Pages

Tuesday, September 29, 2009

உன்னைப் போல் ஒருவன் - நானும் நீயும்

உன்னைப் போல் ஒருவன்



உன்னைப் போல் ஒருவன் விமர்சன தொகுப்பில் நானும் சேர்ந்து விட்டேன் .

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு விறுவிறுப்பான படம் . படம் ஒண்ணேமுக்கால் நேரம் தான் என்றாலும் ரொம்ப ஸ்பீடா போகுது .
துப்பாக்கி ரவை மாதிரி ரொம்பவே ஷார்ப்பான படம். பொம்மலாட்ட அரங்கத்தில் விரல்களை போல வேலை பார்த்திருக்கிறார் கமல். ஓடியாடுவதெல்லாம் மற்றவர்களே! ஆனாலும் அவரது அலட்டிக்கொள்ளாத நிதானமே குறி பார்த்து பதற வைக்கிறது ரசிகனை.

பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், மார்க்கெட் என்று மக்கள் கூடும் இடங்களில் பாம் வைக்கிற கமல், அப்படியே போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளேயும் பாம் வைக்கிறார். பின்பு வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டு மிகப்பெரிய கட்டிடத்தின் உச்சிக்கு போகிறார்.

அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது திடுக் திடுக்...

சிட்டி கமிஷனர் மோகன்லாலுக்கு போன் செய்து குண்டு வைத்த விபரத்தை சொல்கிறார். அப்படியே அந்த விஷயத்தை மீடியாவுக்கும் போட்டுக் கொடுக்க, திமிலோகப்படுகிறது அதிகார வட்டாரம். “என்ன வேண்டும் உனக்கு?” பேரம் ஒரு பக்கம், தேடல் மறுபக்கம் என்று காவல் துறை சல்லடையாக துளைக்க, சைலண்டாக காய் நகர்த்துகிறார் கமல். பயங்கர தீவிரவாதிகள் நால்வரை விடுவித்து ஒரு ஜீப்பில் ஏற்ற சொல்கிறார். இல்லையென்றால் டமால்தான்...

கட்டுப்படும் போலீஸ், தீவிரவாதிகளை விடுவித்து ஜீப்பில் ஏற்ற, ஒருவனை மட்டும் விடாமல் பிடித்துக் கொள்கிறார் இன்ஸ்பெக்டர் கணேஷ் வெங்கட்ராம். ஏறிய மூவரும் தப்பித்தார்களா? அதுதான் இல்லை. குண்டு வெடித்து ஜீப்போடு கைலாசம்! அப்படியென்றால் கமலின் நோக்கம்?
அப்பாவி உயிர்களை காவு கொடுக்கிற தீவிரவாதிகளை சட்டம் சில நேரங்களில் விடுவித்துவிடுகிறது. அவர்களுக்கு தண்டனை, அதே போல ஒரு கொடூரம்தான்! கடைசியில் கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கிற கமலை, கண்டும் காணாமல் போகிறார் கமிஷனர். சுபம்...

கமல் என்ற மகா கலைஞனின் அடக்கம், அமைதியான சுனாமிக்கான முன் நிமிடங்களையே உணர்த்துகிறது. எங்கும் நகராமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும், குஜராத் இனக்கலவரத்தை விவரிக்கும் அந்த நிமிடங்களில் அத்தனை நேர நடிப்பையும் ஒரு முகத்தின் கீழ் கொண்டு வந்திருக்கிறார் அவர். வசனங்களில் அனல் மற்றும் நையாண்டி.


சிட்டி கமிஷனர் மோகன்லால் சின்ன சின்ன அசைவுகளில் கூட கம்பீரம் காட்டுகிறார். தலைமை செயலாளரிடம் மோதும்போது அவரது வார்த்தைகளில் தீப்பொறி. தனக்கு கீழே வேலை செய்யும் அதிகாரிகளிடம் அவர் காட்டும் பரிவும், உத்தரவும் கூட ‘அட...!’

இன்ஸ்பெக்டராக வரும் கணேஷ் வெங்கட்ராம் ஒரு லட்டியை போலவே நடமாடுகிறார். குற்றவாளியை அடிக்காமலே உண்மையை வரவழைக்கும் அவரது டெக்னிக் பகுத் அச்சா! (அதே நேரத்தில் குற்றவாளிக்கு உச்சா..)

இவர் மட்டுமல்ல, படத்தில் வந்து போகிற அத்தனை கேரக்டர்களும் அசரடிக்கிறார்கள். அந்த ஐஐடி டிராப் அவுட் மாணவன் உட்பட! சீரியஸ் கதையில் சிரிக்க வைக்கும் பகுதிகள், முதலமைச்சரின் வாய்சில் வரும் அந்த டயலாக்குகள்தான்!

மனோஜ் சோனியின் ஒளிப்பதிவு காலையில் துவங்கி மாலையில் முடியும் ஒவ்வொரு நிமிடத்தையும் பரபரப்பாக பதிவு செய்திருக்கிறது.

ஸ்ருதிஹாசனின் இசையில் உருவான பாடல்கள் ஆடியோ சி.டியில் மட்டுமே. திரையில் இல்லாதது ஏமாற்றம். பின்னணி இசை தேவைப்பட்ட இடத்தில் மட்டும் முணுமுணுத்திருக்கிறது. அதுவே அழகு.

தீவிரவாதத்தை முன் வைக்க நினைத்திருக்கும் இந்த படத்தில், கமலின் அணிசேரா கொள்கைதான் கொஞ்சம் பிசிறடிக்கிறது. மற்றபடி உன்னைப்போல ஒருவன், நமக்குள் ஒருவனாக கரைந்து போவது தவிர்க்க முடியாதது!

படத்தில் எத்தனை ஓட்டைகள் இருந்தாலும் ,
கமலின் அட்டகாசமான நடிப்பு , மோகன்லாலின் கம்பீரம் படத்துக்கு பிளஸ் .

மொத்தத்தில் இந்த படம் விறுவிறுப்பான திரைக்கதையில் பாஸ் .

இந்த படத்துக்கு எத்தனை மார்க் போடலாமுன்னு நீங்களே சொல்லுங்க .

எனக்கு இந்த பதிவு 50 வது பதிவு

ஸ்டார்ஜன்

Post Comment

ஈரம் - தண்ணீரின் தாகம்

ஈரம்


ஈரம் படம் இப்போதான் என்னால பாக்க முடிந்தது .

தமிழ்சினிமா எத்தனையோ வில்லன்களை பார்த்திருக்கிறது. இந்த படத்தில் போலீசை சுற்றலில் விடும் அந்த வில்லன் தண்ணீர்!

குளியலறை தொட்டிக்குள் பிணமாக கிடக்கிறார் சிந்துமேனன். தற்கொலைதான் என்று முடிவுக்கு வருகிறது போலீஸ். ஆனால், இதில் சந்தேகம் இருப்பதாக கேசை நீட்டிக்கிறார் போலீஸ் அதிகாரி ஆதி. இவரும் சிந்து மேனனும் முன்னாள் காதலர்கள் என்ற சின்ன அதிர்ச்சியோடு நகர்கிறது படம். அந்த பிளாட்டில் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் தொடர் விபத்தில் மரணமடைய, காரணத்தை தேடிப்போகிற ஆதிக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அதிலும் எல்லா மரணமும் தண்ணீர் ரூபத்தில். சிந்துமேனின் ஆவியே வந்து "இது தற்கொலையல்ல" என்று ஆதியிடம் ரகசிய வாக்குமூலம் தருகிறது. கொலையாளியான கணவனுக்கு தண்டனை தருவது ஆதியா? ஆவியா? விறுவிறுப்பான க்ளைமாக்ஸ்!

திருச்சி கல்லு£ரியில் படிக்கும் சிந்துமேனன், ஆதியுடன் காதலில் விழும் காட்சிகள் எல்லாம் பனித்துளி படர்ந்த ஹைகூ ரோஜா! என் கண்ணை பார்த்து சொல்லு... இந்த ஒரு டயலாக் வரும்போதெல்லாம் தியேட்டரில் கைத்தட்டல்கள். இடது கை பழக்கமுள்ளவர் இவர் என்பதை கேஷ§வலாகதான் காட்டுகிறார்கள் என நினைத்தால், அதுதான் படத்தின் ஸ்டிராங்கான அடையாளம். அதிருக்கட்டும்... சிந்து எப்படி? லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்! என்ன அழகாக இருக்கிறார் ! அந்த பார்வையே கொல்லுதே !

ஆதிக்கு காக்கி சட்டை போடாமலே ஒரு கம்பீரம் வந்து ஒட்டிக் கொள்கிறது. குரலில் பிருத்விராஜ் தெரிந்தாலும், நடிப்பில் புது ரூட் தெரிகிறது. கண்ணுக்கு எதிரே காதலி இறந்து கிடக்கிறாள். ஒரு அதிர்ச்சி வேண்டாமோ? இதுதான் போலீஸ் மிடுக்கு போலிருக்கிறது.

