Pages

Friday, May 15, 2009

திக் திக் திக் .....

நாம ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையில் நிறைய சுவாரசியமான சம்பவம் நடந்திருக்கும் . அதை நினைத்து பார்த்தோமானால் ரொம்ப ஜாலியா இருக்கலாம் . அல்லது ரொம்ப வருத்தமா இருக்கலாம் . அல்லது ஒரு படிப்பினையா கூட இருக்கலாம் .

அல்லது ரொம்ப திகில் அனுபவமா கூட இருக்கலாம்.

அப்படி ஒரு திகில் அனுபவம் எனக்கு நடந்திருக்கு. அது என்னனா....
நான் அப்போது ஒரு மோட்டார் வாகன கம்பனியில் வேலை பார்த்து வந்தேன் . நான் அடிக்கடி வெளியூர் செல்வதுண்டு . நான் என்னுடைய தலைமை அலுவலகத்க்கு மோட்டார் சைக்கிளில் செல்வதுண்டு .

நான் முதலில் ஒரே பாதையில் செல்வதுண்டு . பின்னர் அதே பாதையில் தான் வருவேன், போவேன் . அது குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு மேலாகும் . அந்த பாதை கிராமங்கள் வழியாகத்தான் செல்லும் .

எனக்கு தெரிந்த ஒருவர் "இன்னொரு வழி உள்ளது , அதில் சென்றால் பயண நேரம் குறைவாக வரும்" என்று சொன்னார் .

ஒருநாள் போகும்போது நான் வழக்கமான வழியில் சென்றேன் . வரும்போது

அவர் சொன்ன வழியில் செல்வோமே என்று தோன்றியது . நான் வரும்போது மணி மாலை ஐந்தை தாண்டிவிட்டது . கிராமங்களின் அழகாய்பார்த்து கொண்டே வந்தேன் . பாதி வழியை தாண்டி வந்து கொண்டிருந்தேன் .

இருட்ட ஆரம்பித்திருந்தது . திடீரென ஒருவர் கையை காட்டி நிறுத்தினார் .

நான் வண்டியை நிறுத்தி என்ன என்று கேட்டேன் . அவருக்கு ஐம்பது வயதிருக்கலாம் . அவர் "தம்பி இந்த ஊரில் அவ்வளவாக பஸ் வசதி கிடையாது , நான் பக்கத்து ஊருக்கு போயி, அங்கிருந்து வேற ஊருக்கு மினி பஸ் பிடித்து போகனும் . தயவுசெய்து என்னை ஏற்றி கொண்டு போங்க "என்று கேட்டார் .

அது நான் போகும் வழி தான் . எனக்கு பயம் , ஏன்னா அது கிராமம், சுற்றி வெறும் காடுதான் . நான் அவரிடம் " இல்லயா நான் முன்பின் தெரியாத ஆளை ஏற்றினால் எனக்கு ஆபத்து ஏதும் வரலாம் , அதனால் நான் ஏத்தமட்டேன் " என்று சொன்னேன் .அவர் தம்பி எப்படியாவது ஏத்தி கொண்டு போங்க என்று கெஞ்சுகிறார் .

என்ன செய்வது தமிழனுக்கு தான் இலகிய‌ மனசயிற்றே !

சரியென்று அவரையும் ஏற்றி வந்துகொண்டிருந்தேன் . நன்றாக இருட்டி விட்டது . அவர் சொன்ன ஊர் வந்தது . அவரை இறங்கசொன்னேன் .

உடனே அவர் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு "அய்யய்யோ தம்பி நான் போகவேண்டிய பஸ் போயிவிட்டதே ! என்ன செய்ய" என்று கேட்டார் . நானும் என்ன செய்ய என்று கேட்டேன் . "ஆமா நீங்க எங்க போறீங்க" என்று அவர் கேட்டார் .நானும் போக வேண்டிய ஊரை சொன்னேன் ."அட அங்கதான் நானும் போறேன்" என்றார் அவர் . சரி வேறென்ன செய்ய என்று அவரையும் ஏத்திகொண்டு வந்தேன் .

பிறகு கொஞ்ச தூரம்போன உடன் எனக்கு போக வேண்டிய பாதை மறந்துவிட்டது .எனக்கு ஒரே பயம் . . இருட்டாவேற இருக்கு ,பாதையும் தெரியவில்லை . ஆனால் நான் அவரிடம் அதை காட்டிக்கொள்ள வில்லை .
நான் அவரிடம் பேசிக்கொண்டே வந்தேன் . அவர் எங்க ஊரில் உள்ள கோவில்கொடை விழாவுக்கு போகிறாராம் . நீங்க எனக்கு ரொம்ப உதவி செய்றிங்க ரொம்ப நன்றி என்றார் .

"நான் உங்க நிலைமையில் இருந்தால் வண்டியில் தெரியாத ஆளை ஏத்தி இருக்கமாட்டேன்" என்றார் . எனக்கு பாதை மறந்ததால் பாதை மாறி சென்றேன் .
உடனே அவர் தம்பி இப்படிபோகனும் என்று வழி கட்டினார் . நானும் வழி தெரிந்தமாறியே காட்டிக்கொண்டேன் . அவர் சொன்ன வழியில் சென்றேன் . ஒருவழியாக ஊர் வந்துசேர்ந்தேன் .

அவர் என் கையை பிடித்து ரொம்ப நன்றி என்றார் . நானும் அவருக்கு மனதில் நன்றி சொன்னேன் .
பின் வீட்டுக்கு வந்து இந்த சம்பவத்தை நினைத்துபார்த்தேன் . அந்த பெரியவர் மட்டும் வரவில்லைஎன்றால் என் நிலைமை என்னாயிருக்கும் ???....
மனம் திக் திக் ........

Post Comment

11 comments:

  1. starjan
    படிக்கிற எனக்கே பக்குன்னு இருக்கு
    அனுபவிச்ச உங்களுக்கு எப்படி இருக்கும்.

    ஒரு திகில் கதை வாசித்த உணர்வு .

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி

    என்ன கடையில் கூட்டத்தை காணோமே!

    ReplyDelete
  3. கதை நல்லாயிருக்கு தல...

    நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும்..,

    ReplyDelete
  4. பின் தொடர்பவர் பட்டியல் இணையுங்கள் தல..,

    ReplyDelete
  5. சுரேஷ்

    வருகைக்கு நன்றி !

    இது நடந்த சம்பவம்

    கதை அல்ல !

    ReplyDelete
  6. நன்றி சுரேஷ்

    பின்தொடர்பவர்கள் பட்டியல் இணைத்து விட்டேன்

    தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  7. என்ன அடுத்த பதிவை காணோமே !!

    ReplyDelete
  8. சீக்கிரம் !

    உங்கள் ஓட்டை போடுங்க‌

    ReplyDelete
  9. அக்பர் ,
    வருகைக்கு நன்றீ

    விரைவில் .....

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்