முதல்முறை என் விழிகள்
தேடியது உன் வரவை நோக்கி!
அவள் வருவாளா என மனம்
பட்டாம்பூச்சிகளாய் சிறகடிக்க
தூரத்தில் இருள் விலக
அமைதி அலறி அடித்து ஓட!
அங்கே ஒரு ஒளியும் ஒலியும்
அரங்கேறியது.
எல்லோரும் காண ஒரு அழகு
தேவதையாய் மின்னினாய் என் அருகாமையில்!
உன் முதல் பரிசம் ஆயிரமாயிரம்
ஆனந்த ஊற்றுகள் பொங்கிட
நான் மெய்மறக்கையில்
ஆச்சர்யமானேன் எல்லோருக்கும்!
உன் அருகாமை என்னை இம்சிக்க
என்னைப்போலவே உன் வருகையை
ஆயிரமாயிரம் கண்கள் ஏங்குகின்றன!
மழையே! உன் வரவை எண்ணி!!
என்ன ஸ்டார்ஜன் எப்படி இருக்கீங்க?..
ReplyDeleteஎன்ன ஊர்ல மழை ஏதும் இருக்கா?.. நான் இருக்கும் ஹைதிராபாத்தில் கடந்த இரண்டு நாளா நல்ல மழை.. கவிதை ரசித்தேன்..
வாங்க ஸ்டீபன். எப்படிருக்கீங்க. நான் நலம். இங்க மழை (சென்னை) இல்லை. அதான் எல்லோரும் எதிர்பாக்குறாங்க.
ReplyDeleteசகோ. ஸ்டார்ஜன் எப்படியிருக்கீங்க? எல்லாரும் நலமாக இருக்கிறீர்களா?
ReplyDeleteகவிதை அருமை... வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்...
தொடர்ந்து எழுதுங்க...
வணக்கம் நண்பர்களே
ReplyDeleteஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்