Pages

Wednesday, April 11, 2012

சுனாமி எச்சரிக்கை


இன்று மதியம் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை படித்ததும் மனம் என்னவோ போலானது. மிகுந்த வேதனையடைந்தேன். யாருக்கும் எந்தவித துன்பமும் ஏற்பட்டுவிடக் கூடாதே என்று மனம் பதபதைப்பாக இருக்கிறது.

மலேசியாவில் உள்ள தம்பியுடன் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தது கொஞ்சம் ஆறுதல். நண்பர்கள் உறவினர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்து எச்சரிக்கையாக இருக்க சொல்லவேண்டும்.

சென்றமுறை 2004ல் சுனாமி வந்து இந்திய இந்தோனேஷியா மற்றும் கடற்கரை பிரதேசங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் நெஞ்சைவிட்டு அகலவில்லை. மறுபடியும் சுனாமி என்றால் தாங்காது இந்தபூமி. இறைவன் தான் எல்லா மக்களையும் பாதுக்காக்க வேண்டும்.

சென்ற 2004ல் சுனாமி வந்தபோது நான் வேலை விசயமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்ற ஊருக்கு சென்றிருந்தேன். அங்கே எல்லோரும் ரொம்ப கவலையுடன் இருந்தனர். ரேடியோக்களிலும் தொலைக்காட்சியிலும் ஒலி/ஒளிப்பரப்பட்ட காட்சிகளை கண்டபோது மனம் ரொம்ப வேதனையாக இருந்தது. அன்றைய தினம் மனசு முழுவதும் பிரார்த்தவண்ணமே இருந்தது. மதுரை வந்தபின் பள்ளியில் தொழுது பிரார்த்தனை செய்தது இன்னும் பசுமையாக உள்ளது.


எல்லாம்வல்ல எங்கள் இறைவா!.. இந்த சுனாமி என்னும் பேராபத்துகளிலிருந்து எங்களை பாதுகாப்பாயாக! எல்லா மக்களையும் பாதுகாத்து ஆசிர்வதித்து உன் இறையருளை பெற்ற மக்களாக எங்களை ஆக்கியருள்வாயாக... ஆமீன்.

சென்னையில் உள்ளவர்களும் கடற்கரை மாவட்டங்களில் உள்ளவர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள். ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். கவலைப்படவேண்டாம். இறைவன் பாதுகாப்பான்.

,

Post Comment

Tuesday, April 10, 2012

அவன் வரும் நேரம்


இரவு நேரம். உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தபோது எங்கிருந்துதான் அந்த வலி வந்ததோ தெரியவில்லை. அம்ம்ம்ம்ம்மா.... என்ற அலறலுடன் தட்டுதடுமாறி மெதுவாக எழுந்தேன். வாசலுக்கு வந்து பார்த்தால் எங்கும் இருட்டு பயம்வேறு தொற்றிக் கொண்டது. யாராவது உதவிக்கு வருகிறார்களா என்று தேடினேன். பக்கத்து வீடுகளை தட்டியதில் குறட்டை சத்தமே பதிலாய் வந்தது. அங்குமிங்கும் நடந்தேன்., பதிலே இல்லை. இந்த நேரம் துணைக்கு யாராவது இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அவரும் இல்லாதது வெறுப்பாய் உணர்ந்தேன். மனம் ஒருவித ஏக்கத்துடன் தவியாய் தவித்திருந்தது.

அம்மாவுக்கும் மாமி வீட்டுக்கும் போன் செய்யும் போது மனமும் வலித்தது. உறவுகளை உதறித்தள்ளி தொலைவில் தனிமையில் இருந்தது முதலில் சந்தோசமாக இருந்தாலும் இப்போது நினைக்கையில் மெல்ல தலையை சுற்றியது. தண்ணீரை அள்ளிஅள்ளி குடித்தாலும் தாகம் அடங்கவில்லை. மீண்டும் வலி வரத் தொடங்கியிருந்தது.

அந்த ஆளரவமற்ற சாலையில் என் கால்கள் மெல்லமெல்ல விரைந்தன. வலி விட்டுவிட்டு வருகிறதே.. என்னால் நடக்க முடியல.. தலைசுற்றி மயக்கத்துடன் நடந்து வந்தேன். யாரோ பின்னாலிருந்து தள்ளுவது போன்று இருந்ததால் அம்ம்ம்மா.. என்றபடி மயங்கி விழுந்தேன். இதமான காற்று என் முகத்தினில் மோத சிலிர்த்தெழுந்து நினைவுகள் பயணிக்கத் தொடங்கியிருந்தது. எழும்போது கால்கள் நடக்க திரணியற்று பயணித்தன.

"மரகதவல்லி மருத்துவமனை" என்ற பெயர்தாங்கி நின்ற இடத்தினிலுள்ளே கால்கள் சென்றன. என் நிலை கண்டும் அங்கிருந்த செவிலியர் கண்களில் அலட்சிய பார்வை "டாக்டர் இல்லை., காலையில்தான் வருவார்" என்ற பதிலுடன்.

நான் பொறுத்துக் கொள்வேன். வலி பொறுக்குமா?.. கத்த தொடங்கினேன். செவிலியர், "ஏம்மா, சும்மா சும்மா கத்திக்கிட்டே இருக்கே.. டாக்டர் வரட்டும்" என்றவளுக்கு மயக்கம்தான் விடையாய் கிடைத்தது என்னிடமிருந்து.

"குவா.. குவா" குரல் கொடுத்து என்னை மெல்ல கண்விழிக்க செய்தான் என் செல்லம். எழ முடியாமல் பெட்டிலிருந்து எழுந்தபோது, "வாடா.. வாடா என் செல்லக்குட்டி" என்ற குரல் கேட்டு திரும்பினேன். மாமியை கண்டதும் என் கண்களையும் மீறி நீர் வடிந்தது. "மாமி..." என்று பேச எத்தனிக்கும்போது வார்த்தைக்கு பதிலாய் கண்ணீர். பரவாயில்லமா என்றபடி என் செல்லத்தை கொஞ்சிக் கொண்டிருந்தார்.

,

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்