Pages

Thursday, May 28, 2009

நானும் வலைப்பதிவர் சந்திப்பு கூட்டமும்

நான் மே 24 ம் தேதி பதிவர் சந்திப்பு கூட்டம் சென்னையில் நடப்பதாக தமிழ் மனத்தில் பார்த்தேன் .
எத்தனையோ பதிவர் கூட்டம் நடந்திருக்கிறது , ஒன்னில் கூட கலந்துக்கவில்லை .
நான் புதிய பதிவர் ஆகி சில மாதங்களே ஆகிறது.
எல்லோரையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் . சரி இந்த கூட்டத்தில் கலந்துக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன் .
மே 23 ம் தேதி சென்னைக்கு கிளம்பினேன்.
எனக்கு தெரிந்த நண்பர் மூலம் கூட்டம் நடப்பதாக இருந்த கிழக்கு பதிப்பகத்துக்கு சென்றேன் .
அங்கே எல்லோரும் குழுமி இருந்தார்கள் .
முரளிக்கண்ணன் , லக்கிலுக் , கார்க்கி , கும்க்கி , பரிசல்க்காரன் , டோண்டு ராகவன் , கனவுகளே சுரேஷ் , தாமிரா ஆதிமூலகிருஷ்ணன், அதிஷா , நரசிம் , கேபிள் சங்கர் , அப்துல்லாஹ் , என்று நிறைய தலைகள் கூடி இருந்தார்கள் .
அப்போது நான் உள்ளே நுழைந்தேன் .
நர்சிம் : ஏதாச்சும் செய்யணும் லக்கி.
லக்கிலுக் : தென்மேற்க்குப் பதிப்பகத்தில ஒரு அண்டர் கிரவுண்ட் இருக்கு. அங்க இடம் கேட்டா நமக்கு கொடுத்துருவாங்க.
முரளிக்கண்ணன் : அங்க யாரு புதுசா வாரங்க !
starjan : முரளி , நாந்தான் starjan !
சுரேஷ் : வாங்க தல , எப்படி இருக்கீங்க !!!
அதிஷா : ஒ ! நீங்க தான் புதுசா எழுதிறிங்களா !
டோண்டு ராகவன் : வாங்க தம்பி ! உங்க பதிவை நான் பார்க்கிறேன் !
கேபிள் சங்கர் : நம்ம கூட்டணியிலே ஐக்கியமாயிடிங்க !!
starjan : உங்க விமர்சனத்தை பார்க்காம நான் படம் பார்க்கிறதே இல்ல . starjan : இன்னக்கி எதை பற்றி மீட்டிங் ?...
சுரேஷ் : யாருக்கு தெரியும் ? , எதோ கூப்பிட்டாங்க வந்தேன் !.
நர்சிம் : விஷயத்துக்கு வாங்கப்பா. கருத்தரங்குன்னா ஒரு எக்ஸ்பர்ட் அதப்பத்தி பேசுனா நல்லாயிருக்கும்.
முரளிகண்னன் : மாயாபஜார்ல ரங்காராவ் கல்யாண சமையல் சாதம்னு சாப்பாட்டப் பத்தி பாடியிருக்காரு. அவரை கூப்பிடுவோம்.
அப்துல்லா : அண்ணே, கருத்தரங்கு சொர்க்கத்தில இல்லை.
