Pages

Thursday, November 24, 2011

புரோட்டா சாப்பிடலாம்.. வாங்க

புரோட்டா

மக்கள் சாப்பிடும் அன்றாட உணவுவகைகளில் புரோட்டாவுக்கு தனியிடம் உண்டு. நகரத்திலிருந்து கிராமம் பட்டிதொட்டிவரை எல்லா இடங்களிலும் முக்குக்குமுக்கு புரோட்டா கடைகள் உண்டு. இந்த கடைகளில் இரவுநேரங்களில் வியாபாரம் படுஜோராக இருக்கும். கூட்டம் அலைமோதும்.
புரோட்டா ஒவ்வொரு ஊருக்கும் தனிசுவை என்று வித்தியாசப்படும்.

தினமும் இரவு புரோட்டா சாப்பிட்டால்தான் சாப்பிட்ட திருப்தி இருக்கும் என்ற அளவுக்கு புரோட்டா மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. புரோட்டா ஊருக்கு ஊர் எத்தனை வகை, அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடுகள். விருதுநகர் புரோட்டா, நெல்லை, தூத்துக்குடி புரோட்டா, மதுரை கொத்து புரோட்டா, சில்லி புரோட்டா, சிக்கன் புரோட்டா, முட்டை புரோட்டா, வீச்சு புரோட்டா, மற்றும் இன்னும் வகைவகையான புரோட்டாக்களை பற்றி சொல்லும்போதே நாவில் நீர் ஊறுகிறது.


வட மாநிலங்களில், "பரத்தா' என அழைக்கப்படும், "அயிட்டம்' தான், மருவி தமிழகத்தில் "புரோட்டா' என்றானது. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. "பரத்தா' என்பது கொஞ்சம் சப்பட்டையாக இருக்கும். புரோட்டா, கொஞ்சம் உப்பலாக இருக்கும். மற்றபடி, இரண்டுமே "அக்கா, தங்கச்சி' தான்.

இந்தியில் கோதுமை மாவுக்கு பெயர் "ஆட்டா'. "பரா' என்றால் அடுக்கு. சுட்ட பிறகு, அடுக்கடுக்காக அமைந்துள்ள மைதா மாவு என்ற அர்த்தத்தில் "பரா+ஆட்டா', "பரத்தா'வாகி இருக்கிறது.

புரோட்டா என்பது மைதா மாவினால் செய்யப்படும் உணவாகும். இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையினால், மைதா மாவில் செய்யப்பட்ட உணவுகள் தமிழக்கத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் இந்த புரோட்டா.

புரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?.. மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணீர்விட்டு பிசைந்து, அப்புறம் எண்ணெய் விட்டு ஊறவைத்து, உருட்டி, ஒவ்வொரு உருண்டையாக தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல பறக்கவிட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்டவடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போட்டு சுடுவார்கள்.

இப்போது புரோட்டாவின் மூலப்பொருளான மைதாவிலிருந்துதான் பிரச்சனை துவங்குகிறது. பரோட்டா மட்டுமல்லாது இன்னும் பல உணவு வகைகள் இந்த மைதாவிலிருந்துதான் தயாரிக்கிறார்கள். நாம் பிறந்தநாள் கொண்டாட வாங்கப்படும் கேக் உட்பட.

மைதா எப்படி தயாரிக்கிறார்கள்?..

நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிற‌த்தில் இருக்கும். அதை பென்சாயில் பெராக்சைட் ( Benzoyl peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள். அதுவே மைதா.

( ( Benzoyl peroxide ) என்பது நாம் முடியில் டை அடிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம். இந்த ரசாயனம் மாவில் உள்ள ப்ரொட்டீன்னுடன் சேர்ந்து நீரழிவுக்கு காரணியாக அமைகிறது. மேலும் இது தவிர, Alloxan என்னும் ரசாயன‌ம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives, SUgar, Saccarine, Ajinamotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இது மைதாவை மேலும் அபாயகரமாக்குகிறது.

இதில் Alloxan சோதனைகூடத்தில் எலிகளுக்கு நீரழிவுநோய் வரவைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆக ப்ரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரழிவு வர துணைபுரிகிறது. மேலும் மைதாவில் செய்யப்படும் புரோட்டா ஜீரணத்துக்கும் உகந்தத‌ல்ல. இதனால் சிலருக்கு சாப்பிட்ட ப்ரோட்டா செரிக்காமல் அஜீரண கோளாறு உண்டாகிறது. மைதாவில் நார்ச்சத்து கிடையாது. நார்ச்சத்து இல்லாத உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும்.

