Pages

Sunday, January 15, 2012

பொங்கல் நல்வாழ்த்துகள்

பொங்கலோ பொங்கல்

புத்தரிசியும் புதுப்பானையும்
போட்டியிட்டு பொங்கலிட‌
சந்தோசமும் பூரிப்பும் பெருமிதமிட‌
இவ்வாண்டும் மகசூல் அதிகமாகிட‌
எங்கள் வாழ்வும் வளமும் பெருகிட‌
மங்களமாய் வசந்தம் வீச
குலவையிடுவோம்

பொங்கலோ பொங்கல் என்று!!

உழக்கரிசி நெல்லுமணி
பல கோட்டைகளாக
உருவெடுத்திட‌
உண்ணாமல் உறங்காமல்
கண்ணிமை போல‌
களத்துமேட்டினில் காத்த
உரமிட்டு உரமிட்டு
உரமேறிய கரங்களும்
சொல்லுதே

பொங்கலோ பொங்கல் என்று!

தன் பசி துறந்து பிறர்
பசி நீக்கும் மருத்துவனாய்
உழைப்பின் பெருமையை
உலகறிய செய்த‌
விவசாயியே! என்றும் நீ வாழியவே!

என்றும் உங்கள் வாழ்வினில்
வசந்த ஒளிவீசிட‌
வாழ்த்துதே எங்கள் மனம்

என் மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

*****

இனிய பொங்கல் திருநாளில் எல்லா வளமும் பெற்று இந்த தமிழ் புத்தாண்டு இனிய புத்தாண்டாக மலர இறைவனிடம் பிரார்த்திப்போம் .

அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

Post Comment

9 comments:

  1. பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வணக்கம்....

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு.அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

    பொங்கல் கவிதை ரொம்ப நல்லாருக்கு.

    ReplyDelete
  7. அருமையான கவிதை வாழ்த்துகள்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  8. வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்!!!!!

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்