Pages

Sunday, March 28, 2010

கர கர ... மொறு மொறு ...

அன்புமிக்க நண்பர்களே!!

இதோ வந்துட்டேன் உங்கள் ஸ்டார்ஜன் நிலா அதுவானத்து மேல யில். கடந்த ஒரு வாரகாலமாக நான் வலைச்சரத்தில் ஆசிரியராக பணிபுரிந்தேன். எனக்கு வலைச்சரத்தில் வாய்ப்பு வழங்கிய திரு. சீனா அய்யாவுக்கு என் நன்றிகள்.
இந்த ஒருவாரமும் ஆசிரியர் பணியை திறம்பட செய்து முடித்திருப்பேன் என்று நினைக்கிறேன். வலைச்சரத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பு அமைய பெற்றால் இதேபோன்று செயல்படுவேன்.

**************************************

இந்த ஒருவாரமும் என்னுடைய பக்கத்துக்கு வருகைதந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள். மேலும் வலைச்சரத்துக்கு வருகைதந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றிகள். கடந்த 2 நாட்களாக எனக்கு உடல்நலம் சரியில்லாததால் பல நண்பர்கள் நலம் விசாரித்தனர். நலமாக உள்ளேன். உங்கள் அன்புக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

சென்றவாரம் கேள்விக்கு உங்கள் பதில் 4 பகுதியில் நிறையபேர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி.

கேள்வி 4:

தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க பாடுபடுவது அரசாங்கமா... இல்லை மக்களா....


இதற்கு, கேள்விக்கு என் பதில் 4 வெளியிட தாமதமாகிவிட்டது. எனினும் என் கருத்தினை பகிர்ந்து கொள்கிறேன். தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க அரசு முயற்சிக்க வேண்டும், மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க அரசு முன்வரவேண்டும்.

மக்களும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க அரசின் திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். தங்களை சுற்றியுள்ள சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும். கடந்த அரசு கொண்டுவந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் உள்ள தொட்டிகள் இன்று என்ன ஆனது என்றே தெரியவில்லை. மக்களுக்கே வெளிச்சம்.

எனவே மக்கள் அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்து நீர்மட்டம் உயர நம்மால் ஆன முயற்சிகளை தொடரவேண்டும்.


**************************************


என் அன்புள்ள சகோதரி மலிக்கா அவர்கள் எனக்கு சன்ஷைன் அவார்ட் கொடுத்துள்ளார். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த விருதினை அன்போடு இவர்களுக்கு வழங்குகிறேன்.

ஸாதிகா மேடம்

மின்மினி

சேட்டைக்காரன்

டி.வி.ராதாகிருஷ்ணன் சார்

ஜெகநாதன்


******************************************

நேற்று சென்னையில் பதிவர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்று நம்முடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் பதிவர் சந்திப்பு கூட்டங்கள் அவசியமானதே.. அப்போதுதான் ஆரோக்கியமான நல்லுறவுகள் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், இன்று காலையில் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட சில நண்பர்களின் வலைப்பூக்களை படிக்க நேர்ந்தது. அவர்கள் கூறி இருப்பது : இந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இல்லை, ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

ஏன், என்ன நடந்தது என்று தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் நம்முடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளணுமே தவிர திணிக்க கூடாது. அதுதான் ஆரோக்கியமான நடைமுறை; நல்லுறவு பாலமாக அமையும் என்பதில் சந்தேகம் உண்டா சொல்லுங்கள்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.


,

Post Comment

36 comments:

  1. வாங்க ஆசிரியரே,
    கர கர நல்லா, மொறுமொறுப்பா இருக்கு.

    ReplyDelete
  2. வலைச்சரம் கலக்கல்.

    ‍‍‍‍====

    பலரது பதிலும் அதுதான்

    ====

    அவார்டுக்கு வாழ்த்துகள். பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

    ===

    கூடிய விரைவில் பதிவர் குழுமம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

    கரகர மொறுமொறு டேஸ்ட் சூப்பர்.

    ReplyDelete
  3. என்ன குரு உடம்பு சரியில்லையா ? இப்ப எப்படி இருக்கீங்க... ?
    வலைச்சரத்துல பின்னீட்டிங்க போல...நடத்துங்க நடத்துங்க

    ReplyDelete
  4. வ‌லைச்ச‌ர‌த்தில் ந‌ல்லா க‌ல‌க்குனீங்க‌ ஸ்டார்ஜ‌ன்..விருதுக்கு வாழ்த்துக்க‌ள்.

    ReplyDelete
  5. "கர கர ... மொறு மொறு ..." - கலக்கல்.

    ReplyDelete
  6. விருதுக்கு நன்றி ஸ்டார்ஜன்

    ReplyDelete
  7. வலைச்சரத்தில் சிறப்பாக ஒரு வாரம் பணியாற்றியதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். உங்களுக்குக் கிடைத்த விருதை எங்களுடன் பகிர்ந்தளித்ததற்கு நன்றிகள்! இப்போது உடல்நிலை தேவலாமா? கவனம் அண்ணே!