இதில் சத்துக்கள் எதுவும் இல்லை. இதை சாப்பிடும் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழ்ந்தைகளுக்கு மைதாவினால் செய்யப்பட்ட பேக்கரி பண்டம் உணவுகளை கொடுக்கக்கூடாது.


Europe union, UK, China போன்ற நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன. மைதாவை நாம் உட்கொள்ளும்போது சிறுநீரக கோளாறு, இருதய கோளாறு, நீரழிவு போன்ற நோய்கள் வருவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் மைதாவின் தீங்கு குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர். மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கைகளும் சமர்ப்பித்துள்ளனர்.

நண்பர்களே! ஆரோக்கியமான நம் பாரம்பரியமிக்க கேழ்வரகு, கம்பு, சோளம், போன்றவற்றை உட்கொண்டு புரோட்டாவை புறம் தள்ளுவோம்.


இப்போதாவது நாமும் விழித்துக் கொள்வோம். நம் தலைமுறை காப்போம்.

**************

டிஸ்கி:

இந்த தகவலை கொடுத்து நம் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்பட வழிவகுத்து தந்த என் நண்பர் பேராசிரியர் ஷேக் அவர்களுக்கு நன்றி. அவரது வேண்டுகோளுக்கு இணங்க இந்த இடுகையினை வெளியிட்டுள்ளேன்.

நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.

Post Comment

Wednesday, November 16, 2011

கடவுள் எனும் முதலாளி..


என் பஞ்சம்தீர்க்க‌
அசைந்து அசைந்து வரும்
மழை தரும் மேகமே
கொஞ்சம் நில்லு
என் கதையை கேட்டபின் செல்!

கலங்கிய கண்களில் நீர்
என் கஷ்டங்களை நினைத்துப்
பார்க்கும்போதும் நீர்தானா
என் உழைப்பிலும் தெரிகிறது
உந்தன் சொகுசு வாழ்க்கை!

ஏற்றம் இறைத்து நீர்பாய்ச்சி
உழுதுஉழுது பல நெற்கோட்டைகளை
உருவாக்கிய கைகளும் பிசைகிறது
பழையகஞ்சியையும் மிளகாயையும்..
அப்போதும் கலங்கிய‌ கண்களில் நீர்!!


வயக்காட்டில் விளைந்ததை
சந்தையில் விற்ற பணத்தை
எண்ணிப்பார்க்கும் உன் கைகளை
நோக்கியபோதும் கண்களிலும் நீர்..
நேற்றையவிட அதிகம் தரமாட்டாயா என்று!

"அப்பா, நா பள்ளிக்கொடம் போறேன்ப்பா",
என்ற மகனின் ஆசையை
நிராசையாகாமல் இருக்க
விலையாய் எந்தன் வயக்காடு
பத்திரமாய் உன் டிரங்குபொட்டியில்!!

பத்திரத்தை பத்திரமாய் மீட்டெடுக்க‌
உழைக்கிறேன் உழைக்கிறேன்
உழைத்துக்கொண்டே இருக்கிறேன்...

ஆளான மகனின் அந்தஸ்துகண்டு
அவனோடு கைக்கோர்க்க விழையும்
உன்னைக்கண்டு பெருமிதமாய்
கலங்கிய கண்களில் நீர்!

Post Comment

Sunday, November 6, 2011

ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்

நம்மையெல்லாம் படைத்து, காத்து, நம்முடைய தேவைகளை நிறைவேற்றித் தருகின்ற எல்லாம்வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக‌ பக்ரீத் ஈகைத் திருநாள் பண்டிகை உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இங்கு சவுதி அரேபியாவில் இன்று இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான புனித மெக்காவுக்கு ஹஜ் செய்த ஹாஜிகள் அனைவரும் ஹஜ்ஜை நிறைவு செய்கின்றனர்.

அவர்களின் ஹஜ்ஜை இறைவன் பரிபூரணமான அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜாக நிறைவேற்றித் தருவானாக.. ஆமீன்.


ஹாஜிகளுக்கும், என் நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் உறவினர்களுக்கும், வலைப்பதிவு நண்பர்கள் அனைவர்களுக்கும் என்னுடைய இதயங்கனிந்த பக்ரீத் ஈகைத்திருநாளாம் ஹஜ் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


அனைவர்களுக்கும் பெருநாள் வாழ்த்துகள்.

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்