Pages

Thursday, January 7, 2010

என் செல்லமே ...


சத்தம் போடாதே
என் செல்லம் வரும்
நேரமிது


நீ அழுது எங்களை
சந்தோசப்படுத்தினாயே
அதை மறக்க முடியுமா !!


நான் அருகில் வந்ததும்
உன்னிடம் உதைபடும் ஆளானேன்
நான் எதிர்பாராத நேரத்தில்
சுர்ரென்று பன்னீர் தெளித்தாயே !!


அந்த வேளையில் சுற்றி
இருந்தவர்கள் _ ஏய் நீ
அதிர்ஷ்டக்காரன்ப்பா என்றார்களே !!


உன் செல்ல மொழிகளை கேட்க
நான் அழைத்த போது
என்னவளின் முகம் நோக்கினாயே
நான் யார் என்று தெரிந்ததும்
என்னோடு இணைந்தாயே !!


நீ வரும் அழகை
ரசிக்காதோர் யாரும் உண்டோ ?
பாட்டுப்பாட வைத்து
தூங்குவது நீயல்லவா ..
இரவில் உன் சத்தம்
கேட்டு ஆனந்தம் அடைந்தேனே !!



நான் உன் ரசிகனானே
உன் சேட்டைகளை கண்டு !
எனக்கு தெரியாத
கேள்வியெல்லாம் கேட்டு
நான் பதில் சொல்ல திணறியதை
கண்டு ரசித்து ரசித்து சிரித்தாயே !!!


என் செல்லமே ...


******************************************

Post Comment

24 comments:

  1. கவிஞர் சேக் மைதீன் வாழ்க.

    கலக்கல் கவிதை.

    ReplyDelete
  2. இதை எழுதி எங்களை சந்தோஷ படுத்திவிட்டாயே..

    ReplyDelete
  3. கவிதையில் உங்கள் பாசம் பொங்கி வழியுது ஷேக் மைதீன். அழகான கவிதை

    ReplyDelete
  4. இன்று குழந்தைகள் நினைவு தினம் போல உங்கள் கவிதையும் குழந்தையின் கருவோடு அழகாயிருக்கு.நிறைந்த பாசம் கொட்டி எழுதியிருக்கீங்க.
    வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  5. எனக்கு தெரியாத
    கேள்வியெல்லாம் கேட்டு
    நான் பதில் சொல்ல திணறியதை
    கண்டு ரசித்து ரசித்து சிரித்தாயே !!!


    அருமையாகவுள்ளது நண்பரே..

    ReplyDelete
  6. குழந்தை மீதான உங்கள் நேசம் உணரமுடிகிறது சேக்.

    ReplyDelete
  7. வாங்க அக்பர் வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  8. வாங்க Sangkavi வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  9. கலையரசன் சந்தோசம் தான் வாழ்க்கை

    வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  10. வாங்க S.A. நவாஸுதீன் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  11. வாங்க ஹேமா வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  12. வாங்க முனைவர்.இரா.குணசீலன் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  13. வாங்க செ.சரவணக்குமார் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  14. வாங்க T.V.Radhakrishnan வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  15. சேக் நல்லா எழுதியிருக்கீங்க...!

    ReplyDelete
  16. வாங்க வசந்த் , வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  17. ரொம்ப பிடிச்சிருக்கு மக்கா.

    ReplyDelete
  18. வாங்க பா ரா சார்

    வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  19. குழந்தைக்கு பிறந்த நாளா ஸ்டார்ஜன்

    நல்லா இருக்கு கவிதை

    ReplyDelete
  20. வருகைக்கு நன்றி தேனம்மை

    ReplyDelete
  21. அருமையா எழுதியிருக்கிங்க ஸ்டார்ஜன்.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்