Pages

Tuesday, January 3, 2012

விடிவெள்ளியாய் உதித்தவள்

சிறுவயதிலேயே உலகசாதனை புரிந்த நெல்லையை சேர்ந்த சிறுமியை பற்றி உணவு உலகம் சங்கரலிங்கம் சார் தன்னோட பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இதைப் படித்தததும் அந்த சிறுமியை பாராட்ட வார்த்தைகளே இல்லையெனலாம். சிறுவயதிலேயே கணனி தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களுக்கு பாடம்நடத்தும் திறமை உள்ள, ஐக்யூவில் சிறந்துவிளங்கும் இந்த சுட்டிப்பெண்ணின் வயது பதினொன்றுதான் ஆகிறது என்றால்
வியப்பாக
இருக்கிறதல்லவா.. ஆம். இந்த சிறுமியின் பெயர் விசாலினி.

ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!

வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.

வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே, பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.


15.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட
பாராட்டு சான்றுடன்
விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி.





கல்லூரியில் பயிலும் B.E., B.TECH மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள்.
சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர்.








இத்தனை
சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச்செய்தது. இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது.



உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின் தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

MCP (Microsoft Certified Professional)

CCNA (Cisco Certified Network Associate),

CCNA Security(Cisco Certified Network

Associate Security),

OCJP (Oracle Certified Java
Professional).

CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள் பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.




உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும்.

நன்றி:தகவல் பகிர்வு:திருமதி.சேதுராகமாலிகா மற்றும் http://www.visalini.com

வேண்டுகோள்:1)

ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில் பகிருங்கள்.


2) விசாலினியின் இ-மெயில் ஐ.டி: visalini2000@gmail.com. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!

****

இத்தனை சாதனைகளும் புரிய காரணமாய் அமைந்த ஊக்குவித்த பெற்றோர்களும் ஆசிரியர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இவள் இன்னும் பல சாதனைகள் புரிந்து உலக அரங்கினில் பெருமைப்படுத்தப்பட வேண்டும்.

விசாலினிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

சங்கரலிங்கம் சார் பதிவினை பார்க்க..

நன்றி சங்கரலிங்கம் சார்.

Post Comment

5 comments:

  1. சுட்டிப்பெண் விசாலினி பற்றிய பகிர்வுக்கு நன்றிகள் ஸ்டார்ஜன்.

    பலரும் அவளை பற்றி அறிய வேண்டும் என்ற ஆவலில் பதிவை வெளியிட்ட உங்கள் நல்உள்ளத்திற்கு என் வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  2. பகிர்விற்கு நன்றி சகோ.விசாலினிக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இணையத்தில் நீங்களும் சம்பாதிக்கலாம். நன்றி.

    ReplyDelete
  4. வாங்க கௌசல்யா @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  5. வாங்க ஆசியாக்கா @ ரொம்ப நன்றி. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்