வில்லனாகியிருக்கிறார் நந்தா. சரியான ரூட். பிக்கப் பண்ணுங்க பிரதர்.

தங்கையான சரண்யா மோகன், பொம்மையாக வளைய வந்தாலும், அக்காவின் ஆவி உள்ளே புகுந்த பின் கண்களே கலவரமூட்டுகிறது.

புறம்பேசுகிற எல்லாருமே ஆவியால் கொலை செய்யப்படுவதும், அந்த கொலைகள் நடைபெறுகிற விதமும் ரத்தம் தெறிக்கும் அச்சத்தை தருகிறது. குறிப்பாக கழிவறையில் சிக்கிக் கொள்ளும் அந்த காதல் பார்ட்டி. நிதானமாக கொலையை செய்துவிட்டு தண்ணீரில் சுவடுகள் பதிய ஆவி நடந்து போவது ஈரக்குலையில் திடுக் திடுக்...

பேய் கதையில் லாஜிக் எதுக்குப்பா என்றாலும், சட் சட்டென்று கூடுவிட்டு கூடு பாயும் ஆவி, தங்கையின் ஜாக்கெட்டை கிழிக்கிற வரை பூப்பறித்துக் கொண்டா இருந்தது?

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு திகிலுக்கு திகில் சேர்க்கிறது. தமனின் இசை மெலடி விருந்து. விஷ¨வல் எபெக்ட்ஸ் இந்தியன் ஆர்ட்டிட்ஸ், ஈஎப்எக்ஸ். ஒவ்வொரு திகில் காட்சியும் விஷ§வல் டேட்ஸ்ட்!

நீண்டகாலமாக நிலவி வரும் திகில் பட வறட்சிக்கு இந்த படம் ஜில்லென்று ஒரு கிளாஸ் -ஈரம்!


படத்துக்கு எத்தனை மார்க் போடலாம் நீங்களே சொல்லுங்க ...

Post Comment

Sunday, September 20, 2009

ரமழான் பெருநாள் வாழ்த்துக்கள்


சௌதி அரேபியாவில் இங்கே இன்று ரமழான் பெருநாள் கொண்டாடுகிறோம் . அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு 6 மணிக்கெல்லாம் பெருநாள் தொழுகைக்கு செல்வோம் . 6 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெறும் . நல்ல ஜாலியாக இருக்கும் .

இந்தியாவில் நாளை திங்கள்கிழமை ரமழான் பெருநாள் கொண்டாடுவார்கள் .

அனைவருக்கும் என் இனிய ரமழான் பெருநாள் வாழ்த்துக்கள் .

Post Comment

Wednesday, September 16, 2009

என்னை பத்தி - தொடர்பதிவு


திரு தங்க ராஜ் செல்வேந்திரன் என்னை ஒரு அருமையான தொடர்பதிவுக்கு அழைத்துள்ளார் .

அந்தத் தொடர்பதிவு ஆங்கில எழுத்துக்களுக்கு, 26 எழுத்துக்கும் ஒரு பதில் தருவது. '

சுவாரசியம்தானே!!

இதன் விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.

ஆரம்பிப்போமா .. ஸ்டார்ட் மியூசிக் ...

1. A – Avatar (Blogger) Name / Original Name : / ஸ்டார்ஜன் / சேக் மைதீன் /

2. B – Best friend? : எல்லோருமே எனக்கு நண்பர்கள் தான் : வள்ளுவரின் குறள் தான் ஞாபக‌த்துக்கு வருது , முகநக நட்பது நட்பன்று .... என்ற குறள் .

3. C – Cake or Pie? : Cake ( யாரும் கேக்காம இருந்தா சரிதான் ) .

4. D – Drink of choiசெ? காபி , டீ , குளிர்பானம் வேறென்ன இருக்கு .

5. E – Essential item you use every day? கண் ( அலை பாயுதே கண்ணா.. என்னவளை ரொம்பவே தேடும் ) .

6. F – Favorite color ? . blue ( ஊதா )

7. G – Gummy Bears Or Worms : --------------------------------------->யாராவது நிரப்புங்க..

8. H – Hometown? -திருநெல்வேலி..

9. I – Indulgence? - கொஞ்சி கொஞ்சம்.. கெஞ்சி கொஞ்சம்..

10. J – January or February? - ஜனவரி மாதம் ‍‍ வருடத்தின் முதல் மாதம் தானே ....

11. K – Kids & their name? இப்போதைக்கு இல்லை , இன்ஷா அல்லாஹ் ! ,

12. L – Life is incomplete without? குடும்பதோடு இருக்கிற சுகமே தனி தான் ...

13. M – Marriage date? ‍ 21/12/08

14. N – Number of siblings? = எண்ணிலடங்கா ...

15. O – Oranges or Apples?ஒரு ஆறஞ்சி (ஐந்தாறு) ஆப்பிள்..

16. P – Phobias/Fears? யானையை கண்டால் உள்ளுற ஒரு பயம் ..

17. Q – Quote for today? வாழ்க்கை வாழ்வதற்க்கே ,

18. R – Reason to smile? சந்தோசத்தின் தொடக்கம் , சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய் ...,

19. S – Season? வசந்த காலம்..

21. U – Unknown fact about me? தெரியாதே ... தெரிந்தவங்க சொல்லலாம்..

22. V – Vegetable you don't like? கத்திரிக்காய்

23. W – Worst habit? இருக்கு ... ஆனா இல்லை ....

24. X – X-rays you've had? இல்லை

25. Y – Your favorite food? கறிக் குழம்பு

26. Z – Zodiac sign? சிம்ம ராசி , உத்திர நட்சத்திரம் ,
********************************************************************

அன்புக்குரியவர்கள்: அம்மாவும் அப்பாவும்
ஆசைக்குரியவர்: என்ன‌வ‌ளே அடி என்ன‌வ‌ளே ...

இலவசமாய் கிடைப்பது: அறிவுரைகளும்,வியாதிகளும்

ஈதலில் சிறந்தது: முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் வள்ளலுக்கு ஈடுஇல்லை

உலகத்தில் பயப்படுவது: அப்பிடின்னா?

ஊமை கண்ட கனவு: அவ‌ன் பேசுவ‌து மாதிரி

எப்போதும் உடனிருப்பது: கனவுகளும்,கற்பனைகளும் , த‌ன்ன‌ம்பிக்கையும்

ஏன் இந்த பதிவு: த‌ங்க‌ ராஜ் செல்வேன்திர‌ன் அழைத்த‌தினால் ,

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: கல்வி, செல்வ‌ம் , தைரியம் ,

ஒரு ரகசியம்: ரகசிமாய் …

ஓசையில் பிடித்தது: குழந்தைகளின் மழலைப்பேச்சு ,

ஔவை மொழி ஒன்று: அறம் செய்ய விரும்பு ,

(அ)ஃறிணையில் பிடித்தது: பேனா .

Post Comment

Tuesday, September 15, 2009

அண்ணா - வாய் சொல்லில் வீரனடி ....

அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா கொண்டாடிக் கொண்டுருக்கிறோம் . அவரது நினைவில் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் ...


காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909] - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார்.


அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசுனாதிற்குப்பிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்றப் பெருமையுடன், அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.


தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடையத் திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே.


இந்த‌ வ‌கையில் பார்க்கும் போது நான் இத‌ற்கு முன் எழுதிய‌ வாய் சொல்லில் வீர‌ன‌டி என்ற‌ த‌லைப்பில் எழுதிய‌ ப‌திவை அண்ணா நூற்றாண்டு விழா பதிவில் உங்க‌ள் முன் ப‌கிர்ந்து கொள்ள‌லாம் என்று நினைக்கிறேன் .அத‌னை இங்கே மீள்ப‌திவாக‌ இட்டுள்ளேன் .

அன்பார்ந்த வலைப்பதிவு நண்பர்களே , நண்பிகளே , அன்பர்களே , தாய்மார்களே , பெரியோர்களே ,


நாம ஒரு விசயத்தை நல்லா கவனிக்கணும் . கடவுள் நம்மை படைக்கும் போது நமக்கு ஒரு அழகான உயிரையும் உடம்பையும் கொடுத்திருக்கிறார் . நம் உடம்பில் ஒவ்வொரு உறுப்பும் ரொம்ப முக்கியமானது . அதில் ஒன்று வேலை செய்யவில்லை என்றால் நாம் அம்பேல் தான் . அதில் மூளை முக்கியமானது . நம்முடைய ஒவ்வொரு உணர்ச்சியையும் வெளிப்படுத்துததும் மூளை தான் .


நாம எப்படி பேசுகிறோம் ? . நம் மூளையில் உதிக்கிற கருத்துக்களையும் எண்ணங்களையும் வாயின் மூலமாக நாக்கின் உதவியோடு பேசுகிறோம் . இது இப்ப மட்டுமல்ல , பிறக்கும் போதே குவங்க் குவங்க் .... என்று அழுகையின் மூலம் தான் .


