Pages

Tuesday, April 20, 2010

செல்லாத நிமிடங்கள்...


நல்லா யோசனை
செய்தேன் நீ அம்மா
வீட்டுக்கு போவதற்கு
பெண்ணே உனக்கு
சந்தோசமென்றால்
எனக்கும் ஓகே
என் யோசனை
நேரம் ஒரே நிமிடம்


அழைத்தேன் உன்னை
எங்கம்மா வீட்டுக்கு
எனக்கு சந்தோசம்
ஏற்பட; ஆனால்
உன் யோசனை
நேரமோ பல நிமிடங்கள்

யோசிக்க யோசிக்க
நிறைய வழிகள்
தோன்றலாம் உனக்கு
ஆனால் எனக்கோ
உன் யோசனை
நல்லதாக வேண்டுகிறேன்
குழப்பம் ஏற்படாமல்..


மேலே நான் உயர
உன் விருப்பம்
வாய்ப்புகளை தேடி நான்..
விருட்சமாய் நீ தந்த
நம்பிக்கையுடன் நான்..

நேரம் காலம் பார்க்காமல்
எல்லாம் உன் நினைவுகள்
நேரத்தோடு நான்
செய்ய நினைக்கும்
வேலைகளை மறந்து...

கவி எழுதினேன்
உன் நினைவுகளோடு
வித்யாசம் எதுவும்
தெரியல எனக்கு..
விழிகள் மூடிய
இரவினில்..


வருவாய் என நீயும்
காத்திருப்பது எனக்காக‌
உன்னை நோகடிக்காமல்
சாக்குபோக்கு சொல்ல
மனம் நாடவில்லை
காலநேரம் கூடி
வருதா என‌
கடிகாரத்தை
நோக்குகிறேன் தினமும்..


,


Post Comment

28 comments:

  1. படிச்ச எனக்கே ரொம்ப ஃபீலிங்க இருக்குன்னா... பாவம்தான். வெளி நாட்டுல உள்ள‌வங்க ஊருக்கு செல்லும் அந்த நிமிடத்தைதான் எதிர்பார்த்து காத்திருக்கோம்.

    கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.

    ReplyDelete
  2. ரசிக்கக்கூடியவண்ணம் அமைந்த கவிதை.
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. அருமையான ரசிக்ககூடிய கவிதை.. நல்லாருக்கு ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  4. மனதின் ஏக்கம் முழுதையும் கொட்டி எழுதியிருக்கிறீர்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  5. தாய் மண் நினைவா...நல்லா இருக்கு..

    ReplyDelete
  6. நிமிடங்கள், வருடங்களாய் இருக்கிறது போல,
    ஊருக்கு சென்று வாருங்கள் நண்பா.

    ReplyDelete
  7. அழகான கவிதை; உணர்ச்சிகளை இடையிடையே புகுத்தி சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  8. க‌விதை ந‌ல்ல‌ இருக்கு ஸ்டார்ஜ‌ன்..

    ReplyDelete
  9. அருமையான கரு தல...ஃபீலிங்கோட இருக்கு...

    ஆனா கவிதையா சரியா செட் ஆகாத மாதிரி எனக்குள் ஓரு உணர்வு.

    நண்பன்ங்கற உரிமைலதான் தல இதெல்லாம் சொல்றேன்.. தப்பா எடுத்துக்காத.

    :))

    ReplyDelete
  10. உணர்வுகளை கவிதையாக கொட்டிவிட்டால் மனம் இலேசாகிவிடும் ஸ்டார்ஜன்.அருமை.

    ReplyDelete
  11. ‌கவிதை நல்லாயிருக்கு ந‌ண்பா

    ReplyDelete
  12. எளிமையான நடையில் மிகவும் அழகான கவிதை .
    பகிர்வுக்கு நன்றி !
    தொடருங்கள் மீண்டும் வருவேன் .

    ReplyDelete
  13. வாங்க அக்பர் @ ரொம்ப நன்றி

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  14. வாங்க நிஜாமுதீன் @ நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்

    வாங்க மின்மினி @ நன்றிங்கோ

    ReplyDelete
  15. வாங்க ஹேமா @ நன்றி ஹேமா

    ReplyDelete
  16. வாங்க ஸ்ரீராம். @ ஆமா நன்றி நண்பா

    ReplyDelete
  17. வாங்க சைவகொத்துப்பரோட்டா @ நன்றி நண்பா..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  18. வாங்க சேட்டை @ பாராட்டுக்கு நன்றி

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  19. வாங்க ஸ்டீபன் @ தொடர்ந்து கொடுத்துவரும் ஆதரவுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல..

    ReplyDelete
  20. வாங்க கண்ணா @ நன்றி பாராட்டுக்கு...

    இந்த விஷயம் யோசிக்கவேண்டியது... கவனிக்கிறேன்.. நன்றி நண்பா சுட்டிக்காட்டியதுக்கு...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  21. வாங்க ஆசியா @ நன்றி பாராட்டுக்கு.. தொடர்ந்து வாங்க‌

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  22. வாங்க இர்ஷாத் @ நன்றி பாராட்டுக்கு...

    தொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இர்ஷாத்

    ReplyDelete
  23. வாங்க கரிசல்காரன் @ நன்றி பாராட்டுக்கு..

    ReplyDelete
  24. வாங்க பனித்துளி சங்கர் @ நன்றி பாராட்டுக்கு..

    தொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா..

    ReplyDelete
  25. வாங்க அருணா @ நன்றி பாராட்டுக்கு..

    ReplyDelete
  26. கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.

    ReplyDelete
  27. வாங்க குமார்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்