ஆதி : இவருக்குல்லாம் யாருய்யா கால் போட்டது?.
நர்சிம் : பதிவர்களைத் தாண்டி பொது மக்களையும் நாம சுண்டி இழுக்கணும். அப்பதான் சமுதாயத்துக்கு நல்லது. மக்களை எப்படி அதிகம் வரவைக்கிறது? புருனோ : அப்பல்லோ சீப் டயட்டீசியன் எனக்குத் தெரிஞ்சவருதான். அவரை கூப்பிடுவோம். அவரும் ஒரு வலைப்பதிவர்தான். நிச்சயம் வருவார்.
starjan : ப்ருனோ , பெரிய ஆளுதான் !
அப்துல்லா : உங்க பதிவில் பாப்பா படம் போட்டிருந்ததால் ,நீங்க பப்பான்னு நினைத்தேன் .
starjan : என்னை ஐ வச்சி காமெடி கீமடி ஒன்னும் பண்ணலியே ?.
லக்கிலுக் : சே சே, சிரியசாக தான் சொல்லுறோம் .
முரளிகண்ணன் : பொன்னுச்சாமி, அஞ்சப்பர் கடையில இருந்து புரோட்டின் டயட் ஏற்பாடு பண்ணலாம். நல்ல அட்ராக்‌ஷன் இருக்கும்.
சுரேஷ் : அது என்ன ? .
starjan : அது ஏதாவது சாப்பாடு ஐட்டமா இருக்கும் .
அப்துல்லா : ஏண்ணே மிச்சம் விழுந்தா எடுத்துக்கிட்டு போயிரலாம்னு பார்க்குறீங்களா?.
லக்கிலுக் : ஸ்னாக்ஸ்,காபி எல்லாம் பதிப்பகத்து தலையில கட்டீரலாம். கூட்டம் சேர்க்கிறதுக்கு கவர்ச்சி இருந்தா நல்லயிருக்கும்.
முரளிகண்ணன் : ஸ்ரேயா,நயன் எல்லாம் நல்லா ஸ்லிம்மா இருக்காங்க. அவங்களை கூப்பிட்டு டிப்ஸ் கொடுக்கச் சொன்னா.
அப்துல்லா : நல்ல வேளை இந்த ஆளு டீ ஆர் ராஜகுமாரி, சில்க்ன்னு ஆரம்பிக்கலை.
அதிஷா : பாஸ், இவங்கெல்லாம் பப்ளிக் பங்சன்னா ரொம்ப கிளாமரா வருவாங்க. ஏதாச்சும் கிழம் இவங்களப் பார்த்து மூச்சு விட மறந்துட்டா என்ன பண்றது?.
கேபிள் சங்கர் : பதிப்பகம் பக்கத்திலதான கமல் வீடு. அவர கூப்பிட்டா?. நர்சிம் : அப்ப ஒரு ட்ரான்ஸ்லேட்டரையும் நாம ரெடி பண்ணனும்.
starjan : லக்கி ,என்ன பண்ண போறீங்க !.
லக்கிலுக் : 85 வயசிலயும், டெல்லிக்கும் சென்னைக்கும் சண்டிங் அடிக்கிறவரு எங்க தலைவர். அவரக் கூப்பிட்டா நல்லாயிருக்கும்.
அதிஷா : ஏன் ஜெயலலிதா கூடத்தான் ஸ்ட்ராங்கா இருக்காங்க.
நர்சிம் : பதிவுலக அரசியலே தாங்க முடியல. இதில நிஜ அரசியல் வேறயா?. starjan : அப்ப நாம இரண்டு பேரையும் கூப்பிடுவோம் , என்ன சரியா ?.

