
ரெட்டை ஜடை வயசு படம் நம்ம அஜித் தல நடித்து 1997 ல் வெளி வந்தது . இதுக்கு பின்னாடி ஒரு பெரிய கதையே இருக்கு . அந்த கதை என்னன்னு தெரிந்து கொள்வதற்கு முன்னாடி இந்த படத்தை பத்திய விமர்சனம் பாக்கலாமே ...
ரெட்டை ஜடை வயசு படம் நம்ம தல அஜித் , நம்ம பிகர் மந்த்ரா நடித்து சிவக்குமார் இயக்கத்தில் 1997 டிசம்பரில் வெளிவந்தது .
சும்மா துருதுருவென சுற்றித்திரியும் நம்ம தல அஜித் காஞ்சிப்பட்டு சேலைக்கட்டி .. என்று பாட்டுப்பாடி ஜாலியாக இருக்கிறவருக்கு மாமா கவுண்டமணி துணை . சும்மா தளதளவென இருக்கும் மந்த்ரா அஜித்துக்கு அத்தைப்பெண் .
இருவரும் விரும்புகின்றனர் . அப்போது அஜித்தின் அக்கா மாப்பிள்ளையான பொன்வண்ணனுக்கு கிட்னி பெயிலியர் . நம்ம தல தான் கிட்னி கொடுத்து காப்பாத்துகிறார் . அஜித்துக்கு தன் பெண்ணை கொடுக்க நினைக்கும் அத்தை , பின் வாங்குகிறார் .
தன் மகனுக்கு கிட்னி கொடுத்த மருமகனின் பெருந்தன்மையை எண்ணாமல் , ஒரு கிட்னி இல்லாததால் , தன் மகள் வாழ்வுக்கு பிரச்சனை வந்து விடுமோ என்றெண்ணி தன் உறவுக்கார பையனான அஜய் ரத்னத்துக்கு ( போலீஸ் அதிகாரி ) மணமுடிக்க நினைக்கிறார் .
தன் அத்தையின் மனதை மாத்தி , அஜய் ரத்னத்தின் சூழ்ச்சியை வென்று தல மந்த்ராவை கரம்பிடிக்கிறாரா என்பதை படம் பாக்காதவங்க வெள்ளித்திரையில் காண்க .
தல அஜித் இந்த படத்தில் ரொம்ப நல்லா நடித்திருப்பார் . காஞ்சிப்பட்டு சேலைக்கட்டி ... பாட்டில் ரொம்ப அனுபவித்து நடித்திருப்பார் . காமெடியும் ரொம்ப சூப்பர் . அதுவும் கவுண்டமணியும் அஜித்தும் அடிக்கும் லூட்டி செம கலாட்டா .
கவுண்டமணி தன் காமெடியால் படத்தை தூக்கி நிறுத்துகிறார் . ஹீரோவுக்கு இணையான ரோல் . ஏற்கனவே நேசம் படத்தில் அஜித்துடன் கலக்கியிருக்கும் இவர் இந்த படத்திலும் நல்ல காமெடி .
மந்த்ரா , சும்மா தளதளவென தக்காளி போல இருக்கிறார் . இட்டிலிக்கு மாவு ஆட்டயில ... பாட்டில் எல்லோரையும் ஆட்டுகிறார் .
அத்தையாக , வில்லியாக , நம்ம லதா , நல்ல முதிர்ந்த நடிப்பு ..
இசை தேவா என்று நினைக்கிறேன் . சரியா தெரியல .. தெரிந்தவங்க கொஞ்சம் சொல்லுங்க . காஞ்சிப்பட்டு சேலைக்கட்டி ... பாட்டில் மெலடியில் கலக்கல் . அதே மாதிரி இட்டிலிக்கு மாவு ஆட்டயில.. பாட்டில் மந்த்ராவோடு நம்மையும் ஆட்ட வைத்திருப்பார் .
கதை சுமார் என்றாலும் திரைக்கதையில் நம்மை ஒட்ட வைத்திருப்பார் இயக்குனர் சிவக்குமார் .
இட்டிலிக்கு மாவு ஆட்டயில ... என்று நான் ரசித்துக் கொண்டிருக்கும் போது என்னையும் ஒருத்தன் ஆட்டிப்புட்டான் .
**************************************நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போது ஒரு நாள் ,
ஒரு நாள் , அந்த நாளுக்குரிய பாடவேளைக்கு ஆசிரியர் வராததால் அன்று எங்களுக்கு ஃப்ரி ( விடுமுறை ) . ஹைய்யா ஜாலி என்று நாங்கள் அனைவரும் காலை ஷோ படம் பாக்க போகலாமுன்னு கிளம்பினோம் .