ஒரு வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்துகிறார் . அப்போது வருகைப்பதிவு வாசிக்கப்படுகிறது .


முருகன் ,


உள்ளேன் அய்யா

சண்முக நாதன்


ஆஜர்
பட்டமுத்து
ஆஜர் சார்
காந்திமதி
யஸ் சார்
சேக் மைதீன்
உள்ளேன் அய்யா
ஜுடி
பிரசண்ட் சார்
இப்ராஹிம்
உள்ளேன் அய்யா .


சரி இப்ப விசயத்துக்கு வருவோம் . ஒரு வகுப்பறையில் மாணவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதை வருகைப்பதிவு காட்டிடும் . அதே மாதிரி நாம , மத்தவங்ககிட்ட நம்மளை நாம் அடையாளப்படுத்திக் கொள்வது இந்த பேச்சின் மூலமா தான் . ஒருவர் தன்னுடைய பேச்சின் மூலமா நானும் இருக்கேன் என்பதை வெளிக்காட்டுகிறார் .


நம்ம ஆளுகளை பேச்சில மிஞ்சிக்கிட முடியாது . பேச ஆரம்பிச்சாங்கன்னா நிறுத்தவே மாட்டாங்க . நான்ஸ்டாப் . கேக்கிற ஆள் ரொம்ப கொடுத்து வைத்து இருக்க வேண்டும் . இவ்வளோ நல்லவரா அவர் ....


இன்னும் சில பேர் இருக்காங்க , பேசுவதற்கு காசு கொடுக்கனும் அவங்களுக்கு . அப்படி இருக்கும் அவங்க பேச்சு .


இதிலே சில பேர் உண்டு . பேசாமலே காரியத்தை சாதிச்சிட்டு போயிக்கிட்டே இருப்பாங்க . இந்த மாதிரி ஆளுககிட்ட உசாரா இருக்கணும் . ஒன்னுமே தெரியாத மாதிரி ரியாக்சன் காட்டுவாங்க பாருங்க . அப்பப்பா ... முடியலடா சாமி ...


சில பேர் எப்படின்னா , இரண்டு பேருக்குள்ள சண்டை இழுத்து விட்டுருவாங்க . பலே ஆளுங்கப்பா ... இதத்தான் ஊமை குசும்பாங்களோ .... நீங்க நல்லவரா கெட்டவரா ....


சில பேர் எப்படின்னா , அவங்க பேச்சிலயே நம்மளை மயக்கிப்புடுவாங்க . நாம அவங்களுக்கு அடிமையானது மாதிரி ஆகிடுவோம் . நீங்க தான் மன்மதன் பேமிலியா .... சொல்லவே இல்ல ...


இதுல இன்னொரு முக்கியமான விசயம் என்னன்னா ... ஒருத்தர் பேச ஆரம்பிச்சார்னா அருவி கொட்டோ கொட்டன்று கொட்டும் . இப்படி சில பேர் உண்டு . அவர் அங்கருந்து வரும் போதே சொல்வாங்க "ஏய் குத்தாலம் வர்றாருடா ஒதுங்கியே நில்லு , சாரலடிக்கும்" . நீங்க குத்தாலத்துல இருந்திங்களோ ....


சிலபேரை பாத்த உடனே தப்பா எடை போட்டுறக் கூடாது . உதாரணத்துக்கு சொல்லனுன்னா எனக்கு ஒரு காமெடி ஞாபகத்துக்கு வருது .


வேலைக்காரன் படத்துல ஒரு ஹோட்டல்ல வேலைக்கு சேத்து விட நம்ம சூப்பர்ஸ்டாரை செந்தில் கூட்டிட்டு போவார் . அப்போ அங்க மேனஜரா இருக்கும் நாசர் ரஜினியைப் பாத்து ஏம்பா உனக்கு இங்கிலீஷ் எல்லாம் தெரியுமான்னு கேட்பார் . உடனே பக்கத்துல இருக்கிற செந்தில் என்ன சார் அவனே இப்ப தான் கிராமத்துல இருந்து வாரான் அவனுக்கெப்படி .... என்று சிரிப்பார் . உடனே நம்ம தலைவர் இங்கிலீஷ்ல சும்மா பேசுவார் பாருங்க . அப்பப்பா ......


இப்படி எக்கசக்கமான பேர் உண்டு .... சொல்லிக்கிட்டே போகலாம் . உங்களுக்கு தெரிந்தா கொஞ்சம் சொல்லுங்க .


பேச்சு இப்ப ஆரம்பிக்கலை . மனிதன் எப்ப தோன்றினானோ அப்பவே ஆரம்பிச்சிருச்சு . சில உதாரணத்தை சொல்லனுன்னா ....


300 வருசத்துக்கு முன்னாடி நம்மளை ஆங்கிலேயன் ஆண்டு அடிமைப்படுத்தி வந்தான் . நம்மளோட சுதந்திரம் பறிபோனது . அப்போ நம்ம முன்னோர்கள் எல்லாம் சேர்ந்து குரல் கொடுத்தாங்க . நிறைய மன்னர்கள் தங்களோட கருத்தை ( சுதந்திரம் வேண்டி ) சொன்னாங்க .

அதுக்கு அப்புறம் வந்த மக்கள் , தலைவர்கள் , காந்தி , ராஜாராம் மோகன்ராய் , கோபாலகிருஷ்ண கோகலே , அபுல் கலாம் ஆசாத் ராஜாஜி , முகம்மது அலி ஜின்னா , நேரு , கான் அப்துல் காபார் கான் , இப்படி நிறைய தலைவர்கள் பாடுபட்டு நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தாங்க . இதுக்கு அடிப்படையா இருந்தது அவங்களோட பேச்சு தான் .


பேச்சுக் கலை நமக்கெல்லாம் ஒரு வரம் தான் . அதுக்கு இறைவனுக்கு தான் நாம நன்றி சொல்லணும் .


இதே மாதிரி , சுதந்திரம் அடைந்த பின்னாடியும் , அரசியல்ல சில தலைவர்கள் தன்னோட பேச்சுத் திறமையால மக்கள் மத்தியில் பிரபலம் அடைச்சிருக்காங்க . பெரியார் , காமராஜர் , அண்ணாத்துரை , கலைஞர் , எம்ஜியார் , ஜெயலலிதா , வைகோ , நெடுஞ்செழியன் , காளிமுத்து , தீப்பொறி ஆறுமுகம் , டி ராஜேந்தர் , கடைசியா நம்ம விஜயகாந்த் இப்படி நிறைய தலைவர்கள் தங்களோட பேச்சுத் திறமையை வைத்து மக்கள் மத்தியில் பிரபலமானாங்க . ..... அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா ....


இதுல இன்னொருத்தர் இருந்தார்யா .. அவர் வேற யாருமல்ல .. 1991 -1996 வரை பிரதமரா இருந்த நம்ம நரசிம்மராவ் தான் . மனுசர் 5 வருசம்மா சிரிக்கவே இல்லையே என்ன .


பட்டிமன்றத்துல எல்லாம் பேச்சு தான் முதல் . அங்க பேச்சு இல்லைன்னா நம்ம பப்பு வேகாது .


இதைத்தான் வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கும்னு சொல்வாங்களோ .....
சில பேருக்கு இந்த மாதிரி கோர்வையா பேச வராது . அவங்க என்ன பண்ணுவாங்க , தங்களோட எழுத்துத் திறமையைக் கொண்டு மத்தவங்களை பேச வப்பாங்க . எனக்கு காலேஜ் படிக்கும் போது உள்ள சம்பவம் ஞாபகத்துக்கு வருது .....


எங்க காலேஜ்ல பேச்சுப் போட்டி வச்சாங்க . அதுல நானும் கலந்துகிட்டேன் . அப்ப எனக்கு கோர்வையா பேச வராது . ஏதோ பேசினேன் . அப்ப சார் கூப்புட்டு , தம்பி உன்னோட கருத்துக்கள் எல்லாம் நல்லாயிருக்கு . ஆனா பேச்சு வரல . நீ பேச நினைக்கிறதை , உன்னோட எழுத்தைக் கொண்டு மத்தவங்களை பேச வையின்னு சொன்னார் .


இப்ப அப்படிதான்னு நினைக்கிறேன் , நீங்க தான் சொல்லனும் ......
இந்த வலைப்பதிவில் நான் எழுத ஆரம்பித்ததுக்கு அப்புறம் எனக்கு நண்பர்கள் நண்பிகள் என்று நீங்க தான் கிடைத்திருக்கிறீர்கள் . அதுக்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் . உங்க அன்பால என்னை கட்டி போட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் .


நம்முடைய நட்பு எப்படின்னா , சங்க காலத்தில வாழ்ந்த கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பு மாதிரி . காணா நட்பா இருந்தாலும் ரொம்ப நெருக்க மாயிட்டோம் .


பேச்சும் எழுத்தும் லவ்வர்ஸ் மாதிரி .