பின்னர் நாங்க அனைவரும் தமிழ்மணத்தில் நல்ல பதிவை போடுவது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தோம் . அப்போது திடீரென முரளிக்கண்ணன் ஒரு கட்டையை எடுத்து வந்து " நாங்க எவ்வளவு காலமா பதிவு போட்டுக்கிட்டு இருக்கோம் .,எங்களையே நீ கலாய்க்கிறாயா !" என்று அடிக்க வர ஆ அம்மா ஐயோ !! என்று அலறினேன் .
கண் விழித்து பார்த்தால் சவுதி யில் தூங்கி கொண்டு இருந்தவனை என் நண்பன் எழுப்பிக்கொண்டு இருந்தான் .
அட சே இது வெறும் கனவா
இந்த தடவை ஊருக்கு போனால் இவங்களை எல்லாம் சந்திக்கணும் ......

Post Comment

Thursday, May 21, 2009

புதிய பாரத பிரதமர்-மன்மோகன்சிங்

பிரதமர் மன்மோகன்சிங் இரண்டாவது முறையாக பிரதமர் ஆகிறார் .
அவர், தொடர்ந்து நல்லாட்சியை வழங்குவார் என்று இந்தியா மக்கள் எதிர் பார்கின்றனர் .
அவர் ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் வரும் என்று நினைக்கின்றனர் .
நாளை புதிய அரசு அமைய உள்ளது .
அவரது ஆட்சி ஐந்தாண்டு காலம் நீடிக்க,
நாம் எல்லோரும் வாழ்த்துவோம் .

Post Comment

Friday, May 15, 2009

திக் திக் திக் .....

நாம ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையில் நிறைய சுவாரசியமான சம்பவம் நடந்திருக்கும் . அதை நினைத்து பார்த்தோமானால் ரொம்ப ஜாலியா இருக்கலாம் . அல்லது ரொம்ப வருத்தமா இருக்கலாம் . அல்லது ஒரு படிப்பினையா கூட இருக்கலாம் .

அல்லது ரொம்ப திகில் அனுபவமா கூட இருக்கலாம்.

அப்படி ஒரு திகில் அனுபவம் எனக்கு நடந்திருக்கு. அது என்னனா....
நான் அப்போது ஒரு மோட்டார் வாகன கம்பனியில் வேலை பார்த்து வந்தேன் . நான் அடிக்கடி வெளியூர் செல்வதுண்டு . நான் என்னுடைய தலைமை அலுவலகத்க்கு மோட்டார் சைக்கிளில் செல்வதுண்டு .

நான் முதலில் ஒரே பாதையில் செல்வதுண்டு . பின்னர் அதே பாதையில் தான் வருவேன், போவேன் . அது குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு மேலாகும் . அந்த பாதை கிராமங்கள் வழியாகத்தான் செல்லும் .

எனக்கு தெரிந்த ஒருவர் "இன்னொரு வழி உள்ளது , அதில் சென்றால் பயண நேரம் குறைவாக வரும்" என்று சொன்னார் .

ஒருநாள் போகும்போது நான் வழக்கமான வழியில் சென்றேன் . வரும்போது

அவர் சொன்ன வழியில் செல்வோமே என்று தோன்றியது . நான் வரும்போது மணி மாலை ஐந்தை தாண்டிவிட்டது . கிராமங்களின் அழகாய்பார்த்து கொண்டே வந்தேன் . பாதி வழியை தாண்டி வந்து கொண்டிருந்தேன் .

இருட்ட ஆரம்பித்திருந்தது . திடீரென ஒருவர் கையை காட்டி நிறுத்தினார் .

நான் வண்டியை நிறுத்தி என்ன என்று கேட்டேன் . அவருக்கு ஐம்பது வயதிருக்கலாம் . அவர் "தம்பி இந்த ஊரில் அவ்வளவாக பஸ் வசதி கிடையாது , நான் பக்கத்து ஊருக்கு போயி, அங்கிருந்து வேற ஊருக்கு மினி பஸ் பிடித்து போகனும் . தயவுசெய்து என்னை ஏற்றி கொண்டு போங்க "என்று கேட்டார் .

அது நான் போகும் வழி தான் . எனக்கு பயம் , ஏன்னா அது கிராமம், சுற்றி வெறும் காடுதான் . நான் அவரிடம் " இல்லயா நான் முன்பின் தெரியாத ஆளை ஏற்றினால் எனக்கு ஆபத்து ஏதும் வரலாம் , அதனால் நான் ஏத்தமட்டேன் " என்று சொன்னேன் .அவர் தம்பி எப்படியாவது ஏத்தி கொண்டு போங்க என்று கெஞ்சுகிறார் .

