நான் கண்டதில் இப்படியும் சிலர்
அவன் இவனை குற்றம் சொல்வதும்
இவன் அவனை குற்றம் சொல்வதும்
இழிவாய் தெரியவில்லை உங்களுக்கு..
எத்தனையோ இயக்கங்களாய் பிரிந்து
ஒருத்தனை ஒருத்தன் குறைசொல்லும் நேரத்தில்
அத்தனையும் ஒன்று கூடினால்,
பிரச்சனை எதுவுமில்லையே..
உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி
எத்தனையோ பேர் உள்ளனர்
நாட்டிலும் உன் வீட்டிலும்.,
அவர்களை பற்றிய சிந்தனை
இல்லை உனக்கு., வீண்விவாதங்களோடு
அடித்துக்கொள்வதற்கு மட்டும்
இத்தனை நேரம் எதற்கு?!
காலநேரத்துடன் சேர்ந்து
கரையுதடா உன் வாலிபமும்
ஆனால் ஒற்றுமையை மட்டும்
கடைபிடிக்கவில்லை எப்பொழுதும்
அல்லாஹ், ரசூல் காட்டித்தராத
விஷயங்களில் தர்க்கம் செய்தே
தரம் கெட்டு போனாயடா
என்னருமை சகோதரா..
ஒரே ஒரு நிமிசம்
புரட்டியாவது பாராடா
அருள்மறையாம் திருமறையை
பிறகு மாற்றிக்கொள்வாயடா
உன் எதிர்மறையை
காசை கொடுத்து வாழும் நெறியை
நாசுக்காக கற்பிக்கும் இறைவனை
தூசாக எண்ணி துச்சமென நினைத்து
சொகுசு வாழ்க்கைக்கு விலை போனாயடா..,
ஆனால் ஒன்றே ஒன்று நிச்சயம்.,
இதெல்லாம் ஒருகணமேனும்
திரும்பிப்பார்க்கும் வேளை - இறைவன்
திரும்ப அழைத்துக்கொள்வான்
திரும்பமுடியாத இடத்துக்கு...
Post Comment
டெஸ்ட்
ReplyDeleteஆஹா அருமையாக சொன்னீர்கள் நண்பா...
ReplyDeleteஉடனடியாக திருத்திக்கொள்வது நல்லது...
ReplyDeleteவணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
ReplyDeleteVillas In Trivandrum