ஒருத்தருக்கொருத்தர் கருத்துக்களை பரிமாறிக்கணும் . நம்முடைய எண்ணங்கள் மற்றவர்களை சென்றடையனுன்னா நம்ம எழுத்து பேசணும் .


நல்ல நல்ல விசயங்களை பத்தி நாம எழுதணும் . அது தான் நம் வாழ்க்கையில நிறைய விசயங்களை கத்துக் கொடுக்கும் .


இது என்னோட எண்ணம் ..... அப்ப உங்க எண்ணம் ......???? ..

ஸ்டார்ஜன்

Post Comment

அண்ணா - வாய் சொல்லில் வீரனடி ....

அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா கொண்டாடிக் கொண்டுருக்கிறோம் . அவரது நினைவில் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் ...


காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909] - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார்.

அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசுனாதிற்குப்பிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்றப் பெருமையுடன், அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.


தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடையத் திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே.


இந்த‌ வ‌கையில் பார்க்கும் போது நான் இத‌ற்கு முன் எழுதிய‌ வாய் சொல்லில் வீர‌ன‌டி என்ற‌ த‌லைப்பில் எழுதிய‌ ப‌திவை அண்ணா நூற்றாண்டு விழா பதிவில் உங்க‌ள் முன் ப‌கிர்ந்து கொள்ள‌லாம் என்று நினைக்கிறேன் .
அத‌னை இங்கே மீள்ப‌திவாக‌ இட்டுள்ளேன் .



அன்பார்ந்த வலைப்பதிவு நண்பர்களே , நண்பிகளே , அன்பர்களே , தாய்மார்களே , பெரியோர்களே ,


நாம ஒரு விசயத்தை நல்லா கவனிக்கணும் . கடவுள் நம்மை படைக்கும் போது நமக்கு ஒரு அழகான உயிரையும் உடம்பையும் கொடுத்திருக்கிறார் . நம் உடம்பில் ஒவ்வொரு உறுப்பும் ரொம்ப முக்கியமானது . அதில் ஒன்று வேலை செய்யவில்லை என்றால் நாம் அம்பேல் தான் . அதில் மூளை முக்கியமானது . நம்முடைய ஒவ்வொரு உணர்ச்சியையும் வெளிப்படுத்துததும் மூளை தான் .

நாம எப்படி பேசுகிறோம் ? . நம் மூளையில் உதிக்கிற கருத்துக்களையும் எண்ணங்களையும் வாயின் மூலமாக நாக்கின் உதவியோடு பேசுகிறோம் . இது இப்ப மட்டுமல்ல , பிறக்கும் போதே குவங்க் குவங்க் .... என்று அழுகையின் மூலம் தான் .

ஒரு வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்துகிறார் . அப்போது வருகைப்பதிவு வாசிக்கப்படுகிறது .

முருகன் ,

உள்ளேன் அய்யா

சண்முக நாதன்

ஆஜர் சார்

பட்டமுத்து

ஆஜர் சார்

காந்திமதி

யஸ் சார்

சேக் மைதீன்

உள்ளேன் அய்யா

ஜுடி

பிரசண்ட் சார்

இப்ராஹிம்

உள்ளேன் அய்யா .

சரி இப்ப விசயத்துக்கு வருவோம் . ஒரு வகுப்பறையில் மாணவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதை வருகைப்பதிவு காட்டிடும் . அதே மாதிரி நாம , மத்தவங்ககிட்ட நம்மளை நாம் அடையாளப்படுத்திக் கொள்வது இந்த பேச்சின் மூலமா தான் . ஒருவர் தன்னுடைய பேச்சின் மூலமா நானும் இருக்கேன் என்பதை வெளிக்காட்டுகிறார் .

நம்ம ஆளுகளை பேச்சில மிஞ்சிக்கிட முடியாது . பேச ஆரம்பிச்சாங்கன்னா நிறுத்தவே மாட்டாங்க . நான்ஸ்டாப் . கேக்கிற ஆள் ரொம்ப கொடுத்து வைத்து இருக்க வேண்டும் . இவ்வளோ நல்லவரா அவர் ....

இன்னும் சில பேர் இருக்காங்க , பேசுவதற்கு காசு கொடுக்கனும் அவங்களுக்கு . அப்படி இருக்கும் அவங்க பேச்சு .

இதிலே சில பேர் உண்டு . பேசாமலே காரியத்தை சாதிச்சிட்டு போயிக்கிட்டே இருப்பாங்க . இந்த மாதிரி ஆளுககிட்ட உசாரா இருக்கணும் . ஒன்னுமே தெரியாத மாதிரி ரியாக்சன் காட்டுவாங்க பாருங்க . அப்பப்பா ... முடியலடா சாமி ...

சில பேர் எப்படின்னா , இரண்டு பேருக்குள்ள சண்டை இழுத்து விட்டுருவாங்க . பலே ஆளுங்கப்பா ... இதத்தான் ஊமை குசும்பாங்களோ .... நீங்க நல்லவரா கெட்டவரா ....

சில பேர் எப்படின்னா , அவங்க பேச்சிலயே நம்மளை மயக்கிப்புடுவாங்க . நாம அவங்களுக்கு அடிமையானது மாதிரி ஆகிடுவோம் . நீங்க தான் மன்மதன் பேமிலியா .... சொல்லவே இல்ல ...

இதுல இன்னொரு முக்கியமான விசயம் என்னன்னா ... ஒருத்தர் பேச ஆரம்பிச்சார்னா அருவி கொட்டோ கொட்டன்று கொட்டும் . இப்படி சில பேர் உண்டு . அவர் அங்கருந்து வரும் போதே சொல்வாங்க "ஏய் குத்தாலம் வர்றாருடா ஒதுங்கியே நில்லு , சாரலடிக்கும்" . நீங்க குத்தாலத்துல இருந்திங்களோ ....

சிலபேரை பாத்த உடனே தப்பா எடை போட்டுறக் கூடாது . உதாரணத்துக்கு சொல்லனுன்னா எனக்கு ஒரு காமெடி ஞாபகத்துக்கு வருது .

வேலைக்காரன் படத்துல ஒரு ஹோட்டல்ல வேலைக்கு சேத்து விட நம்ம சூப்பர்ஸ்டாரை செந்தில் கூட்டிட்டு போவார் . அப்போ அங்க மேனஜரா இருக்கும் நாசர் ரஜினியைப் பாத்து ஏம்பா உனக்கு இங்கிலீஷ் எல்லாம் தெரியுமான்னு கேட்பார் . உடனே பக்கத்துல இருக்கிற செந்தில் என்ன சார் அவனே இப்ப தான் கிராமத்துல இருந்து வாரான் அவனுக்கெப்படி .... என்று சிரிப்பார் . உடனே நம்ம தலைவர் இங்கிலீஷ்ல சும்மா பேசுவார் பாருங்க . அப்பப்பா ......

இப்படி எக்கசக்கமான பேர் உண்டு .... சொல்லிக்கிட்டே போகலாம் . உங்களுக்கு தெரிந்தா கொஞ்சம் சொல்லுங்க .

பேச்சு இப்ப ஆரம்பிக்கலை . மனிதன் எப்ப தோன்றினானோ அப்பவே ஆரம்பிச்சிருச்சு . சில உதாரணத்தை சொல்லனுன்னா ....

300 வருசத்துக்கு முன்னாடி நம்மளை ஆங்கிலேயன் ஆண்டு அடிமைப்படுத்தி வந்தான் . நம்மளோட சுதந்திரம் பறிபோனது . அப்போ நம்ம முன்னோர்கள் எல்லாம் சேர்ந்து குரல் கொடுத்தாங்க . நிறைய மன்னர்கள் தங்களோட கருத்தை ( சுதந்திரம் வேண்டி ) சொன்னாங்க . அதுக்கு அப்புறம் வந்த மக்கள் , தலைவர்கள் , காந்தி , ராஜாராம் மோகன்ராய் , கோபாலகிருஷ்ண கோகலே , அபுல் கலாம் ஆசாத் ராஜாஜி , முகம்மது அலி ஜின்னா , நேரு , கான் அப்துல் காபார் கான் , இப்படி நிறைய தலைவர்கள் பாடுபட்டு நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தாங்க . இதுக்கு அடிப்படையா இருந்தது அவங்களோட பேச்சு தான் .


பேச்சுக் கலை நமக்கெல்லாம் ஒரு வரம் தான் . அதுக்கு இறைவனுக்கு தான் நாம நன்றி சொல்லணும் .

இதே மாதிரி , சுதந்திரம் அடைந்த பின்னாடியும் , அரசியல்ல சில தலைவர்கள் தன்னோட பேச்சுத் திறமையால மக்கள் மத்தியில் பிரபலம் அடைச்சிருக்காங்க . பெரியார் , காமராஜர் , அண்ணாத்துரை , கலைஞர் , எம்ஜியார் , ஜெயலலிதா , வைகோ , நெடுஞ்செழியன் , காளிமுத்து , தீப்பொறி ஆறுமுகம் , டி ராஜேந்தர் , கடைசியா நம்ம விஜயகாந்த் இப்படி நிறைய தலைவர்கள் தங்களோட பேச்சுத் திறமையை வைத்து மக்கள் மத்தியில் பிரபலமானாங்க . ..... அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா ....

