு‌ம் மோத‌ல்களையு‌ம் உலக‌ம் உண‌ர்‌ந்து வரு‌கிறது. இதனா‌ல் ‌தீ‌‌‌விரவாத‌த்‌தி‌ன் ஆ‌தி‌க்கமு‌ம், வ‌ன்முறையை‌த் தூ‌‌ண்டு‌ம் கரு‌த்து‌க்களு‌ம் பலமடை‌ந்து வரு‌கி‌ன்றன.

மியா‌ன்ம‌ரி‌ல் இராணுவ ஆ‌ட்‌சியாள‌ர்களு‌‌க்கு எ‌திராக அமை‌தியான முறை‌யி‌ல் போராடியவ‌ர்க‌ள் ‌மீது நட‌த்த‌ப்ப‌ட்ட அட‌க்குமுறை‌த் தா‌க்குத‌ல்களை‌க் கு‌றி‌ப்‌பி‌ட்ட அவ‌ர்:

மகா‌த்மா‌வி‌ன் கொ‌ள்கைகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி அ‌கி‌ம்சை முறை‌யி‌ல் ஆ‌யுத‌ங்க‌ளை‌த் தொடாம‌ல் போராடுபவ‌ர்க‌ளி‌ன் ‌மீது ஆயுத‌ப் படைக‌ள் பய‌ன்படு‌த்த‌ப்படுவதை நா‌ம் கா‌ண்‌கிறோ‌ம். உலக‌ம் முழுவது‌ம் சுத‌ந்‌திர‌ம் ம‌ற்று‌ம் குடியு‌ரிமைகளு‌க்காக ‌மிக‌ப்பெ‌ரிய இய‌க்க‌த்தை மு‌ன்‌னி‌ன்று நட‌த்‌தியவ‌ர் மகா‌த்மா கா‌ந்‌தி. அவர் ஒ‌வ்வொரு நாளு‌ம் த‌ன்னுடைய வா‌ழ்‌வி‌ல் அ‌கி‌ம்சையை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றினார், அத‌ன் மூல‌ம் எ‌ண்‌ணிலட‌ங்கா ம‌னித‌ர்க‌ளி‌ன் அ‌ர்‌த்‌தமு‌ள்ள வா‌ழ்‌க்கை‌க்கு வ‌ழிகா‌ட்டியாக இரு‌‌ந்தார்.'' என்றார்.


ந‌ன்றி த‌ட்ஸ்த‌மிழ்

இதுபோல கூகிளும் தன் பங்குக்கு முகப்பு பக்கத்தில் காந்தியின் படம் போட்டு காந்தி ஜெயந்தியை கொண்டாடுகிறது .

நான் எழுதிய , இதற்கு முந்திய பதிவான காந்தியும் நானும் ‍ காந்தி ஜெயந்தியை பார்க்க விரும்புபவர்கள் இங்கே செல்லவும் .

ஸ்டார்ஜன்

Post Comment

காந்தியும் நானும் - காந்தி ஜெயந்தி


இன்று அக்டோபர் 2 ம் தேதி . இன்று முக்கியமான ஒரு தலைவருக்கு பிறந்த நாள் . அவர் தான் அண்ணல் காந்தியடிகள் . காந்தி ஜெயந்தியை இன்று அனைவரும் கொண்டாடுகிறோம் . இந்த இனிய நாளில் அவரின் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் .


காந்திஜியின் இளம் வயதில் ஒருவரோடு நட்பு கொண்டுருந்தார். அந்த நண்வர் சுருட்டு குடிக்கும் வழக்கமுடையவர். அவருடன் சேர்ந்ததால் காந்திஜிக்கும் இந்தக் கொடிய பழக்கம் தொற்றிக்கொண்டது. சுருட்டு குடிக்கும் பழக்கத்தை நாகரீகம் உள்ளவர் என்பதைக் காட்டிக் கொள்ள காந்திஜியும் நண்பருடன் சேர்ந்து புகை பிடிக்கத் துவங்கினார்.

இப்பழக்கத்தின் காரணமாக செலவுக்குப் பணம் தேவைப்பட்டது. சுருட்டு வாங்குவதற்கு பணம் வேண்டுமே. சில காலம் கடைகளிலும் நண்பர்களிடமும் பணம் கடனாகப் பெற்று சுருட்டு வாங்கினார்.

கடனை அடைப்பதற்குப் பணம் தேவைப்பட்டதும் என்ன செய்வது என்று யோசித்தார்.

