Pages

Sunday, January 31, 2010

உன்னை நேசிக்கிறேன்

கவியில் ஆடும்
உன் அழகே
என்னை ம‌யக்கையில்
நானோ எட்டி நின்றேன்
உன்னை ரசிக்க !!

ஒரு தடவை தரிசனம்
தருவாயா என் அன்பே
வரும் வழியில் ஆயிரம்
தடைகளும் தூசியாகுமா ..
உன் தரிசனம் கிடைக்குமா
எட்டி நின்று தான் உன்னை
காண வேண்டுமாம்
சொல் என்னுயிரே !!! .

உன் மேல் உள்ள
காதல் அவர்களுக்கு
தெரிய வாய்ப்பில்லையே
ஆயினும் நான்
ரசித்தேனே உன்னை
ஆனந்தமாய் யாரும்
அறியாமலே !!
உன் இடத்துக்கு
நான் வராமலே !! .

என்னருகில் உன்னை
கண்டேனே அதுவே
எனக்கு பேரின்பமானதே
யாரும் அனுபவிக்க
வாய்ப்பில்லையே
இப்படி ஒரு
தரிசனத்தை !!!


என்னை பாட
வைத்து கேட்டாயே
உன்னை பத்தி
பாடத்தான் தெரியும் எனக்கு
வேறொன்றும் நான்
அறியேனே !!


நான் போகும் அழகே
கண்டு ரசித்தாயே !!
நான் தைரியமானேனே
நீ என்னோடு
இருக்கையிலே !!! .


என்னில் ஒவ்வொரு
அசைவிலும்
என்னுள் கலந்தாயே
இயங்கினேன்
வெற்றியை நோக்கி ...


நான் இன்னும் பல
சாதனைகள் படைப்பேன்
நீ தரும் நம்பிக்கையிலே ...


உன்னை நேசிக்கிறேன்
என் இறைவா ...
நேர் வழியில்
என்னை செலுத்துவாயே ....

Post Comment

20 comments:

  1. கவிதை அருமை.

    அன்பை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. //உன்னை நேசிக்கிறேன்
    என் இறைவா ...
    நேர் வழியில்
    என்னை செலுத்துவாயே .... //


    அட... இறைவன் மேலுள்ள அன்பு அற்புதம் ஸ்டார்ஜன்

    ReplyDelete
  3. //////நான் இன்னும் பல
    சாதனைகள் படைப்பேன்
    நீ தரும் நம்பிக்கையிலே ...


    உன்னை நேசிக்கிறேன்
    என் இறைவா ...
    நேர் வழியில்
    என்னை செலுத்துவாயே ....///////

    நல்லா இருக்கு ஷேக்மைதீன்.

    ReplyDelete
  4. //உன் மேல் உள்ள
    காதல் அவர்களுக்கு
    தெரிய வாய்ப்பில்லையே
    ஆயினும் நான்
    ரசித்தேனே உன்னை
    ஆனந்தமாய் யாரும்
    அறியாமலே !!
    உன் இடத்துக்கு
    நான் வராமலே !! .//

    என்னை கவர்ந்த வரிகள்....வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. காதலும் அன்பும் கலந்த கவியம்போல ஒரு கவிதை.
    அற்புதம் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  6. கவிதையில் அன்பையும் இறை நம்பிக்கையும் காண முடிகிறேதே !!

    கவிதை ரொம்ப அருமை .

    வரிகளும் கவி பாடுதே !

    ReplyDelete
  7. வாங்க
    அக்பர்
    தேனம்மை அக்கா
    S.A. நவாஸுதீன்
    நாடோடி
    ஹேமா
    கட்டபொம்மன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  8. ரொம்ப நல்லாயிருக்கு சேக்மைதீன்.

    ReplyDelete
  9. கவிதை சொன்ன விதம் அருமை.வரிகள் நளினம்.அன்பை சொன்ன விதம் புதுமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வாங்க

    அத்திரி
    செ.சரவணக்குமார்
    அபுல் பசர்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  11. எதையோ சொல்லி கடைசியில் ட்விஸ்ட் கொடுத்துட்டீங்க தல ரசித்தேன்

    ReplyDelete
  12. அட அட அட ட்விஸ்டோட முடிச்சுட்டீகளே அசத்தல் ஷேக்....!

    ReplyDelete
  13. சொக்கா இருந்திச்சு பா...

    ReplyDelete
  14. உன்னை நேசிக்கிறேன்
    என் இறைவா ...
    நேர் வழியில் ...

    அழகு வரிகள்

    ReplyDelete
  15. வாங்க

    அபுஅஃப்ஸர்
    பிரியமுடன்...வசந்த்
    ஜாக்கி சேகர்
    Sangkavi

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  16. அது... நான் இந்தகவிதையையே யூஸ் பண்ணிக்கறேன்...

    ReplyDelete
  17. //நான் போகும் அழகே
    கண்டு ரசித்தாயே !!
    நான் தைரியமானேனே
    நீ என்னோடு
    இருக்கையிலே !!!//

    கவிதை அருமை....

    ReplyDelete
  18. வாங்க

    Sangkavi

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்