இதுல இன்னொருத்தர் இருந்தார்யா .. அவர் வேற யாருமல்ல .. 1991 -1996 வரை பிரதமரா இருந்த நம்ம நரசிம்மராவ் தான் . மனுசர் 5 வருசம்மா சிரிக்கவே இல்லையே என்ன .

பட்டிமன்றத்துல எல்லாம் பேச்சு தான் முதல் . அங்க பேச்சு இல்லைன்னா நம்ம பப்பு வேகாது .

இதைத்தான் வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கும்னு சொல்வாங்களோ .....

சில பேருக்கு இந்த மாதிரி கோர்வையா பேச வராது . அவங்க என்ன பண்ணுவாங்க , தங்களோட எழுத்துத் திறமையைக் கொண்டு மத்தவங்களை பேச வப்பாங்க . எனக்கு காலேஜ் படிக்கும் போது உள்ள சம்பவம் ஞாபகத்துக்கு வருது .....

எங்க காலேஜ்ல பேச்சுப் போட்டி வச்சாங்க . அதுல நானும் கலந்துகிட்டேன் . அப்ப எனக்கு கோர்வையா பேச வராது . ஏதோ பேசினேன் . அப்ப சார் கூப்புட்டு , தம்பி உன்னோட கருத்துக்கள் எல்லாம் நல்லாயிருக்கு . ஆனா பேச்சு வரல . நீ பேச நினைக்கிறதை , உன்னோட எழுத்தைக் கொண்டு மத்தவங்களை பேச வையின்னு சொன்னார் .

இப்ப அப்படிதான்னு நினைக்கிறேன் , நீங்க தான் சொல்லனும் ......


இந்த வலைப்பதிவில் நான் எழுத ஆரம்பித்ததுக்கு அப்புறம் எனக்கு நண்பர்கள் நண்பிகள் என்று நீங்க தான் கிடைத்திருக்கிறீர்கள் . அதுக்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் . உங்க அன்பால என்னை கட்டி போட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் .


நம்முடைய நட்பு எப்படின்னா , சங்க காலத்தில வாழ்ந்த கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பு மாதிரி . காணா நட்பா இருந்தாலும் ரொம்ப நெருக்க மாயிட்டோம் .

பேச்சும் எழுத்தும் லவ்வர்ஸ் மாதிரி .

ஒருத்தருக்கொருத்தர் கருத்துக்களை பரிமாறிக்கணும் . நம்முடைய எண்ணங்கள் மற்றவர்களை சென்றடையனுன்னா நம்ம எழுத்து பேசணும் .

நல்ல நல்ல விசயங்களை பத்தி நாம எழுதணும் . அது தான் நம் வாழ்க்கையில நிறைய விசயங்களை கத்துக் கொடுக்கும் .


இது என்னோட எண்ணம் ..... அப்ப உங்க எண்ணம் ......???? ..

Post Comment

Sunday, September 13, 2009

பன்றிக் காய்ச்சல் - ஒரு அலசல்


பன்றிக் காய்ச்சல் பத்தி ஒரு அலசல்

இன்றைக்கு மக்கள் பன்றிக் காய்ச்சலால் ரொம்ப அவதிக்குள்ளாகி உள்ளனர் . அது பத்தி ஒரு அலசலை இங்கு காண்போம் .

பன்றிக் காய்ச்சல் சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன் முக்கிய அம்சங்களாவன:

* பன்றிக் காய்ச்சல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 'ஒசல்டமிவிர்', 'ஜானமிவிர்' ஆகிய மருந்துகளை அளிக்க வேண்டும். ஒசல்டமிவிர் கிடைக்காத இடங்களில், ஜானமிவிர் மருந்தை அளிக்கலாம். இந்த மருந்துகள், மரணத்தை தடுப்பதுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கின்றன. மேலும், இவை மரணத்தை உருவாக்கக்கூடிய நிமோனியாவை கட்டுப்படுத்தக் கூடியவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

* பன்றிக் காய்ச்சல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது உடல்நிலை மோசம் அடைபவர்களுக்கோ 'ஒசல்டமிவிர்', 'ஜானமிவிர்' ஆகிய மருந்துகளை உடனடியாக அளிக்க வேண்டும்.

* நோய்த் தாக்குதல் அபாயம் உள்ள கர்ப்பிணிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அறிகுறிகள் தென்பட்டவுடன் இம்மருந்துகள் அளிக்கப்பட வேண்டும்.

* பன்றிக் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்படாதவர்களுக்கு 'ஒசல்டமிவிர்', 'ஜானமிவிர்' ஆகிய வைரஸ் தடுப்பு மருந்துகளை அளிக்கக்கூடாது.

* 5 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளுக்கு கூட, அவர்கள் கடுமையாக பாதிக்கப்படாத பட்சத்தில், இந்த மருந்துகளை அளிக்கக் கூடாது.

* மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, 3 நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் ஆகியவை காணப்பட்டால், அவை பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள். அவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

* குழந்தைகள் வேகமாகவோ, சிரமப்பட்டோ மூச்சு விடுதல், சுறுசுறுப்பின்மை, படுக்கையை விட்டு எழுவதில் சிரமப்படுதல், விளையாடுவதில் ஆர்வம் இன்மை ஆகியவற்றுடன் காணப்பட்டால், அதுவும் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் ஆகும்.
************************************************************
த‌மிழ‌க‌த்தில் 9 ப‌ரிசோத‌னை மைய‌ங்க‌ள்

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் நோய்க்கான பரிசோதனை செய்து கொள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ள 9 தனியார் மையங்களின் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் வெளியிட்ட செய்தியில், "மத்திய அரசு சுகாதாரத்துறை வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றி, 'ஸ்வைன் புளு' (பன்றி காய்ச்சல்) நோயின் மாதிரிகளை பரிசோதனை செய்ய தேவையான வசதிகள் உள்ள தனியார் ஆய்வுக்கூடங்களை தமிழக அரசு அங்கீகரித்து வருகிறது.

ஏற்கனவே, பாரத் ஸ்கேன்ஸ் பிரைவேட் லிமிடெட், ராயபேட்டை, சென்னை; ஹைடெக் டையக்னாஸ்டிக் சென்டர், தி.நகர், சென்னை; டையக்னாஸ்டிக் சர்வீசஸ், பர்கிட் ரோடு, தி.நகர், சென்னை; மைக்ரோ லேப், கவுலி பிரவுன் ரோடு, ஆர்.எஸ்.புரம், கோயம்புத்தூர்; டாக்டர் ராத்'ஸ் லேப் (டாக்டர்ஸ் டையக்னாஸ்டிக் சென்டர்), தில்லைநகர், திருச்சி ஆகிய ஐந்து தனியார் ஆய்வுக்கூடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தற்போது, லிஸ்டர் மெட்ரோபாலிஸ் லேபரட்டரி மற்றும் ரிசர்ச் சென்டர் பிரைவேட் லிமிடெட், எண்.3, ஜெகன்னாதன் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை, ஸ்ரீராமச்சந்திரா மெடிகல் சென்டர், போரூர், இம்முனோ ஆன்சிலரி கிளினிக்கல் சர்வீஸ், எண்.59, டி.வி. சுவாமி ரோடு (மேற்கு), ஆர்.எஸ்.புரம், கோயம்புத்தூர்; விவேக் லேபரட்டரிஸ், எண்.253, கே-11, கே.பி. ரோடு, நாகர்கோவில் ஆகிய 4 தனியார் ஆய்வுக்கூடங்கள், `ஸ்வைன் புளு' மாதிரிகளை பரிசோதனை செய்ய அரசு அங்கீகரித்துள்ளது.

இதுவரை ஒன்பது தனியார் ஆய்வுக்கூடங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்ட வகைகளில் 'ஸ்வைன் புளு' காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள், அவர்கள் விரும்பினால், பரிசோதனை செய்து கொள்ளலாம்," என்று அதில் கூறப்பட்டுள்ளது.
**********************************************************
பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த 3 வகை முறைகள்

பன்றிக்காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த மூன்று புதிய வகை முறைகள் கையாளப்படும் என்று தமிழக அரசின் ஆரம்ப சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் எஸ் இளங்கோவன் இன்று தெரிவித்தார். சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர்களுக்கான எச்1என்1 இன்புளுயன்சா பற்றிய கருத்தரங்கில் உரையாற்றி அவர் மேலும் கூறியதாவது :

வகை 1 :

சாதாரண காய்ச்சலுடன் கூடிய இருமல் மற்றும் தொண்டைவலி காணப்படும் நோயாளிகள். இவர்களுக்கு உடம்பு வலி, தலை வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.
இந்த நோயாளிகளுக்கு ளிsமீறீtணீனீணீஸ்வீக்ஷீ/டாமிபுளு மருந்து தேவையில்லை. இரண்டு நாட்களுக்கு தொடர் கண்காணிப்பில் இருப்பது அவசியம்.