என்ன செய்வது தமிழனுக்கு தான் இலகிய‌ மனசயிற்றே !

சரியென்று அவரையும் ஏற்றி வந்துகொண்டிருந்தேன் . நன்றாக இருட்டி விட்டது . அவர் சொன்ன ஊர் வந்தது . அவரை இறங்கசொன்னேன் .

உடனே அவர் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு "அய்யய்யோ தம்பி நான் போகவேண்டிய பஸ் போயிவிட்டதே ! என்ன செய்ய" என்று கேட்டார் . நானும் என்ன செய்ய என்று கேட்டேன் . "ஆமா நீங்க எங்க போறீங்க" என்று அவர் கேட்டார் .நானும் போக வேண்டிய ஊரை சொன்னேன் ."அட அங்கதான் நானும் போறேன்" என்றார் அவர் . சரி வேறென்ன செய்ய என்று அவரையும் ஏத்திகொண்டு வந்தேன் .

பிறகு கொஞ்ச தூரம்போன உடன் எனக்கு போக வேண்டிய பாதை மறந்துவிட்டது .எனக்கு ஒரே பயம் . . இருட்டாவேற இருக்கு ,பாதையும் தெரியவில்லை . ஆனால் நான் அவரிடம் அதை காட்டிக்கொள்ள வில்லை .
நான் அவரிடம் பேசிக்கொண்டே வந்தேன் . அவர் எங்க ஊரில் உள்ள கோவில்கொடை விழாவுக்கு போகிறாராம் . நீங்க எனக்கு ரொம்ப உதவி செய்றிங்க ரொம்ப நன்றி என்றார் .

"நான் உங்க நிலைமையில் இருந்தால் வண்டியில் தெரியாத ஆளை ஏத்தி இருக்கமாட்டேன்" என்றார் . எனக்கு பாதை மறந்ததால் பாதை மாறி சென்றேன் .
உடனே அவர் தம்பி இப்படிபோகனும் என்று வழி கட்டினார் . நானும் வழி தெரிந்தமாறியே காட்டிக்கொண்டேன் . அவர் சொன்ன வழியில் சென்றேன் . ஒருவழியாக ஊர் வந்துசேர்ந்தேன் .

அவர் என் கையை பிடித்து ரொம்ப நன்றி என்றார் . நானும் அவருக்கு மனதில் நன்றி சொன்னேன் .
பின் வீட்டுக்கு வந்து இந்த சம்பவத்தை நினைத்துபார்த்தேன் . அந்த பெரியவர் மட்டும் வரவில்லைஎன்றால் என் நிலைமை என்னாயிருக்கும் ???....
மனம் திக் திக் ........

Post Comment

Sunday, May 10, 2009

அம்மா இங்கே வா வா !!!.....

என்னை பெற்றெடுத்து அன்போடு வளர்த்து ஆளாக்கிய என் அம்மாவுக்கு இந்த இடுகையை சமர்ப்பணம் செய்கிறேன் .

அம்மா

இந்த வார்த்தையை கொஞ்சம் உற்று பாருங்கள் . இதுவெறும் வார்த்தை அல்ல

ஒரு உயிரின் தியாகம் , மத்தவங்களுக்காக தன்னை அர்ப்பணம் செய்த ஒரு பெண்ணின் வாழ்க்கை .

ஒரு பெண் வளர்ந்து பெரியவளாகி தன் கணவனை மணந்து அம்மா என்ற அந்தஸ்தை அடைகிறாள் .

தன் குழந்தை தன்னை அம்மா அழைத்தவுடன் அவள் அடைகின்ற சந்தோசம் இருக்கிறதே ! அப்பப்ப என்ன ஒரு ஆனந்தம் !!!!. அதை சொல்ல வார்த்தையே இல்ல இல்ல இல்ல .....

