Pages

Wednesday, June 17, 2009

என் கேள்விக்கு.... என்ன பதில் !!

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?...

இது நானா கொடுத்துகிட்ட பெயர் ... இதுவும் நல்லாத்தான் இருக்கு ...

2. உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?.....

என்ன இப்படி கேட்டுபுட்டிங்க ... பிடிக்காமலியா...

3. கடைசியாக அழுதது எப்போது?...

எதுக்குங்க அழுவனும் ..... என் ராஜா ....அழுவக்கூடாது என்ன சரியா ....தைரியமா இருக்கோனும் .... அம்மா சொன்னது !! ..

4. பிடித்த மதிய உணவு?...

சவுதி யில் ஓட்டலுக்கு போனா கப்சா தான் ... நான் சமைக்கிறது தான் பிடிக்கும் ...
5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?....

எல்லோரும் நம் நண்பர்களே ....

6. கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா...

அருவியில குளிக்கப் பிடிக்கும் ..

7. ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?...

ஒருவரைப் பார்க்கும் போது எதையும் கவனிப்பதில்லை. ஒருவரிடம் பழகும் போது அவர் பேசும் கருத்துக்களை நன்றாக கவனித்து பதில் கூறுவேன்.
நான் சொல்லும் விஷயத்தை புரிந்து கொள்கிறாரா என்பதை, அவருடைய முக உடல் பாவனைகளை பார்ப்பேன்...

8. உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?...
பிடிக்காத விஷயம் ..
ஒன்னும் இல்லாத விஷயத்தை பற்றி வளவளவென்று பேசுவது..
பிடிச்ச விஷயம் ...
எது செய்தாலும் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் ...

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?..
மனதில் ஏற்படும் கோபத்தை ஓரிரு நாட்களுக்கு மேல் நீட்டிக்காதது. மனைவி கிட்ட பிடிக்காததுன்னு எதாவது இருக்க முடியுமா? இந்த கேள்வியே தப்பாச்சே:)
எல்லாமே பிடித்தது...

10. இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?...
அப்படி எதுவும் இல்லை....
நல்ல தலைவர்கள் கூட இல்லியே என்ற வருத்தம் தான் ....

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?..
ப்ரெளன் கலர் சட்டையும் சிமெண்ட் கலர் பேண்டும்.....


12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?...
என்ன !! உங்களை பார்த்துக்கொண்டு ...
இளையராஜா பாட்டை கேட்டுக்கொண்டு இருக்கேன்.....

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?.....
புளுக்கலர்

14. பிடித்த மணம்?.....
மல்லிகைப்பூ மணம்.....
அப்புறம் தமிழ் மணம்..... எப்பூடி.......

15. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?.....
நோ கமெண்ட்ஸ்....

16. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?.....
நோ கமெண்ட்ஸ்....

17. பிடித்த விளையாட்டு?.....
கிரிக்கெட்.

18. கண்ணாடி அணிபவரா?......
இல்லை .

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?.....

நல்ல கதை உள்ள படம் ,காமெடி ,காதல ,படங்கள் பிடிக்கும் ...

20. கடைசியாகப் பார்த்த படம்?...

பசங்க.

21. பிடித்த பருவ காலம் எது?...
வசந்த காலம்.

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?....

. சுஜாதாவின் ஏன் எதற்கு எப்படி.

23. உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?.....
வாரம் ஒரு முறை ....

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?.....
பிடித்தது நிசப்தம் .....
பிடிக்காதது இரைச்சல் ..

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?.....

வேரங்கே !!! சவுதி அரேபியாவுக்கு தான் ....

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?....

காலேஜ் படிக்கும்பொது கதை கட்டுரை எழுதிய ஞாபகம் ..
இப்போதும் உண்டு என்று ஞாபகம் ..

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?.....

தப்பு நடக்கும்போது அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் மனோபாவம் எல்லோருக்கும் உண்டு ..
நல்லது செய்ய நினைக்கும்போது அதை தடுப்பவர்கள் ...

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?....

மனம்
எதுவும் தப்ப நடந்திடுமோ ... என்ற பயம் .
அப்புறம் , நல்லதே நடக்க !
இறைவனிடம் வேண்டுதல் ....

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலம்?...

. மலை சார்ந்த சுற்றுலா தலங்கள் பிடிக்கும் .
குற்றாலம் , ஊட்டி , கொடைக்கானல் ...

30. எப்படி இருக்கணும்னு ஆசை?....

நன்றாக உழைத்து , சம்பாதித்து , நாலுபேர் சொல்ல நன்றாக வாழவேண்டும் ...

31. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?....

அவங்க செய்யாத காரியத்தை செய்து , பாராட்டு வாங்குவது ..
சர்ப்ரைஸ்கள் கொடுப்பது, ஆச்சரியப்படுத்துவது...

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?....


வாழ்க்கையே ஒரு மாயை தான் . அதில் எவ்வளவு பிரதிபலிக்க வேண்டுமோ அவ்வளவு பிரகாசிக்கவேண்டும் ....

Post Comment

14 comments:

  1. தங்களைப்பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி

    ReplyDelete
  2. தங்கள் பதில்கள் மிகவும் அருமை,
    உங்களை பற்றி அறிய உதவும்.

    ReplyDelete
  3. //31. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?....

    அவங்க செய்யாத காரியத்தை செய்து , பாராட்டு வாங்குவது ..
    சர்ப்ரைஸ்கள் கொடுப்பது, ஆச்சரியப்படுத்துவது...//

    நேர்மையான அசத்தலான பதில்,

    ReplyDelete
  4. //
    20. கடைசியாகப் பார்த்த படம்?...

    பசங்க.//

    எப்பூடி...,

    ReplyDelete
  5. //14. பிடித்த மணம்?.....
    மல்லிகைப்பூ மணம்.....
    //

    ஓ ! மன்மத ராசாக்களுக்குதான் மல்லிகைப் பிடிக்குமாம் !
    :)

    //அப்புறம் தமிழ் மணம்..... எப்பூடி.......

    //
    அது !!!

    ReplyDelete
  6. //வாழ்க்கையே ஒரு மாயை தான் . அதில் எவ்வளவு பிரதிபலிக்க வேண்டுமோ அவ்வளவு பிரகாசிக்கவேண்டும் ..../

    நல்லாயிருக்குது! :))

    ReplyDelete
  7. // SUREஷ் (பழனியிலிருந்து) said...
    //31. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?....

    அவங்க செய்யாத காரியத்தை செய்து , பாராட்டு வாங்குவது ..
    சர்ப்ரைஸ்கள் கொடுப்பது, ஆச்சரியப்படுத்துவது...//

    நேர்மையான அசத்தலான பதில், ///

    இதுல ஒரு சந்தோஷம்

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி கோவி கண்ணன்

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி சென்ஷி அவர்களே ,

    ReplyDelete
  10. உங்களைப் பற்றி தெரிந்து கொண்டேன்

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்