Pages

Sunday, October 16, 2011

தொடரும் ஆரம்பமும்...


தொடர்கதையாய் தொடர்ந்திடும்
வாழ்வினில் விடுகதையாய்
இந்த (இந்திய) பயணம்
சில மாறா நினைவலைகளோடு
உலா வருதே...!

உற்று நோக்கி நலம்பல விசாரித்து
விருந்தோம்பலுடன் உண்டுறங்கி
கருத்துக்களை பகிர்ந்து
மகிழ்ச்சியை வெளியாக்கிய தருணங்களை
மறந்தும் இருக்கமுடியுமா?..

அருகில் இருக்கும்போது
சொல்லத் தோன்றாதது
தூரத்தில் தெரியும்
ஒளியைப்போல பிரகாசமாய்
கவியுடன்கூடிய உணர்வுகள்
பொங்கி பீறிடுகின்றன!

உன் அருகாமையை எண்ணியெண்ணி
ஏக்கங்கள் வாட்டும்போது
நீ காட்டிய அன்பும் அரவணைப்புகளால்
மனம் லேசாகுகிறதே..!
இப்போது நீ அருகில் இருப்பது
மாயையைத்தான் என்றாலும்
மனம் அதை விரும்புதே!

விடை சொல்லத் தெரியாத‌
கேள்விகள் ஆயிரம் உண்டு
விடைகள் மட்டும் காணாமல்
போய்விட்டது..!
தேடல்கள் தொடரட்டும்...!

,

Post Comment

17 comments:

  1. அருமையான தேடல் கவிதை வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  2. வாங்க மனோ

    தேடலை ஆரம்பிச்சி வச்சிட்டீங்களா.. :))

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  3. தேடல்கள் தொடரும் வரை வாழ்க்கையின் சுவாரசியமும் கூடவே தொடரும். வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. உன் அருகாமையை எண்ணியெண்ணி
    ஏக்கங்கள் வாட்டும்போது
    நீ காட்டிய அன்பும் அரவணைப்புகளால்
    மனம் லேசாகுகிறதே..!

    அழகு வரிகள்.
    அருமையான கவிதை.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. உன் அருகாமையை எண்ணியெண்ணி
    ஏக்கங்கள் வாட்டும்போது
    நீ காட்டிய அன்பும் அரவணைப்புகளால்
    மனம் லேசாகுகிறதே..!
    இப்போது நீ அருகில் இருப்பது
    மாயையைத்தான் என்றாலும்
    மனம் அதை விரும்புதே!//

    வெளிநாட்டில் வாழும் நமக்கு, நினைவுகள்தான் நிம்மதி இல்லையா....!!!

    ReplyDelete
  6. //உற்று நோக்கி நலம்பல விசாரித்து
    விருந்தோம்பலுடன் உண்டுறங்கி
    கருத்துக்களை பகிர்ந்து
    மகிழ்ச்சியை வெளியாக்கிய தருணங்களை
    மறந்தும் இருக்கமுடியுமா?..
    //

    ஷேக் நெகிழ்ச்சியாக உள்ளது கவிதை வரிகள்.

    ReplyDelete
  7. இன்னும் கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்கும், தெரியாதா பாஸ் :-))

    ReplyDelete
  8. வாங்க சேட்டைக்காரன் @ சுவாரசியமாத்தான் இருக்கு

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  9. வாங்க ரத்னவேல் அய்யா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  10. வாங்க மனோ @ ஆமா அதான் கொஞ்சம் ஆறுதல். என்ன செய்ய!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  11. தூரத்தில் தெரியும்
    ஒளியைப்போல பிரகாசமாய்
    கவியுடன்கூடிய உணர்வுகள்
    பொங்கி பீறிடுகின்றன!

    அருமையான தேடல்..

    ReplyDelete
  12. பிரிவும் தேடுதலும் இருந்தால் தான் வாழக்கை சுவாரசியமாயிருக்கும்.ஆரம்ப முதல் இது தொடரும் தானே!

    ReplyDelete
  13. வாங்க ஸாதிகாக்கா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  14. வாங்க ஜெய்லானி @ ஆமா.. அப்படித்தான் இருக்குது. சரியாகிடும்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  15. வாங்க ராஜேஸ்வரி @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  16. தேடல்கள் தொடரும் வரை வாழ்க்கையின் சுவாரசியமும் கூடவே தொடரும்...

    தொடரட்டும் தேடல்கள்.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்