ஏ (ஹெச்1என்1) ஆய்வக பரிசோதனை தேவையில்லை
இந்நோயாளிகள் வீட்டில் ஓய்வெடுத்து கொள்ளும்படியும் மற்ற நபர்களுடன் தொடர்பினை குறைத்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இருமல், தும்மல் இருந்தால் கைக்குட்டைகளைப் பயன்படுத்திட வேண்டும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

வகை 2 :

வகை ஒன்றில் காணப்படும் நோய் அறிகுறிகளுடன் கடுமையான காய்ச்சல் மற்றும் கடுமையான தொண்டைவலி இருக்கும் நிலை

வகை ஒன்றில் காணப்படும் நோய் அறிகுறிகளுடன் காணும் நபர் ஐந்து வயதுக்கு உரிய குழந்தையாகவோ, கர்ப்பிணியாகவோ, 65 வயதிற்கு மேல் உள்ள முதியவராகவோ அல்லது நுரையீரல், இருதயம், கல்லீரல், சிறுநீரகம், நீரழிவு, நரம்பு, ரத்தம் மற்றும் எச்ஐவி/எய்ட்ஸ் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலோ
ஓஸல்டாமிவீர்/டாமிபுளு மருந்து கொடுக்கப்பட வேண்டும். ஆய்வகப் பரிசோதனை தேவையில்லை.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்

வகை 3 :

மேற்கூறிய வகை 1 மற்றும் வகை 2-க்கான அறிகுறிகளுடன் மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மயக்கம், குறைந்த ரத்த அழுத்தம், ரத்தத்துடன் கலந்த சளி, நீல நிறமாகும் நகங்கள், குழந்தைகளைப் பொருத்தவரை உணவு அருந்தாத நிலை ஆகிய சூழ்நிலைகளில்

ஏ (ஹெச்1என்1) ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்திட வேண்டும்
மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டும்
ஓஸல்டாமிவீர்/டாமிபுளு மருந்து கொடுக்கப்பட வேண்டும்
எனவே சாதாரண ஜலதோஷம் உள்ளவர்கள் அனைவரும் கி (பி1ழி1) பரிசோதனை செய்திட வேண்டிய அவசியம் இல்லை

மருத்துவர் ஆலோசனையின் பேரிலேயே பரிசோதனை செய்து கொள்வது அவசியம்

தேவையற்ற நிலையில் ஓஸல்டாமிவீர்/டாமிபுளு மாத்திரைகளை பயன்படுத்தாமல் இருத்தல் நல்லது

இவ்வாறு டாக்டர் இளங்கோ கூறினார்.

இந்த கருத்தரங்கில் பேசிய மருந்துப் பிரிவு இயக்குனர் டாக்டர் சி ராஜேந்திரன் இந்த நோய் வருவதற்கு முன்னரே பொது மக்கள் ஏ (ஹெச்1என்1) பரிசோதனை செய்ய வேண்டும் என்று வருகிறார்கள். இந்த நோய் பற்றி மருத்துவர்கள் ஆராய்ந்த பின், அவர்களின் ஆலோசனையின் பேரிலேயே பொது மக்கள் பரிசோதனை செய்ய வேண்டும்.

மேலும் இந்த நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகள் அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால் நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த மாத்திரைகளை கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற நேரங்களில் ஒரே மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த நோய்க்கான வைரஸ் பற்றி குறிப்பிட்ட அவர் குளிர் பருவங்களில் மூன்று மாதங்கள் வரையிலும், 22 டிகிரி வெப்பம் உள்ள தண்ணீரில் நான்கு நாட்களும், 0 டிகிரி வெப்பம் உள்ள தண்ணீரில் 30 நாட்களும், கைக்குட்டையில் 12 மணி நேரமும், கைகளில் 5 நிமிடமும் உயிர் வாழக் கூடியது என்றார். இந்த நோய் தும்மல் மூலமாகவும், இருமல் மூலமாகவும் காற்றின் வழியாக பரவும் என்பதால் நோயாளி தும்மும் இடத்தில் இருந்து ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்குமாறு மற்றவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
***********************************************************
பன்றி காய்ச்சலைத் தடுக்க புதிய வழிகாட்டு முறைகள்

நாட்டில் பல்வேறு இடங்களிலும் பரவி வரும் பன்றிக் காய்ச்சலைத் தடுக்க புதிய வழிகாட்டு முறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், இந்நோய் குறித்து மக்களிடையே நிலவி வரும் அச்சம் வெகுவாக களையப்படும் எனத் தெரிகிறது.

மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தலைமையில் பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இதில், சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவனைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் பன்றி காய்ச்சலை தடுக்க வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டம் முடிந்ததும், பன்றி காய்ச்சலை தடுப்பதற்கான புதிய வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டன.

புதிய வழிகாட்டு முறைகளாவன:

* உடல் வலி, தலை வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை இல்லாமல் இருமல், தொண்டை எரிச்சல் ஆகியவற்றுடன் லேசாக காய்ச்சல் இருக்கும் நபர்கள் பன்றி காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இவர்கள் 'ஏ' பிரிவின் கீழ் வருவார்கள்.

இவர்களுடைய உடல்நிலை முன்னேற்றம் 24 முதல் 48 மணி நேரத்துக்கு டாக்டர்களால் கண்காணிக்கப்பட வேண்டும். இவர்கள் பொது இடங்களில் மற்றவர்களுடன் சேர்ந்து இருப்பதை தவிர்ப்பதுடன், வீட்டில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுடன் சேர்ந்து இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

மேற்கண்ட 'ஏ' பிரிவில் உள்ளவர்களுக்கு இருப்பதை போன்ற அறிகுறிகளுடன் தீவிர காய்ச்சல், கடுமையான தொண்டை எரிச்சல் உள்ளவர்கள் 'பி' பிரிவினராக கருதப்படுவதோடு, அவர்கள் வீட்டில் தனியாக இருக்க வேண்டும்.

5 வயதுக்கும் குறைவான குழந்தைகள், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், கர்ப்பிணி பெண்கள், இருதயம், நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், சீரற்ற ரத்த அழுத்தம் உடையவர்கள், நீரிழிவு நோயாளிகள், நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள், புற்று நோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள் ஆகியோருக்கும் பன்றி காய்ச்சல் நோய் பரிசோதனை தேவை இல்லை.

மேற்கண்ட இரு பிரிவுகளிலும் உள்ள அறிகுறிகளுடன் மூச்சுவிட சிரமம், நெஞ்சு வலி, ரத்த அழுத்தம் குறைதல், சோம்பல், நகம் நீல நிறமாக மாறுதல், கைக்குழந்தைகள் அடிக்கடி எரிச்சலுடன் காணப்படுவதோடு தாய்ப்பால் அருந்த மறுத்தல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் அத்தகையவர்கள் பன்றி காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ளவதோடு, உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும்.
*******************************************************
பன்றிக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை :

பன்றிக் காய்ச்சலுக்கான சுவாச முகமூடியை பொதுமக்கள் அனைவரும் அணிய வேண்டிய அவசியம் இல்லை. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு கர்சீஃப் (கைக்குட்டை) தான் சாலச் சிறந்தது.

இதனை டெல்லியில் தெரிவித்த இந்திய மருத்துவ கவுன்சில் துணைத்தலைவர் அஜய் காம்பீர் மேலும் கூறுகையில், "பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பன்றி காய்ச்சல் பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பவர்கள் மட்டும் சுவாச பாதுகாப்பு முகமூடியை பயன்படுத்தினால் போதுமானது.

நுண்ணிய பொருட்களை வடிகட்டுவதற்கு 2 விதமான சுவாச முகமூடிகள் உள்ளன. அதில் ஒன்று என்-95 என்பதாகும். இது குளிர் காய்ச்சலுக்கு பயன்படுத்த விசேஷமாக தயாரிக்கப்பட்டது.

குறிப்பாக இந்த முகமூடி, பன்றிக் காய்ச்சல் பாதித்த நோயாளிகளை கவனித்து கொள்ளும் சுகாதார பணியாளர்கள் அணிவதற்கு உரியது ஆகும். இதை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது. 24 மணி நேரம் வரைதான் பயன்அளிக்கும். அதன்பிறகு தூக்கி எறிந்து விடவேண்டும்.

இன்னொரு முகமூடி, மருத்துவ அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்துவதாகும். இது எந்தவிதமான நோய் கிருமியையும் தடுக்கும் தன்மை கொண்டது. இந்த முகமூடி 4 முதல் 6 மணி நேரம் மட்டுமே பயன் தருவதாக இருக்கும்.