    ReplyDelete
  8. அருமையான பதிவு..,

    வலைச்சரத்தில் கலக்கிட்டீங்க ஸ்டார்ஜன்.

    எனக்கும் விருது கொடுத்து ஊக்குவித்ததுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. வலைச்சரத்தில் ஆசிரியர் பணியில் அருமையாக செயல் பட்டு,இப்பொழுது விருது வாங்கி,அதனை பெற்றவர்களில் நானும் ஒருவள் என்ற முறையில் மகிழ்ச்சியுடன் நன்றியை சமர்ப்பிக்கிறேன் ஸ்டார்ஜன் சார்

    ReplyDelete
  10. அருமையான பதிவு.., வலைச்சரத்தில் பின்னிட்டீங்க ஸ்டார்ஜன்.

    விருது பெற்றதுக்கு மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்

    ReplyDelete
  11. வலைச்சரத்தில் கலக்கிட்டீங்க...

    விருதுக்கு வாழ்த்துகள்.

    தண்ணீர் பற்றி உங்கள் கருத்துக்களை மிக அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  12. வலைச்சரத்தில் சிறப்பாக ஒரு வாரம் பணியாற்றியதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். விருது பெற்றதுக்கு மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்

    ReplyDelete
  13. சென்னை பதிவர் சங்கம் வரைக்கும் அலசறீங்களே மாம்ஸ்? ​பெரியஆளுதான்.

    Summer-க்கு தகுந்த மாதிரி ஒரு இளநி விருதோ இல்லே நீர்மோர் அவார்டோ அட ஒரு தென்றல் விருதோ ​கொடுத்திருக்கலாம் :)

    Sun Shine.. ம்.. இதுவும் நல்லாத்தான் இருக்கு.. வாங்கியதுக்கு பாராட்டுகள்.. ​பகிர்ந்ததற்கு மனமார்ந்த நன்றிகள்!!

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. வாங்க வாங்க சைவகொத்துப்பரோட்டா

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

    ReplyDelete
  16. வாங்க அக்பர்

    வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  17. வாங்க சிஷ்யா

    உடம்பு இப்போ பரவாயில்லை.., நன்றி ஆறுதல் சொன்னதுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  18. வாங்க ஸ்டீபன்

    வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  19. விருதுக்கு வாழ்த்துக்க‌ள் ஸ்டார்ஜ‌ன்..

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் விருதுக்கு,மேலும் பெற....

    ReplyDelete
  21. வணக்கம் நண்பரே!
    இப்பொழுது உடல் நலம் எப்படி உள்ளது ?

    ReplyDelete
  22. வாங்க துபாய்ராஜா @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    வாங்க டிவிஆர் சார் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  23. வாங்க சேட்டைக்காரன் @ வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.., உடம்பு இப்போ பரவாயில்லை.. நலமாக உள்ளேன்...

    வாங்க மின்மினி @ வாழ்த்துகளுக்கு நன்றி.. மேலும் சிறப்பாக எழுத வாழ்த்துகள்.

    வாங்க ஸாதிகா @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.. தொடர்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நனறி.

    வாங்க கட்டபொம்மன் @ நன்றி..

    ReplyDelete
  24. வாங்க ராகவன் அண்ணே!!

    வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  25. வாங்க ஜெஸ்வந்தி

    வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  26. வாங்க மாப்ள ஜெகா..

    இளநீ வாங்க ஆள் அனுப்பி இருக்கேன்.. :))

    வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  27. வாங்க திவ்யாஹரி

    வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  28. வாங்க இர்ஷாத்

    வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  29. வாங்க பனித்துளி சங்கர்

    உடம்புக்கு பரவாயில்லை.., நலமாக உள்ளேன். நன்றி ஆறுதல் சொன்னதுக்கு,

    வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  30. வலைச்சரத்துக்கும், விருதுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. வாங்க ஸ்ரீராம்.

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  32. வ‌லைச்ச‌ர‌த்தில் க‌ல‌க்குனீங்க‌ ஸ்டார்ஜ‌ன்..விருதுக்கு வாழ்த்துக்க‌ள்.

    ReplyDelete
  33. வாங்க குமார்

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  34. வலைச்சரத்தில் செம அசத்தல்.

    விருது வாங்கியமைக்கும் அதைபகிர்ந்து கொடுதமைக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    தண்ணீர்பற்றிய கருத்துகள் மிக அருமை..

    ReplyDelete
  35. விருதுக்கு வாழ்த்துக்கள்... உங்களுக்கும்,உங்களால் விருது பெற்ற மற்றவர்களுக்கும்!

    ReplyDelete
  36. விருது பெற்ற உங்களுக்கும், மற்ற அனைவருக்கும் வாழ்த்துகக்ள்.
    வாங்க என் பக்கமும் வந்து நான் கொடுக்கும் விருதையும் ஏற்று கொள்ளுங்கள். வலைச்சரத்தில் ஆசியர் பணி சும்மா தேடி தேடி எல்லரையும் அறிமுக படுத்தினீங்க.

    உங்கள் மற்ற பதிவுகளை நேரம் கிடைக்கும் போது வந்து படித்து கருத்து தெரிவிக்கிறேன்,

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்