தான் எத்தனை கஷ்டங்களை அனுபவித்தாலும் தன் குழந்தை முகம் பார்த்து பேசும் தாய்க்கு நிகர் உண்டோ ?...

ஒரு குழந்தைக்கு தெரிகின்ற முதல் முகம் அம்மா . முதன்முதலில் மத்தவங்களை அறிமுகம் செய்து வைக்கிற முதல் முகமும் அம்மாதான் !!.

திரைப்படத்திலும் அம்மாவை மையபடுத்திதான் கதைகளை திரைப்படம் எடுத்து வெற்றியும் பெறுகின்றனர் .

தன் குழந்தையை சீரும் சிறப்பாக வளர்த்து , தன் குழந்தைக்கு நேர் வழியை காட்டும் அம்மா அம்மாதான் !!.

தன் குழந்தைக்கு ஏற்ற வாழ்க்கை துணையை அமைத்து கொடுக்கிறதும், அம்மா அம்மாதான் !!!..

அதை குழந்தை கடேசி காலத்தில் தன்னை உதாசினம் செய்தலும் தன் குழந்தையை எண்ணி பேர் உவகை அடையும் முதல் உயிரும் அம்மா அம்மாதான் !!!.

அம்மா இங்கே வா வா !!!.....

Post Comment

Wednesday, May 6, 2009

ரோஜாவின் பயணம் எங்கே !

இந்த ரோஜாவின் பயணம் எங்கே !!!
என்னவளின் கூந்தலை நோக்கி !

Post Comment

Tuesday, May 5, 2009

என்னை தெரியுமா

மனிதன் என்பவன் சதையும் உயிரும் சேர்ந்த ஒரு எந்திரம் . மனிதனிடம் பல விசயங்கள் உள்ளன . ஒவ்வொரு விசயத்தையும் நாம பார்த்தால் வியப்பாக இருக்கும் . மூளையை எடுத்துகிட்டால் நிறைய விஷயம் உண்டு . ஒரு வேலையை ஒழுங்காக செய்ய தெரியாவிட்டால் " ஏய் மூளை இருக்கா உனக்கு!" என்று தான் திட்டுவோம் . மூளை இல்லைஎன்றால் ஒன்னுமே இல்லை . ஒருத்தர்கிட்ட இரண்டு வாழைப்பழம் வாங்கி வரச்சொன்னால் ஒன்னை சாப்பிட்டுவிட்டு ஒன்றை தந்து விட்டு "அதான் இது" என்று சொல்லக்கூடிய கில்லாடிகள் உண்டு . சிலபேர் ஒவ்வொரு செயலுக்கும் கேள்வி கேட்டுகொண்டே இருப்பார்கள் . சிலபேருக்கு எதுவானாலும் எரிச்சல் வரும் . சிலபேருக்கு முன் கோபம் நிறைய இருக்கும் ,ஆனால் பின்னால வருத்தப்படுவார்கள் . சிலபேர் ஒன்னும் இல்லாத விஷயத்தை பெருசாக்கிருவாங்க . சிலபேர் ஒன்னும் இல்லாத விசயத்துக்கு வீண்விவாதம் செய்வாங்க . சிலபேர் ரொம்ப அமைதியாக இருந்து காரியத்தை சாதித்துவிட்டு போவாங்க . சிலபேர் ரொம்ப அமைதியாக பேசுவாங்க . சிலபேர் ரொம்ப சத்தமாக பேசுவாங்க . சிலபேர் தன்னோடு உள்ளவர்களுக்கு ரொம்ப மதிப்பு கொடுப்பாங்க . சிலபேருக்கு தான் என்ற எண்ணம் நிறைய இருக்கும் . அடுத்தவனை எப்படி கவிழ்க்கலாம் என்பதை பற்றி நிறைய யோசிப்பாங்க . சிலபேருக்கு உடம்பு ரொம்ப வலிமையாக இருக்கும் . புள் தடுக்கி செத்து போவாங்க . சிலபேர் சாதாரணமாக ரொம்ப நாள் இருப்பாங்க . ஒருவர் ரோட்டில் அடிபட்டு இருந்தாலும் பார்த்துவிட்டு பேசாம போகக்கூடிய சூழ்நிலைதான் உள்ளது . இன்னும் நிறையபேரை நாம் பார்த்து இருப்போம் . இதல்லாம் மனித இயல்புதான் . அவங்களை திருத்தனும் என்றால் முடியாத ஒன்று . அவங்களா திருந்தனும் ......

