Pages

Tuesday, February 2, 2010

காதலின் வலி ...


காதலின் வலி ...

அந்த படமே சொல்லுதே
ஆயிரம் முறை வலிதனை
நீ என்னை விட்டு நீங்கினால்
போதாதா .. காயங்கள்
ஆறும் வரை எங்கே
செல்லும் இந்த பாதை ??.


விஷ ஜந்துக்கள்
என்னை தாக்கியதை விட‌
நீ தந்த வலி
இனிமையானதே
நான் உன்னை
காதலிப்பதாலோ !


என்னை விட்டு
போகாதே என் அன்பே !!.

பார்க்காமல் இருந்திருக்கலாம்
கணவனோடு உன்னை !
மறுபடியும் வலிதனை
தருகிறாயே இது நியாயமா ...


கேட்டாள் என்னவள் !
என்னவென்று சொல்வது
நம் காதலை !

என்னவளோ !!
ஐ லவ் யூ என்றாளே
இதோ நான்
உங்களுக்காக என்றாளே !!


எந்த எதிர்பார்ப்பும்
இல்லாத என்னவளின்
தூய காதலில்
என்னைத் தந்தேனே
அவளுக்காக ...!!

Post Comment

16 comments:

  1. பார்க்காமல் இருந்திருக்கலாம்
    கணவனோடு உன்னை !
    மறுபடியும் வலிதனை
    தருகிறாயே இது நியாயமா ...

    நளினமான வரிகள்.கவிதை அருமை.
    தங்களுக்கு ஏற்பட்ட அனுபவமோ.

    ReplyDelete
  2. அழகான ஆழமான வரிகள்.

    ஒவ்வொரு வரியும் வலியுடனே பயணிக்கிறது.

    ReplyDelete
  3. அழகான ஆழமான வரிகள்.

    ஒவ்வொரு வரியும் வலியுடனே பயணிக்கிறது.

    ReplyDelete
  4. தல... இப்பத்தான் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்... அதுக்குள்ள இப்படி ஒரு கவிதையை எழுதி அழவச்சுருவீங்கபோல இருக்கே....

    ReplyDelete
  5. //
    விஷ ஜந்துக்கள்
    என்னை தாக்கியதை விட‌
    நீ தந்த வலி
    இனிமையானதே
    நான் உன்னை
    காதலிப்பதாலோ !
    //
    அப்ப பாம்பு கடிச்சா சாகமாட்டோமா ?

    ReplyDelete
  6. உண்மையோ உணர்வோ மனதின் பாரம் எழுத்துக்களால் நிரப்பப்படுகிறது ஸ்டார்ஜன்.நல்ல கவிதை.

    ReplyDelete
  7. அருமையான கவிதை

    யதார்த்தமான உண்மையும் கூட ..

    நல்லாருக்கு தலைவரே ...

    ReplyDelete
  8. காதல், வலி... கவிதை நன்று..

    ReplyDelete
  9. ஹ்ம்ம். நல்லா இருக்கு ஷேக்மைதீன்.

    ReplyDelete
  10. அனுபவிச்சவிங்களுக்குதான் தெரியும் வலி...

    ReplyDelete
  11. வாங்க

    அபுல் பசர் @ இது என் அனுபவமல்ல , காதலின் அனுபவம்

    அக்பர் @ காதலின் வலி

    நாஞ்சில் பிரதாப் @ இதுக்கே பயந்தா எப்படி

    நசரேயன் @ அப்டியா

    ஹேமா @ உண்மைத் தான் ஹேமா

    கட்டபொம்மன் @ நன்றி

    T.V.Radhakrishnaந்.. @ ரொம்ப நன்றி சார்

    க.பாலாசி @ ரொம்ப நன்றி

    S.A. நவாஸுதீன் @ ரொம்ப நன்றி

    அண்ணாமலையான் @ அனுபவம் ரொம்ப பயங்கரம் .

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

    ReplyDelete
  12. நமது தேசத்துக்கு வாங்க

    இது கட்டபொம்மனின் ஆணை .

    :-)))

    ReplyDelete
  13. கெளம்பிட்டாரய்யா ........... கெளம்பிட்டாரு... :))

    ReplyDelete
  14. காதல் வலி தருவதில்லை!

    ReplyDelete
  15. வாங்க

    கட்டபொம்மன் @ உத்தரவு மன்னா

    துபாய் ராஜா @ எங்கே கிளம்பிட்டாரு ..

    V.Radhakrishnan @ உண்மை உண்மை

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்