உன்னோடு ஒரு பயணம்..!
ஒவ்வொருமுறையும் ஏதோ ஒன்று
இழுத்து செல்கிறது உன் அருகாமையை தேடி..!
பயணத்தில் தேடித்தேடி
அலுத்துப்போகின்றேன்
மறுபடியும் மறுபடியும் இம்சிக்கிறாய்..!
விழிகளுக்குள் காட்சிகள் விரிய
உன்னோடு பயணித்தது ஒளியும் ஒலியுமாய்..!
மீண்டும் சந்திக்கும் தருணத்தை
விழா எடுக்க முயற்சிக்கிறேன்
என் நினைவுகளும்
விரைந்தோடும் காலமும்
உனக்காக வீற்றிருக்கும் அன்பே..!
என் கைக்கோர்த்தபடி நீ
சுற்றிவரும்போது வியந்து வியந்து
ஒவ்வொன்றையும் நீ கேட்கும்போது
நான் விளக்கும் அழகினை
மெய்மறந்து ரசித்தது
இன்னும் மறையவில்லையடி அன்பே..!
உன் செல்ல பொய்க்கோபங்களை
காணாது அங்குமிங்கும் தேடுகின்றேன்
விண்ணில் தெரியும் நட்சத்திரங்கள்
மினுமினுக்கின்றன
உன் அழகிய முகமும்
மின்னுகின்றதா என
மெய்மறந்து நிற்கின்றேன்
கடும்குளிரையும் பொருட்படுத்தாது..!
ReplyDeleteவணக்கம்!
பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!
நன்றி சார்., உங்களுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
Deletesuper...phai...
ReplyDeletesuper..phai...
ReplyDeleteமிக்க நன்றி பாய்.
Deleteகவிதை நல்லாயிருக்கு ஸ்டார்ஜன்.கவிதையும் மின்மினி போல் ஜொலிக்கிறதே!
ReplyDeleteபாராட்டுக்கு மிக்க நன்றி ஆசியாக்கா.
Deleteகாதல் ஏக்கம் கவிதையின் அழகு !
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteமாஷா அல்லாஹ் அருமையான
ReplyDeleteபதிவு தொடரட்டும் உங்களது பனிகள்
காதலில் ஏக்கம் கவிதையில் தெரிகிறது.
ReplyDeleteஅருமையான கவிதை ஸ்டார்ஜன்.