Post Comment

Monday, May 4, 2009

என்னை தெரியுமா

மனிதன் என்பவன் சதையும் உயிரும் சேர்ந்த ஒரு எந்திரம் . மனிதனிடம் பல விசயங்கள் உள்ளன . ஒவ்வொரு விசயத்தையும் நாம பார்த்தால் வியப்பாக இருக்கும் . மூளையை எடுத்துகிட்டால் நிறைய விஷயம் உண்டு . ஒரு வேலையை ஒழுங்காக செய்ய தெரியாவிட்டால் " ஏய் மூளை இருக்கா உனக்கு!" என்று தான் திட்டுவோம் . மூளை இல்லைஎன்றால் ஒன்னுமே இல்லை .

ஒருத்தர்கிட்ட இரண்டு வாழைப்பழம் வாங்கி வரச்சொன்னால் ஒன்னை சாப்பிட்டுவிட்டு ஒன்றை தந்து விட்டு "அதான் இது" என்று சொல்லக்கூடிய கில்லாடிகள் உண்டு . சிலபேர் ஒவ்வொரு செயலுக்கும் கேள்வி கேட்டுகொண்டே இருப்பார்கள் .

சிலபேருக்கு எதுவானாலும் எரிச்சல் வரும் . சிலபேருக்கு முன் கோபம் நிறைய இருக்கும் ,ஆனால் பின்னால வருத்தப்படுவார்கள் . சிலபேர் ஒன்னும் இல்லாத விஷயத்தை பெருசாக்கிருவாங்க . சிலபேர் ஒன்னும் இல்லாத விசயத்துக்கு வீண்விவாதம் செய்வாங்க .

சிலபேர் ரொம்ப அமைதியாக இருந்து காரியத்தை சாதித்துவிட்டு போவாங்க . சிலபேர் ரொம்ப அமைதியாக பேசுவாங்க . சிலபேர் ரொம்ப சத்தமாக பேசுவாங்க .

சிலபேர் தன்னோடு உள்ளவர்களுக்கு ரொம்ப மதிப்பு கொடுப்பாங்க . சிலபேருக்கு தான் என்ற எண்ணம் நிறைய இருக்கும் . அடுத்தவனை எப்படி கவிழ்க்கலாம் என்பதை பற்றி நிறைய யோசிப்பாங்க .

சிலபேருக்கு உடம்பு ரொம்ப வலிமையாக இருக்கும் . புள் தடுக்கி செத்து போவாங்க . சிலபேர் சாதாரணமாக ரொம்ப நாள் இருப்பாங்க . ஒருவர் ரோட்டில் அடிபட்டு இருந்தாலும் பார்த்துவிட்டு பேசாம போகக்கூடிய சூழ்நிலைதான் உள்ளது .

இன்னும் நிறையபேரை நாம் பார்த்து இருப்போம் . இதல்லாம் மனித இயல்புதான் . அவங்களை திருத்தனும் என்றால் முடியாத ஒன்று .

அவங்களா திருந்தனும் ......

Post Comment

Sunday, May 3, 2009

மூன்றாம் விதி - ஆப்பிள் போல ...


ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு .

ஆப்பிள் நியூட்டனுக்கு மிகவும் பயன்பட்டதால் இந்த படம் ஆப்பிளுக்கு நன்றி .

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்