Pages

Sunday, January 10, 2010

காதல் ரோஜாவே ... ( இதுவும் ஒரு காதல் கதை )

என் இனிய நண்பர் சங்கர் தன் வலைப்பதிவில் ஒரு கதை எழுதி அதற்கு கவிதையாக எழுத சொல்லி இருந்தார் .


**************************************


ரதி தேவியே என்
காதல் நாயகியே
என்று பாடினேன்
உன்னைக் கண்டு !!


காதல் டூயட் பாடி பாடி
உலக காதலர்கள்
வரிசையில் நாமும் உண்டே !!


கையில் ரோஜாவுடன் உன்னை
சந்திக்கும் வேளையில்
அம்பினால் தாக்கினாயே !
எனக்கு மாப்பிள்ளை
பாத்திருக்கிறார் அப்பா என்று !!


என்ன சொல்லி உன்னை
மாத்தினார் உன் அப்பா
எனக்கு தெரியாதே _ அதையே
நானும் செய்திருப்பேனே !!


காதல் புனிதமானது என்று
காதலிக்கும் வேளையில்
தெரிந்த எனக்கு _ உன்
அப்பாவின் வாக்கு தான்
புனிதமானது என்று தெரியாமல்
போனதே எனக்கு !!


என்ன தான் இருந்தாலும்
என் மனம் கேட்கவில்லையே
எங்கிருந்தாலும் வாழ்க என‌
வாழ்த்த சொல்லுதே !!!


**************************************


சங்கரின் கதையை கேட்க ...

நன்றி சங்கர் .

Post Comment

15 comments:

  1. நிஜமாவே அப்பாவின் வாக்கு புனிதமானதுதான் ஸ்டார்ஜன்

    ReplyDelete
  2. பொண்ணு மீ த எஸ் சொல்லிட்டா பிறகு

    //காதல் டூயட் பாடி பாடி
    உலக காதலர்கள்
    வரிசையில் நாமும் உண்டே !!//

    வரிகள் வராது ! :)

    ReplyDelete
  3. நல்லா இருக்கு. கதையையும் படிச்சிடுறேன்.

    அன்பே! - அவன்

    அப்பா! - அவள்

    போப்பா! - அப்பாவும் மகளும்

    ReplyDelete
  4. இருவரின் கவிதையும் ரொம்ப நல்லாயிருக்கு.

    ReplyDelete
  5. மேடமே சொல்லிட்டாங்க அப்பாவின் வாக்கு புனிதமானதுன்னு பிறகு பேசுறதுக்கு என்ன இருக்கு.

    ReplyDelete
  6. வாங்க தேனம்மை அக்கா

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  7. வாங்க ஆயில்யன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  8. வாங்க T.V.Radhakrishnan

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  9. வாங்க நவாஸ்

    ரொம்ப நல்லாருக்கு சிம்பிளா , 3 வரியில்

    ReplyDelete
  10. வாங்க அக்பர் , நலமா

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  11. வாங்க தல டாக்டர் , நலமா

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  12. அவளிடம் காதல் இருக்கவில்லை .....சும்மா இருந்த என்னை பேசி பேசி நீ மாத்தி விடாய் என்கிறாள். இந்த காலத்தில் எங்கே உண்மைக்காதல்...வெறும் ஈர்ப்பு மாத்திரம்....வசதி பார்த்து அல்லவா வருகிறது காதல். நான் சொல்வது தப்பா?

    ReplyDelete
  13. ரொம்ப சரியா சொன்னீங்க நிலாமதி

    வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்