எனவே, விலை உயர்ந்த சுவாச பாதுகாப்பு முகமூடிகளை பொதுமக்கள் வாங்கி அணியவேண்டிய அவசியம் கிடையாது. ஒரு கர்சீப் இருந்தால் கூட போதும். அதை முகத்தில் கட்டிக் கொள்ளலாம். ஆனால், அதை 2 மணி நேரத்துக்கு ஒரு முறை துவைக்கவேண்டும்.

ஒவ்வொரு வைரசும் உங்களுடைய கர்சீப்பில் ஒரு மணி நேரம் வரை இருக்கும். கைகளில் 15 நிமிடங்கள் இருக்கும்.

பெரியவர்களுக்கு நோய் எச்.1.என்1. வைரஸ் தொற்றினால் 7 நாட்கள் வரை இருக்கும். ஆனால் குழந்தைகளிடம் இரண்டு வாரங்கள் வரை இருக்கும். பன்றி காய்ச்சலுக்கு 48 மணி நேரத்துக்குள் சிகிச்சை பெறுவது சிறந்த பலனை தரும்.

எச்1என்1 என்னும் வைரஸ் எச்1என்2 ஆக மாறலாம். ஆனால் நாங்கள் இப்போது எச்1என்1 வைரஸ் பற்றித்தான் கவலைப்படுகிறோம். இந்த வைரஸ் மீண்டும் வரலாம். அதையும் நாம் எதிர்கொள்ள தயாராகத்தான் இருக்கவேண்டும்," என்றார் அஜய் காம்பீர்.

எல்லா ம‌க்க‌ளையும் நோய்நொடி எதுவும் வ‌ராம‌ல் இறைவ‌ன் காப்பாற்றுவானாக‌ ....

ஸ்டார்ஜ‌ன்

Post Comment

Saturday, September 12, 2009

சிக்கலில் சிக்கிய கமலின் மர்மயோகி


கமலின் மர்மயோகி சில சிக்கல்களில் சிக்கித் தவித்து வருகிறது . அது பத்தி கமல் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் .


பத்துகோடியே சொச்சம் பணத்தை கேட்டு கமல்ஹாசனை நெருக்குகிறது பிரமிட் சாய்மீரா. இது மர்மயோகி படத்திற்காக கொடுத்த அட்வான்ஸ் தொகையாம். இந்த பணத்தை திருப்பி தரவில்லை என்றால் தற்போது ரிலீஸ் ஆகவிருக்கும் உன்னை போல் ஒருவனுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் பிரமிட் சாய்மீரா நீதிமன்றத்தை நாடப் போகிறதாம். இதற்கு கமல் என்ன பதில் சொல்கிறார்?

பிரமீட் சாய்மீரா நிறுவனம், 'உன்னைப் போல் ஒருவன்' படத்துக்கு இடைக்காலத் தடை வாங்கியுள்ளதாக சில இதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. அது உண்மையல்ல.


இதுகுறித்த உண்மைகளை வெளி்ப்படுத்த விழைகிறேன்.


'மர்மயோகி' படம் நின்று போனதும், அதற்கான காரணங்களும் அனைவரும் அறிந்ததே. 'மர்மயோகி' படத்துக்காக நான் மிகத் தீவிரமாக உழைத்தேன். ஒரு வருட காலமாக இதற்காக வேறு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் செலவிட்டேன்.


மிக விரிவான் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. செட்கள் அமைக்கப்பட்டன. சில காட்சிகளும் ஷூட் செய்யப்பட்டன, நடிக்கப்பட்டன, இயக்கப்பட்டன.
ஆனால் படப்பிடிப்பைத் தொடரத் தேவையான நிதியைத் திரட்ட பிரமீட் சாய்மீரா நிறுவனத்தால் முடியாமல் போனதால்தான் இந்தத் திட்டம் முடங்கிப் போனது.


எனது திரையுலக வாழ்க்கையின் ஒரு வருட காலத்தை நான் பிரமீட் சாய்மீரா நிறுவனத்திற்காக இழந்துள்ளேன். அது மட்டுமல்லாமல் ரூ. 40 கோடி வருமானத்தையும் இழந்துள்ளேன். இதுதொடர்பாக எனக்கு ரூ. 40 கோடியைத் தர வேண்டும் என்று கோரி 2009, ஏப்ரல் 12ம் தேதி நான் பிரமீட் சாய்மீரா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால் இதுவரை அந்த நோட்டீஸுக்கு சாய்மீரா பதில் தரவில்லை.


மேலும், சாய்மீரா நிறுவனத்திற்கு எதிராக நாங்கள் பல்வேறு கோர்ட்களில் கேவியட் மனுக்களையும் தாக்கல் செய்துள்ளோம். பிரமீட் சாய்மீரா நிறுவனத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் திட்டமிடப்பட்டு வந்தது.


இந் நிலையில், எனது சட்டப்பூர்வமான நடவடிக்கைளை தடுக்கும் வகையில், பத்திரிகைககள் மூலம் எனக்கு எதிரான விஷமப் பிரசாரத்தில் சாய்மீரா நிறுவனம் இறங்கியுள்ளது. தவறான குற்றச்சாட்டுக்களையும், கண்மூடித்தனமான குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதற்கான இடைக்கால பதிலறிக்கையையும் நாங்கள் அனுப்பி விட்டோம்.


உண்மை என்னவென்றால் நாங்கள் அவர்களுக்கு எதிராக கேவியட் பெற்றுள்ளோம். நானோ அல்லது ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனமோ 'உன்னைப் போல் ஒருவன்' பட ரிலீஸுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவை எந்த கோர்ட்டிலிருந்தும் பெறவில்லை என்று கமல் கூறியுள்ளார்.


எதிலும் முன் மாதிரியாக இருப்பவர் கமல். உன்னைப்போல் ஒருவன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முந்தின தினத்தில் அவர் இணையதள பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதில் சொன்னார்.


சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே போன்ற படங்களிலும் நடிக்கிறீர்கள். மகாநதி, குணா, நாயகன் போன்ற படங்களிலும் நடிக்கிறீர்கள்? உங்களது முற்போக்கு சிந்தனைக்கு சகலகலா வல்லவன் மாதிரி படங்கள் தேவைதானா? எப்போதாவது இது பற்றி யோசித்திருக்கிறீர்களா?



அதுபோன்ற படங்களையும் ரசிப்பவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.


உங்க கூட்டத்திலேயே கூட இருக்கக்கூடும். (இந்த நேரத்தில் ஒருவர் கையை உயர்த்த, ...தோ இருக்காரே என்கிறார் கமல்) சினிமாங்கிறது கபடி விளையாட்டு மாதிரி. எங்கே வேணும்னாலும் போகலாம். ஆனால் பிடிபடாமல் கவனமா திரும்பிடனும். அது மாதிதான் என்னோட நிலையும் என்றவரிடம் சமீபத்தில் பரவலாக வந்த ஒரு எஸ்எம்எஸ் குறித்தும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.


சிகப்பு ரோஜாக்கள் படத்தை எடுத்தீர்கள். சிறிது காலத்திலேயே அப்படத்தில் வருவது மாதிரியே ஒரு சைக்கோ கொலையாளியை போலீஸ் கைது செய்தது. அன்பே சிவம் படத்தில் சுனாமியை பற்றி சொன்னீர்கள். அடுத்த சில வருடத்திலேயே சுனாமி வந்தது. தசாவதாரத்தில் உயிர்கொல்லி கிருமியை பற்றி சொன்னீர்கள். இதோ பன்றி காய்ச்சல் பரவுகிறது. உன்னைப் போல ஒருவன் படத்தில் தீவிரவாதிகள் குண்டு வைப்பதை பற்றி... (இடையிலேயே குறுக்கிடுகிறார் கமல்)


“...நான்தான் குண்டு வைக்கறதை பற்றி புதுசா சொல்றேன்னு நினைச்சிராதீங்க. ஏற்கனவே மும்பையிலே குண்டு வச்சிட்டாங்க. இப்படியெல்லாம் தீவிரவாதம் இருக்கக் கூடாதுன்னு சொல்ற படம்தான் அது” என்றார். ஒவ்வொரு கேள்வியையும் படு ஜோவியலாக எதிர்கொண்ட கமல், இன்னொரு கேள்விக்கு பதில் சொன்னதுதான் வெடிகுண்டு சிரிப்பு.


உங்களோட அடுத்த திட்டம் என்ன? “இந்த பிரஸ்மீட்டை சீக்கிரம் முடிச்சிரணும்ங்கிறதுதான்!”


எப்படி நம்ம கமல்...?


ஸ்டார்ஜன்

Post Comment

Monday, September 7, 2009

நானும் கிருமி கண்ட சோழன்


அன்பு நண்பர்களே ,

இது க‌ம்யூட்ட‌ர் உல‌க‌ம் . க‌ம்யூட்ட‌ர் இணைய‌ தொட‌ர்புக்குள் வ‌ரும் போது என்ன வேண்டுமானாலும் செய்ய‌லாம் என்ற‌ நிலையில் உள்ளோம் . கூட‌வே ஆப‌த்தும் சேர்ந்துதான் வ‌ருகிற‌து . வைர‌ஸ் என்ற‌ வ‌டிவில் தான் வ‌ருகிற‌து . இணைய‌த்தில் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ வேண்டும் .