தமது மூத்த சகோதரரின் தங்கக் காப்பிலிருந்து ஒரு பகுதியை காந்தி வெட்டி எடுத்தார். இவ்வாறு செய்யும் போது அவர்மீது அவருக்கே வெறுப்பும் வேதனையும் ஏற்பட்டது. தாம் செய்யும் செயல் எத்தனையது என்று எண்ணிப் பார்த்து தாங்கொணாத துயரம் அடைந்தார்.

கடைசியாக, தாம் செய்த தவறுகள் எல்லாவற்றையும் தந்தையிடம் கூறி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர் செய்தவற்றை, நேரில் சொல்வதற்கு நடுக்கமாக இருந்தது. எனவே காகிதத்தை எடுத்தார். தாம் செய்த குற்றங்களுக்குத் தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

காந்திஜியின் தந்தை கரம்சந்த் காந்தி உடல்நலம் சரியில்லாததால் படுத்த படுக்கையாக இருந்தார்.

தந்தையிடம் சென்று தாம் எழுதிய கடிதத்தைக் கொடுத்தார். அவர் படித்துவிட்டு தரும் தண்டனையை எதிர்நோக்கி அருகில் நின்றிருந்தார்.
காந்திஜி தந்த அந்த கடிதத்தை வாங்கிக்கொண்ட தந்தை, எழுந்து உட்கார்ந்துகொண்டார். கடித்த்தைப் படித்தார். படிக்கும்போது அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

கடிதத்தைப் படித்து முடித்தும் கண்களை மூடிக் கொண்டார். பிறகு கடிதத்தைக் கிழித்துப் போட்டார். பிறகு படுத்துக்கொண்டார்.

தான் செய்த தவறுகளுக்கு தந்தையிடம் தண்டனையை எதிர்பார்த்து நின்ற காந்திஜி அழுதார். கோபம் கொண்டு திட்டுவார் அல்லது அடிப்பார் என்று காந்திஜிஎண்ணினார்.

தந்தையிடம் காந்திஜி மறைக்காமல், தமது தவறுகளைக் கூறி மன்னிப்புக் கேட்டாரல்லவா? குற்றம் செய்வதை ஒப்புக்கொள்பவ‌ர்களை மன்னிக்க வேண்டும் என்பதே தந்தை கரம்சந்த் காந்தியின் எண்ணமாக இருந்தது.
இதை காந்திஜிஅஹிம்சை என்று உணர்ந்தார்.

அன்பால் எதையும் வெல்லாம் என்பதே அஹிம்சையின் ஆணிவர். இந்த தத்துவம், இளம் பிள்ளையாக இருக்கும் போதே காந்திஜியின் மனத்தில் ஆழ வேரூன்றச் செய்தது இந்தச் சம்பவமே!

பெரும் சாதனைகளை பிற்காலத்தில் செய்ய அஹிம்சையும் சத்தியமுமே காந்திஜிக்குத் துணையாக நின்றன.

தந்தையிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பையும் பெற்றபிறகு காந்திஜி, தேவையற்ற பழக்கங்கள் அனைத்தையும் விட்டுவிட்டார்.

---------------------------------------------------------

நான் பள்ளியில் படிக்கும் போது நடந்த சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது . எங்கள் பள்ளியில் ஆண்டுதோறும் விளையாட்டு விழா , ஆண்டு விழா நடைபெறும் . நான் அப்போது 7 ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் . விளையாட்டு விழாவில் மாறுவேடப் போட்டி உண்டு .

அதில் நானும் கலந்து கொள்ள ஆசை . ஜேம்ஸ் சாரிடம் , சார் , என்ன வேஷம் போடலாம் என்று கேட்டேன் . ( ஏற்கனவே , நான் 6 ம் வகுப்பில் வேறு மாறுவேடப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன் ) . ஏய் , நீ காந்தி வேடம் போடு . நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும் என்றார் . சரி என்று சொன்னேன் .

காந்தியை பற்றிய விவரங்களையும் , பொருள்களையும் சேகரித்தேன் . காந்தியை பத்தி ஜேம்ஸ் சாரே எழுதி தந்தார் . காந்தி அணிந்த கண்ணாடி போல , எங்க தாத்தா வைத்திருந்தார் . காந்தி கண்ணாடி எங்க தாத்தா கொடுத்தார் . கடிகாரம் , எங்கூட படித்த நண்பன் வீட்டில் இருந்ததை கொடுத்தான் . கதர் வேட்டி எங்கப்பா கொடுத்தார் .

பின்னர் , போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன் . எல்லோரும் பாராட்டின‌ர் .

காந்தி ஜெயந்தியை கொண்டாடும் இவ்வேளையில் அவ‌ர் கூறிய‌ க‌ருத்துக்க‌ளை நினைவு கூறுவோம் .

ஸ்டார்ஜ‌ன்

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்