நெல்லை பார்வதியில் அஜித் நடித்த ரெட்டை ஜடை வயசு படமும் ரத்னாவில் அப்பாஸ் , சிம்ரன் நடித்த பூச்சூடவா படமும் போட்டிருந்தார்கள் . பாதி பேர் சிம்ரனை பாக்க போறோமுன்னு போயிட்டனுங்க . நானும் கொஞ்ச பேரும் மந்த்ராவை பார்க்க போனோம் . கேர்ள்ஸ் வீட்டுக்கு போயிட்டாங்க .
நண்பர்கள் கூட படம் பார்ப்பது என்றாலே ஒரே ஜாலி தான் . அதுவும் தல அஜித் , மந்த்ரான்னா கேட்கவா வேணும் . ஒரே ஆட்டம் பாட்டம் விசிலுன்னு தூள் பறந்தது . தியட்டரே அதிருமுல்ல ... ஒரே ஜாலி தான் .
இடைவேளையில் நண்பர்கள் அனைவரும் முறுக்கு , போண்டா , டீ சாப்பிட்டோம் .
படம் முடிந்து அனைவரும் கிளம்பினோம் .அப்போது பேண்ட் பாக்கெட்டில் கை விட்டபடி வந்த எனக்கு ஒரே அதிர்ச்சி . ஏன்னா என்னோட பர்ஸ்ஸை காணோம் . எனக்கு கதக் கதக் என்றிருந்தது . பர்ஸ்ஸில் என்னோட கல்லூரி அடையாள அட்டை , பாஸ் , பணம் என்று எல்லாம் இருந்தது . பர்ஸ்ஸை தேட ஆரம்பித்ததை பார்த்து நண்பர்கள் என்னவென்று கேட்டனர் .
நண்பர்களிடம் சொன்னேன் . அவர்களுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது . நாங்க தியட்டர் முழுவதும் தேடினோம் . பர்ஸ் கிடைக்கவே இல்லை . என்ன செய்வது என்று தெரியவில்லை .
அரை மனதுடன் பஸ் ஏறி வீட்டுக்கு வந்தேன் . மதியம் சாப்பிட்டு விட்டு நல்ல பிள்ளை மாதிரி புக் எடுத்து படித்துக் கொண்டிருந்தேன் .
ஒரு அரை மணி நேரம் கழிந்திருக்கும் , அப்போது பக்கத்து வீட்டில் ஒருவர் வந்து சேக் முகைதீன் வீடு எங்கே என்று விசாரித்துக் கொண்டிருந்தார் . நான் எழுந்து , வெளியே சென்று , நான் தான் சேக் மைதீன் , என்ன விசயம் என்று கேட்டேன் . அதற்கு அவர் , நீங்க காலையில் எங்கே சென்று இருந்தீங்க என்று கேட்டார் . நான் காலையில் பார்வதியில் ரெட்டை ஜடை வயசு படம் பார்க்க சென்றிருந்தேன் என்று சொன்னேன் .
உங்க பர்ஸ் தியட்டரில் கிடந்தது ; கொடுத்துட்டு போகலாமுன்னு வந்தேன் . எனக்கு என்ன சொல்வதுன்னே தெரியல .. அவர் கையை பிடித்து நன்றிகள் சொன்னேன் . சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த எங்கப்பா முழித்து என்னவென்று விசாரித்தார் .
பர்ஸ் கொண்டு வந்து கொடுத்தவர் , எங்கப்பாவிடம் உங்க பையன் பார்வதி தியட்டரில் பர்ஸ்ஸை தொலைத்து விட்டார் . அதை நான் எடுத்து , கொடுக்கலாமுன்னு வந்தேன் . எங்கப்பா உடனே அவருக்கு ரொம்ப நன்றி தம்பி என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் . நானும் எங்கப்பாவும் அவரை பாராட்டி அனுப்பி வைத்தோம் .
அவர் சென்றதும் எங்கப்பா , எங்கம்மாவிடம் உன் பையன் எங்கே போயிருக்கான் தெரியுமா , பார்வதி தியட்டருக்கு போயி பர்ஸ்ஸை தொலைத்திட்டு வந்திருக்கான் . ஒரு ஆள் வந்து கொடுத்துட்டு போறார் . ஏன் படம் பாக்க போனே ! காலேஜ் லீவுன்னா வீட்டுக்கு வர வேண்டியதுதானே ! . சொல்லிட்டு போனா என்ன .. படம் பாக்க போனுன்னா நான் விடவா மாட்டேன் . இனிமே இப்படி செய்யாதே என்ன என்று அப்பா சத்தமிட்டார் .
Post Comment