கம்பியூட்டர் வைரஸ் இது உலக மகா பிரச்சினை , இது வந்த பின் தடுப்பதை விட வரும்முன் தடுப்பது எப்படிஎன்று பார்ப்போம்.

எப்படி ஒரு கம்ப்யூட்டர் வைரஸ் புரோகிராமினைப் பெறுகிறது?


1. ஏற்கனவே வைரஸ் புரோகிராம் புகுந்த பைல்களை காப்பி செய்வது.
2. வைரஸ் கெடுத்த புரோகிராம்கள் அல்லது டேட்டா பைல்களைக் கம்ப்யூட்டருக்குள் கொண்டு வருவதன் மூலம்.
3. இன்டர் நெட்டிலிருந்து தகவல்கள் மற்றும் புரோகிராம்களை காப்பி செய்வதன் மூலம்.
4. இமெயில் கடிதங்கள் மூலம் ஒற்றிக் கொண்டு வருதல். வைரஸ் புரோகிராமினை நீக்குவது என்பது நேரத்தையும் நம் உழைப்பையும் அதிகமான அளவில் எடுத்துக் கொள்ளும் செயலாகும்.

இப்போது புது வித‌மான‌ வைர‌ஸ் வ‌ருகிற‌தாம் . அது என்ன‌

இமெயில் ( மின் அஞ்ச‌ல் )மூல‌ம் வ‌ருகிற‌தாம் .

உங்க‌ளுக்கு ப‌வ‌ர் பாய்ண்ட் ப்ரெச‌ன்டேச‌ன் ஃபைல் எதாவ‌து உங்க‌ளுக்கு மெயில் வந்தால் உட‌னே அந்த‌ மெயிலை எந்த‌ கார‌ண‌த்துக்கும் உட்ப‌டாம‌ல் திறக்காமல் உட‌னே அழித்து விடுங்க‌ள் .

அந்த‌ மெயிலில் என்ன‌ ச‌ப்ஜெக‌ட் என்றால்

'Life is beautiful.'
If you open this file, a message will appear on your screen saying:
'It is too late now, your life is no longer beautiful.'

இந்த‌ வைர‌ஸ் வ‌ந்தால் உங்க‌ள் க‌ண‌னியில் உள்ள‌ முக்கிய‌ ஃபைல்க‌ளை அழித்து விடும் .

அப்புற‌ம் உங்க‌ள் மெயில் ஐடி பாஸ்வேர்ட் அழிந்து விடும் . ஆக‌வே க‌வ‌ன‌மாக‌ இருங்க‌ள் .

இந்த புதிய வைர‌ஸ் க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ உலா வ‌ருகிற‌தாம் .

இந்த‌ த‌க‌வ‌லை மைக்ரோசாப்ட் ம‌ற்றும் நார்த்த‌ன் ஆன்டி வைர‌ஸ் நிறுவ‌ன‌மும் தெரிவித்துள்ள‌ன‌ .

ஆக‌வே உங்க‌ள் க‌ம்யூட்ட‌ருக்கு த‌க்க‌ ஆன்டி வைர‌ஸ் ப்ரொகிராமிட்டு பாதுகாத்துக் கொள்ளுங்க‌ள் .

ஸ்டார்ஜ‌ன்

Post Comment

Sunday, September 6, 2009

எழுத்தறிவித்தவன் - ஆசிரியர்கள் தினம்



இன்று ஆசிரியர்கள் தினம் . செப்டம்பர் 5 ம் தேதி ஆசிரியர்கள் தினம் . எல்லோரும் தனக்கு கற்பித்த ஒரு கணம் யோசித்துப் பாக்க வேண்டும் . ஒரு மாணவன் முதல் வகுப்பு சேத்தவுடன் பெற்றோர்கள் அப்பாடி தன் கடமை முடிந்ததென போயிடுவாங்க . ஆனால் ஒரு மாணவனின் வாழ்க்கையே ஆசிரியர்கள் கையில் உள்ளது .

சும்மாவா சொன்னாங்க எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று . ஆசிரியர் பணி என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட வரமாகும் . ஒரு மாணவன் பள்ளியில் சேர்ந்தவுடன் அவனுடைய திறமை என்ன என்பதை கண்டறிந்து அவனுக்கு எப்படி பாடம் சொல்லிக் கொடுத்தால் புரியும் என்பதை யூகித்து கற்றுக் கொடுப்பதை என்னவென்று சொல்வேன் . சில பிள்ளைகள் படிப்பில் மக்கா இருந்தால் அவர்களுக்கு வாழ்வில் ஒளியேற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு ராயல் சல்யூட் .

ஒவ்வொரு மாணவனின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தி வாழ்வில் முன்னேறச் செய்வது ஒவ்வொரு ஆசிரியர்களின் பொக்கிஷம் .

படிக்கவில்லை என்றால் அவர்களை கண்டித்து அவர்களின் படிப்பில் முன்னேற்றம் ஏற்பட செய்யும் ஆசிரியர்களின் திறமைக்கு ஒரு சல்யூட் .
இந்த ஆசிரியர் தின நன்னாளில் எனக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு ஒரு சல்யூட் .

நான் படித்தது எங்கள் ஊரில் திருநெல்வேலி பேட்டை புனித அந்தோணியார் நடுனிலை பள்ளியில் 8 வரைக்கும் படித்தேன் .

அதுக்கப்புறம் காமராஜர் மாநகராட்சி மேல்னிலை பள்ளியில் 12 வரை படித்தேன் .

பின்னர் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பி எஸ் சி வேதியியல் படித்துள்ளேன் .

நான் படிக்கும் காலத்தில் ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவனாக இருந்துள்ளேன் . எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த அனைத்து ஆசிரியர்களும் எனக்கு பிடித்தமானவர்கள் .

இந்த ஆசிரியர்கள் தினத்தில் அவர்களை எல்லாம் இப்போ எண்ணிப் பார்க்கிறேன் .

அவர்களுக்கு என்னுடைய ஆசிரியர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .

நண்பர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .

அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் .
ஸ்டார்ஜன்

Post Comment

Thursday, September 3, 2009

கண்ணீர் அஞ்ச‌லி - ஒய் எஸ் ஆர்


நேற்று ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஆந்திர முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி காணமல் போனார் .
இன்று அவர் விமான விபத்தில் காலமாகி போனதாக செய்திகள் கூறுகின்றன.

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட ஐந்து பேரும் பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்னூல் மாவட்டம் ரொல்லபென்டா என்ற இடத்தில் முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் மலைக் குன்றின் மீது நொறுங்கிய நிலையில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.

கர்னூலிலிருந்து 74 கிலோமீட்டர் தொலைவில் அந்த மலைக் குன்று உள்ளது.
ஹெலிகாப்டர் மலை மீது மோதி விழுந்துள்ளதாகவும், முற்றிலும் எரிந்து போன நிலையில் அது காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. அதில் பயணித்த யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பி்ல்லை என்றும் செய்திகள் கூறின.

ஹெலிகாப்டர் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதை இந்திய விமானப்படை அதிகாரி சாகர் பாரதி உறுதி செய்துள்ளார். விமானப்படை ஹெலிகாப்டர்கள்தான், ரெட்டி பயணித்த ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட இடம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைக் குன்று என்பதால் விமானப்படை ஹெலிகாப்டர்களால் அங்கு இறங்க முடியாத நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹெலிகாப்டர் இறங்க முடியாத நிலையில் இருப்பதால் விமானப்படை பாராசூட் பிரிவு கமாண்டோக்கள் அனுப்பப்பட்டனர்.

அவர்கள் சற்று முன்னர் மலைப் பகுதியில் இறக்கி விடப்பட்டனர்.

இதையடுத்து ஹெலிகாப்டரை நெருங்கிய அவர்கள், அங்கு ஐந்து உடல்கள் இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து ரெட்டி உள்ளிட்ட ஐவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

ரெட்டி மரணச் செய்தி அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் விவரம்...

முதல்வர் ராஜசேகர ரெட்டி
சுப்ரமணியம்- முதல்வரின் முதன்மைச் செயலாளர்.
வெஸ்லி - முதல்வரின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி.
கேப்டன் எஸ்.கே.பாட்டியா - ஹெலிகாப்டர் கேப்டன்.
கேப்டன் எம்.எஸ். ரெட்டி- ஹெலிகாப்டர் துணை கேப்டன்.

இன்று விமான‌ விப‌த்தில் ம‌ர‌ண‌ம‌டைந்த‌ ஆந்திர‌ முத‌ல்வ‌ருக்கு என் க‌ண்ணீர் அஞ்ச‌லியை காணிக்கை ஆக்குகிறேன் .

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்